குறிச்சொற்கள் பீஷ்மர்

குறிச்சொல்: பீஷ்மர்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 78

பகுதி எட்டு : அழியாக்கனல்-2 மீண்டும் அஸ்தினபுரியின் பெருந்தெருவை அடைந்தபோது முதலில் தீக்ஷணன் அமைதியடைந்தான். திரளுக்குள் தன்னை பொருத்திக்கொண்டான். அவன் கைகளும் கால்களும் கைகால் அலைகளில் இணைந்தன. தோள்கள் தோள்களுடன் பிணைந்தன. அவனுக்கான இடம்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 76

பகுதி ஏழு : பெருசங்கம் – 8 சுதமன் உள்ளே நுழைந்தபோது நடுங்கிக்கொண்டிருந்தார். அவர் கைகள் கூப்பியிருந்தன. கால்கள் குழைந்தன. பதற்றத்தில் முதலில் உள்ளே என்ன திகழ்கிறதென்பதையே அவர் கண்கொள்ளவில்லை. பின்னர்தான் அந்த வேலிவட்டத்திற்குள்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 75

பகுதி ஏழு : பெருசங்கம் – 7 சுதமன் குருக்ஷேத்ரத்தை அணுகியபோது காலை வெயில் ஏறிவிட்டிருந்தது. அவர் கங்கையினூடாக படகில் சென்று யமுனைக்குள் நுழைந்து காலையில் படித்துறையில் இறங்கி அங்கிருந்த அஸ்தினபுரியின் காவல்மாடத்திலிருந்து விரைவுத்தேர்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-40

பீஷ்மரின் படுகள வளைப்புக்குள் நுழைந்தபோது இயல்பாகவே யுதிஷ்டிரன் நடைதளர்ந்து பின்னடைந்தார். இளைய யாதவர் நின்று அவரை நோக்க அவர் அருகே அர்ஜுனனும் நின்றான். பீமன் மட்டும் தலைநிமிர்ந்து முதலில் உள்ளே சென்றான். “மந்தா”...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20

யுதிஷ்டிரன் அந்தப் போரை தனக்கும் தன் வில்லுக்கும் இடையேயான முரண்பாடாகவே உணர்ந்தார். தயை மிக மெல்லியதாக இருந்தாலும் உறுதியானதாக இருந்தது. அதன் நாண் இறுகக்கட்டிய யாழின் தந்திபோல் விரலுக்கு வாள்முனையென்றே தன்னை காட்டியது....

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-9

துரியோதனன் எழுந்துகொண்டு “நாம் சென்று பிதாமகரை வணங்கி களம்புக வேண்டும். அவ்வாறு வழக்கமில்லை எனினும் இன்று அவ்வாறு செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது” என்றான். கதையை எடுத்துக்கொண்டு “இவ்வாறு நெடும்பொழுது நான்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-46

மென்மழை நின்றுகொண்டிருந்த குருக்ஷேத்ரக் களத்தில் கௌரவப்படைகள் அணிவகுத்து சூழ்கை அமைத்தன. படைக்கலங்களும் தேர்களின் உலோகமுகடுகளும் ஒளியென்றும் மெல்லிருளென்றும் மாறி மாறி விழிமாயம் காட்டிய நீர்த்திரைக்குள் மின்னி திரும்பின. புரவிகளின் குளம்படி ஓசைகளும் சகட...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-12

சல்யரின் குடிலுக்கு வெளியே துச்சாதனன் பொறுமையிழந்து காத்து நின்றிருந்தான். அவன் வந்ததுமே காவலன் உள்ளே சென்று அவரிடம் துச்சாதனனின் வரவை அறிவித்திருந்தான். உடனே உள்ளே செல்ல எண்ணியிருந்தமையால் சில கணங்களே நீளும் பொழுது...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-88

சஞ்சயன் சொன்னான்: அரசே, குருக்ஷேத்ரக் களத்தில் பொடியும் புகையும் மெல்ல அடங்கிக்கொண்டிருப்பதை இப்போது பார்க்கிறேன். முகில்கள் பெய்தொழிந்து வான் வெளுப்பதுபோல் அங்கே ஒவ்வொரு வீரராக தோன்றுகிறார்கள். அதுவரை அங்கு படைகள் மோதிக்கொண்டிருந்தன. அப்படைகளுக்குள்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-17

துரியோதனனும் துச்சாதனனும் தொடர கர்ணன் பீஷ்மரின் படுகளத்தை நோக்கி சென்றபோது விழிதுலங்கும் அளவுக்கு காலைஒளி எழுந்துவிட்டிருந்தது. “நமக்கு இனி பொழுதில்லை” என்று துச்சாதனன் மூச்சுவாங்க கர்ணனின் பின் நடந்தபடி சொன்னான். “ஆம், நாம்...