குறிச்சொற்கள் விருஷசேனன்

குறிச்சொல்: விருஷசேனன்

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-52

பத்தாவது களத்தில் அமர்ந்திருந்த கும்பீரர் என்னும் சூதர் சுரைக்குடுக்கையின் மேல் கட்டிய மூங்கிலில் முதலைத் தோல் வார்ந்து உலர்த்தி இழுத்துக் கட்டி உருவாக்கிய மூன்று இழை குடயாழை மடியிலமர்த்தி அதை வலக்கையின் சிறுவிரலாலும்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-51

கர்ணனும் அர்ஜுனனும் ஒருவரையொருவர் மீண்டும் அம்புமுனைகளால் சந்தித்துக்கொண்டனர். கால மடிப்புகளில் மீளமீள அவ்வாறு சந்தித்துக்கொண்டே இருப்பதைப்போல இருவரும் உணர்ந்தனர். நூற்றுக்கணக்கான சந்திப்புகளில் ஒவ்வொரு முறையும் உணர்ந்ததுபோல் அது அங்கு தொடங்கவில்லை, எவ்வண்ணமும் அங்கு...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-48

படைகள் பெருகி எழுந்து தாக்கிய கணத்தில் விருஷசேனன் இயல்பாக வானை அண்ணாந்து நோக்கினான். அங்கே அனல் பற்றி எரிவதைக் கண்டு ஒருகணம் அவன் உள்ளம் திடுக்கிட்டது. கானாடலுக்கும் வேட்டைக்கும் செல்லும்போதெல்லாம் காட்டெரி குறித்த...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-47

சல்யர் தன்னை மிகையாக காட்டிக்கொள்வதை விருஷசேனன் நோக்கினான். கைகளை வீசி உரத்த குரலில் “யாரங்கே? பின்சகடத்தின் ஆரத்தை இன்னொருமுறை பார்க்கச் சொன்னேனே? அடேய் சம்புகா, நான் வந்தேனென்றால் குதிரைச்சவுக்கு உனக்காகத்தான்” என்று கூவினார்....

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-46

மென்மழை நின்றுகொண்டிருந்த குருக்ஷேத்ரக் களத்தில் கௌரவப்படைகள் அணிவகுத்து சூழ்கை அமைத்தன. படைக்கலங்களும் தேர்களின் உலோகமுகடுகளும் ஒளியென்றும் மெல்லிருளென்றும் மாறி மாறி விழிமாயம் காட்டிய நீர்த்திரைக்குள் மின்னி திரும்பின. புரவிகளின் குளம்படி ஓசைகளும் சகட...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-44

கர்ணன் கவசங்களை அணிந்துகொண்டிருந்தபோது சற்று அப்பால் சல்யர் குளம்படிகள் விசையுடன் ஒலிக்க புரவியில் வந்து கால்சுழற்றி இறங்கினார். அவன் விழிதூக்கி நோக்க கையிலிருந்த கடிவாளத்தை ஓங்கி நிலத்தில் வீசிவிட்டு பதற்றத்தில் நிலையழிந்து அங்குமிங்கும்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-43

குருக்ஷேத்ரத்திற்கு தென்கிழக்காக செறிந்த காட்டிற்குள் அமைந்த சிறு ஊற்றுக்கண் சூரியதாபினி என்று அழைக்கப்பட்டது. அங்கு அரிதாக சில நிமித்திகர்களும் விண்ணுலாவியை வழிபடும் யோகியரும் ஒழிய பிறர் எவரும் செல்வதில்லை. அவ்வாறொன்று அங்கிருப்பது நிமித்த...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-25

சாத்யகி அம்புகளைத் தொடுத்தபடி கர்ணனை நோக்கி சென்றான். அவன் செல்வதற்குள் கர்ணனும் திருஷ்டத்யும்னனும் போரில் முழுமையாக தொடுத்துக்கொண்டுவிட்டிருந்தார்கள். பாஞ்சால விற்படைவீரர்கள் திருஷ்டத்யும்னனைச் சூழ்ந்து பின்பிறை அமைக்க அவர்களை கர்ணனின் மைந்தர்கள் தடுத்து சிதைத்து...

“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-9

அதிரதனின் இல்லத்திலிருந்து தன் அரண்மனை நோக்கி செல்கையில் தேரில் உடனிருந்த விருஷசேனனும் விருஷகேதுவும் கர்ணனிடமிருந்த ஆழ்ந்த அமைதியை அறிந்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் விழிநோக்கிக் கொண்டார்கள். சம்பாபுரியின் தெருக்கள் உச்சிவெயிலுக்கு அடங்கி ஓயத்தொடங்கிவிட்டிருந்தன....

“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-8

சூரியவட்டத்தில் ஆடுஅமை களத்தில் தன் கிணைப்பறையை மீட்டியபடி முதல் சூதரான அஜர் பாடினார். தோழரே, விஜயத்துடன் களம் நின்று பொருதும்பொருட்டு புறப்படும்போது அங்கநாட்டரசர் கர்ணன் தன் அன்னையாகிய ராதையை பார்க்கும்பொருட்டு சென்றார். அவரது...