குறிச்சொற்கள் விருத்திரன்

குறிச்சொல்: விருத்திரன்

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 46

இந்திரனின் படைகள் அமராவதியைச் சூழ்ந்து அதன் கோட்டைகளைத் தாக்கி எட்டுவாயில்களையும் உடைத்து உட்புகுந்தன. கோட்டையென அமைந்த பெரும்பாறைகள் நிலைபெயர்ந்துச் சரியும் அதிர்வில் தன் கையிலிருந்த மதுக்கிண்ணத்தில் சிற்றலையெழுந்ததைக் கண்டுதான் அமராவதி வீழ்ந்தது என்று...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 45

அமராவதிக்கு மீளும் வழியெல்லாம் திரும்பத்திரும்ப விருத்திரன் வஞ்சினத்தையே உரைத்துக்கொண்டிருந்தான். செல்லும் வழியெல்லாம் மதுஉண்டு நிலைமறந்து சிரித்தும் குழறியும் பித்தர்கள்போல் பாடியும் நடனமிட்டும் கிடந்த தேவர்களைப் பார்த்தபடி சென்றான். ஒரு நிலையில் நின்று ஆற்றாமையுடன்...

வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 44

பன்னிரண்டு ஆண்டுகள் நடந்த அந்த சலியாப் போரில் முதற்கணம் முதலே நுண்ணளவுகளோ நுண்மைகொள்சித்தமோ தொட்டெடுக்க முடியாத காலத்துளி ஒன்றின் இடைவெளி இருந்தது. அதை கடல்களும் அறியவில்லை. எதிர்நின்ற புற்றுகளும் அறியவில்லை. வருணனின் படைகள்...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 43

சதகூபம் என்னும் காட்டில் கங்கையின் கரையில் தன் முன் அமர்ந்திருந்த இந்திரனிடம் நாரதர் சொன்னார் “அரசே, வல்லமைகொண்ட ஒருவனை வெல்ல சிறந்த வழியென்பது அவனுக்கு நிகரான வல்லமைகொண்ட ஒருவனை எவ்வண்ணமேனும் நம்முடன் சேர்த்துக்கொள்வதே....

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 42

பொன்வண்டென உருக்கொண்டு அமராவதியிலிருந்து தப்பி ஓடிய இந்திரன் சதகூபம் என்னும் பெருங்காட்டின் நடுவே ஆயிரத்தெட்டு கிளைகளுடன் நின்றிருந்த பிரபாவம் என்னும் ஆலமரத்தின் உச்சியில் இருந்த ஆழ்ந்த பொந்தை தன் வாழிடமாகக் கொண்டான். அவனுடன்...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 41

சண்டன் “மும்முகப் பிரஜாபதியை நான்முகப் பிரஜாபதி வென்றதே கதை என்றறிக!” என்றான். முழவை மீட்டி “மும்முகன் அறியாதது ஒரு திசை மட்டுமே. அது வலமில்லை இடமில்லை பின்னாலும் இல்லை. தன் முன்பக்கத்தை. தன்னை...