குறிச்சொற்கள் வீரான் குட்டி

குறிச்சொல்: வீரான் குட்டி

வீரான் குட்டி கவிதைகள்

பார்க்காததுபோல... யாரும் பார்க்கவில்லையென்பதுபோல நீ செய்துகொண்டிருபவற்றை எல்லாம் நான் அறிகிறேன் யாரும் கேட்கும் மொழியில் என்னால் அதைச் சொல்ல முடியவில்லை என்ற வருத்தம்தான் விசாரணை அவ்வளவு கிட்டத்தில் வந்த உதடுகள் வீணாக்கிய முத்தங்களைப்பற்றி கடவுள் கேட்கும்போது நான் என்ன சொல்வேன்? நீதான் என்ன சொல்வாய்? காதல் இல்லாதபோது காதல் இல்லையேல் உடலைப்போல் கடுமையான வேறு மரம் இல்லை உதடுகளால் எத்தனை செதுக்கினாலும் சிற்பமாவதில்லை காத்திருப்பு ஊட்டிக்குச் செல்லும் மலைப்பாதையில் நின்றிருக்கும்...

வீரான் குட்டி கவிதைகள்

பூத்தபடி ======= சமவெளியின் பசுமைநடுவே இலைகாய்ந்து நிற்கும் மரமே பூத்துநிற்கிறாயென்று தூரத்தே நின்றஒருவன் எண்ணி நெஞ்சில் பிரதியெடுத்துக் கொண்டுசென்றிருக்கிறான் உன்னை. மரணம்வரை அவனிலிருப்பாய் பூத்தபடியே நீ. அவனிலிருந்து கேட்டு பிறரும் மேலும் பூக்களுடன் உன்னைக் காண்பார்கள். பூக்காலமாக உன்னை ஒருவன் வரையலாம். கவிஞனும் எழுதலாம் சமவெளியின் பசுமைநடுவே இலைகாய்ந்து நிற்கும் மரமே ஒருநாளும் காயமாட்டாய் நீ! **************** வருகை ====== வெயில் நீரில் போல நீ என்னில் புகுந்தாய். பனி இலையிலிருந்து போல போகவும் போனாய் எனினும் நன்றியுடையேன் உனக்கு. இந்தத்...