குறிச்சொற்கள் பூரிசிரவஸ்

குறிச்சொல்: பூரிசிரவஸ்

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-2

குருக்ஷேத்ரத்தின் தெற்குக்காட்டில் அந்தி அணைந்த பின்னர் சிதைச்சடங்குகள் தொடங்குவதற்கான முரசொலி எழத்தொடங்கியதும் கௌரவப் படைகள் ஒலியடங்கின. குருதிமணம் கொண்ட காற்று மெல்லிய சுழல்களாக கடந்துசென்றது. புண்பட்டவர்களை மருத்துவநிலைகளுக்கு கொண்டு சென்று சேர்த்துவிட்டு திரும்பிச்சென்ற...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-68

சோமதத்தரின் தேர் விசைகொண்டு களமுகப்பு நோக்கி சென்றது. பூரி அதைத் தொடர்ந்து தன் தேர் செல்லும்படி ஆணையிட்டான். சோமதத்தரின் தேர் போரிட்டுக்கொண்டிருந்தவர்களை பிளந்து வகுந்தபடி சென்றது. பாம்புசென்ற புல்விரிவுத் தடம்போல தேரின் பாதை...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-56

பூரிசிரவஸ் அர்ஜுனனை அம்புகளால் எதிர்க்கத் தொடங்கியபோதே திருஷ்டத்யும்னன் ஒன்றை உணர்ந்தான், ஒவ்வொருவரும் தங்கள் ஆழுளத்து எதிரியை நேரிலும் கற்பனையிலும் சந்தித்து போரிட்டுப் போரிட்டு தங்கள் திறன்களை தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் முதன்மை எதிரி அளவுக்கே ஒவ்வொருவரும்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-55

பார்பாரிகன் சொன்னான்: துரோணருக்கும் துருபதருக்கும் இடையேயான போர் மிக இயல்பாகவும் மிகமிக தற்செயலாகவும் நிகழ்ந்தது. அது நிகழாதொழிய இயலாதென்பதுபோல அது தொடங்கிய தருணத்திலேயே தோன்றியது. குருக்ஷேத்ரப் போர் தொடங்கிய நாள் முதலே அவர்கள்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-53

பார்பாரிகன் சொன்னான்: விந்தையான தனிமைகளால் மானுடர் நோயுறுகிறார்கள். தனிமைநோய் ஒரு பருவடிவ ஆளுமைபோல் உடனிருக்கிறது. உள்ளமும், உணர்வுகளும், எண்ணங்களும், அவற்றை இயற்றும் புலன்களும் கொண்டதாக. அதிலிருந்து தப்ப இயல்வதில்லை. அதனுடன் உரையாட முடியும்....

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-52

சஞ்சயன் சொன்னான்: பேரரசே, இன்று காலைமுதல் நிகழ்ந்துவரும் இந்தப் போரை நான் உங்களுக்கு முழுமையாக சொல்லி முடிக்க இன்னும் சில பிறவிகள் தேவையாகக்கூடும். இன்று ஒவ்வொருவரும் பலவாகப் பிரிந்தனர். ஒரே போரை வெவ்வேறு...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-47

ஏகாக்ஷர் சொன்னார்: அன்றைய போர் தொடங்கும்போது கௌரவப் படையின் அத்தனை வீரர்களும் உள்ளூர சற்று அச்சம் கொண்டிருந்தார்கள் என்று அஸ்வத்தாமனுக்கு தெரிந்திருந்தது. அது அவர்கள் அனைவருமே உணர்ந்து ஒருவரோடொருவர் மறைத்துக்கொண்ட ஒன்று. அன்று...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-46

பார்பாரிகன் சொன்னான்: இடும்பர்களே கேளுங்கள்! அன்று புலரி எழும் பொழுதில் கௌரவ அரசன் துரியோதனனின் தனிக்குடிலுக்குள் துரோணர், கிருபர், சல்யர், கர்ணன், அஸ்வத்தாமன், பூரிசிரவஸ், கிருதவர்மன் என ஏழு வில்லவர்களும் கூடி அமர்ந்திருந்தனர்....

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-42

அவையில் ஒவ்வொருவராக வந்து அமர்ந்தனர். அந்த ஓசை ஒரு மந்தணப்பேச்சுபோல ஒலித்துக்கொண்டிருக்க அஸ்வத்தாமன் தன் படைசூழ்கையை தோல்சுருளில் இறுதியாக வரைந்துகொண்டிருந்தான். பூரிசிரவஸ் அவனருகே வந்து குனிந்து “பணிமுடியவில்லையா?” என்றான். “இல்லை, நான் இன்று...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-37

அஸ்வத்தாமன் அவை நிறைந்துகொண்டிருப்பதை பார்த்தபடி அறிவிப்புமேடை அருகே நின்றான். அவையினர் கலைந்த பேச்சொலிகளுடன், தயக்கமான உடலசைவுகளுடன் இருந்தார்கள். கிருபரும் சுபலரும் பேசியபடி வந்தமர்ந்தனர். சகுனி தனியாக வந்து தன் பீடத்திலமர்ந்து அலுப்புடன் விழிகளை...