குறிச்சொற்கள் புதியவர்களின் ஆக்கங்கள்

குறிச்சொல்: புதியவர்களின் ஆக்கங்கள்

பயணம் பற்றி

அன்புள்ள சிவேந்திரன், உணர்ச்சிக் கொந்தளிப்பான ஈழக்கதைகளை வாசித்துப்பழகிய மனதுக்கு இந்த கதையில் உள்ள எளிமையும் அடக்கமும் ஆச்சரியமளிக்கின்றன. நேரடியான ஒரு சித்தரிப்பு வழியாக ஒரு காலகட்ட மாற்றத்தையே சொல்லிவிட முடிந்திருக்கிறது உங்களால். பெரும் அரசியல்...

வாசுதேவன் பற்றி

அன்புள்ள சுனீல் இந்தக்கதையின் சிறப்பு என எனக்குப்படுவது வலியை, நோயை அதன் தீவிரத்துடனும் அர்த்தமின்மையுடனும் சொல்லமுடிந்திருப்பதுதான். ஒட்டுமொத்தமாக என்ன என்ற வினாவுடனும் ஒன்றுமில்லை என்ற பெருமூச்சுடனும் முடிகிறது. அதை குழந்தையின் வாயால் சொல்லவைத்திருப்பதில் இருக்கிறது...

கதைகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெ, எனக்கும் உரையாடலுக்கும் வெகு தூரம். அதுவும் ஒரு கதாசிரியனோடு உரையாடுதல் இன்னும் கடினம். ஓரளவுக்கு படிக்கும் பழக்கம் உள்ளவன். எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர். அதற்கும் மேல், வாசகர்களுடன் நீங்கள் உரையாடுவது...

கதைகள்- உத்திகள்-கடிதங்கள்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, தங்களது தளத்தில் வெளியான பன்னிரெண்டு கதைகளையும் வாசித்தேன். இந்த கதைகளில் ஒரு முக்கியமான பொது அம்சத்தை கவனிக்க முடிகிறது. உங்களது விமர்சன கோட்பாடுகளோடும் வரையறைகளோடும் மிக கச்சிதமாக பொருந்திப்போகிற சிறுகதைகளாகவே...

கதைகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெ , புதியவர்களின் ஆக்கங்கள் மற்றும் அதைப் பற்றிய விமரிசனங்கள் குறித்த தங்கள் கடிதம் படித்தேன்.ஒரு கதைக்கு உடனுக்குடன் எதிர்வினையாற்றுவது என்பது என் தலைமுறையின் வாசகர்களுக்கு ஏனோ அவ்வளவு உவப்பானதாக இல்லை. ஒரு...

இந்தக் கதைகள்- பாவண்ணன் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். பன்னிரண்டு சிறுகதைகளையும் படித்துவிட்டேன். பன்னிரண்டுமே பன்னிரண்டு முத்துகள். எல்லாமே ஏதோ ஒருவகையில் என்னைக் கவர்ந்தன. கதைகள் முன்வைக்கப்பட்டிருக்கும் கோணங்களும் களங்களில் உள்ள புதுமையும் நல்ல வாசிப்பனுபவத்தை வழங்கின. படித்து சில...

பிரகாஷ் சங்கரனின் ’வேஷம்’ – இன்னொரு கடிதம்

ஜெ பிரகாஷ் சங்கரனின் வேஷம் நீங்கள் எழுதிய லங்காதகனம் கதையின் இன்னொரு வடிவம். improvisation என்று இன்னும் சரியாகச் சொல்லலாம். அல்லது அதற்கான எதிர்வினை என்று. லங்காதகனம் கதையில் கதகளிஆசான் இழிவுபடுத்தப்பட்டு சுருங்கி உயிர்வாழக்கூடிய...

பிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ மீண்டும் ஒரு கடிதம்

ஜெ, பிரகாஷ் சங்கரனின் வேஷம் கதை வாசித்தேன். கதைகள் எப்போதுமே வாழ்க்கையனுபவங்களின் தூண்டுதலில் இருந்துதான் வரும் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையிலே அப்படிக்கிடையாது. கதைகள் வேறுகதைகளில் இருந்து உருவாவதும் அதே அளவுக்கு காணப்படுகிறது. போர்ஹெஸ்...

கதைககள் கடிதங்கள் [பின்னூட்டங்களுடன்]

அன்புள்ள ஜெ, புதியவர்களின் கதைகளைப் பற்றி. காலம் தாழ்ந்த எதிர்வினை.மன்னிக்கவும்.செவிட்டில் அடிக்கிற மாதிரி சொன்னால் தான் உறைக்கும் போல, என்ன செய்ய. இது கதைகளைப் படித்து என் மனதிற்கு தோன்றிய கருத்துக்கள் தான். என் புரிதலில்...

பிரகாஷ் சங்கரனின் ’வேஷம்’- ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு, நேற்று தங்கள் தளத்தில் வெளியான பிரகாஷ் சங்கரனின் 'வேஷம்' ஒரு நல்ல சிறுகதை. இச்சிறுகதையின் மையமான புதிர் மிக ஆழமானது அதை ஆசிரியர் நுட்பமாக முன்வைத்திருக்கிறார். உலகை நாம் தர்க்கரீதியாகவும்,...