குறிச்சொற்கள் பார்பாரிகன்

குறிச்சொல்: பார்பாரிகன்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-6

பார்பாரிகன் அமர்ந்திருந்த காவல்மாடம் இளமழையில் நனைந்து நான்கு பக்கமும் துளிகள் சொட்டிக்கொண்டிருக்க இருளுக்குள் ஊழ்கத்திலென நின்றிருந்தது. ஓசை எழுப்பாத காலடிகளுடன் நடந்த புரவியின் மீது உடல் சற்றே சரித்து கடிவாளத்தை இடக்கையால் பற்றி...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-55

போர் தொடங்குவதற்கான முரசு ஒலித்ததும் தன்னை அறியாமலேயே “எழுக! எழுக!” என கையசைத்து அம்புகளைத் தொடுத்தபடி சுபாகு பாண்டவப் படைகளுக்குள் ஊடுருவிச்சென்றான். அவனை எதிர்த்து வந்த பாஞ்சால இளவரசர்களை அம்புகளால் அடித்து பின்னடையச்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-88

சஞ்சயன் சொன்னான்: அரசே, குருக்ஷேத்ரக் களத்தில் பொடியும் புகையும் மெல்ல அடங்கிக்கொண்டிருப்பதை இப்போது பார்க்கிறேன். முகில்கள் பெய்தொழிந்து வான் வெளுப்பதுபோல் அங்கே ஒவ்வொரு வீரராக தோன்றுகிறார்கள். அதுவரை அங்கு படைகள் மோதிக்கொண்டிருந்தன. அப்படைகளுக்குள்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-87

அஸ்வத்தாமன் அணுகி வருந்தோறும் புரவிக்கனைப்பொலி பெருகிப் பெருகி வந்தது. அது நான்குபுறங்களிலும் இருந்து எழுந்து அவர்கள் அனைவரையும் சூழ்ந்தது. சகதேவன் அச்சத்துடன் “மூத்தவரே…” என்றான். யுதிஷ்டிரர் “யாதவனே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-85

கிருபர் தனியாக தேரில் சென்று அஸ்வத்தாமன் போரிட்டுக்கொண்டிருந்த களத்தை அடைந்து இறங்கியபோது தொலைவில் அம்புகள் பறவைக்கூட்டங்கள்போல் சிறகோசையுடன் வானை நிறைத்திருப்பதை கண்டார். சகுனியும் அஸ்வத்தாமனும் இணைந்து மறுபுறம் முழு ஆற்றலுடன் போரிட்டுக்கொண்டிருந்த சிகண்டியை...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-63

பார்பாரிகன் சொன்னான்: அலாயுதன் இடும்பர்கள் விண்ணிலிருந்து விழுந்தெழுந்து தாக்குவதை கண்டான். அவனுடைய படைவீரர்கள் ஆணையிடாமலேயே தங்கள் நீண்ட வேல்களை மேல்நோக்கி கூர் நின்றிருக்க பிடித்து கீழே விழும் இடும்பர்களுக்கு நேராகக் காட்டி அவர்களை...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-61

பார்பாரிகன் சொன்னான்: விந்தியமலைக்கு அப்பால், ஜனஸ்தானத்தை தலைநகராகக் கொண்டு அமைந்திருந்த நாடு அரக்கர்களின் தொல்நிலமாகிய தண்டகம். முன்பு அது தண்டகப்பெருங்காடு என அழைக்கப்பட்டிருந்தது. அங்கே அரக்கர் குலத்தின் பதினெட்டு குடிகள் வாழ்ந்தார்கள். அவர்களை...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-57

பார்பாரிகன் சொன்னான்: கூட்டரே, அங்கே நிகழ்ந்துகொண்டிருப்பது வெற்று உணர்ச்சிகளின் கொந்தளிப்பு. போர்க்களத்தின் பின்புறத்தில் உடைந்த தேர்த்தட்டின் அடியில் படுத்திருந்த சோமதத்தரிடம் சென்று நிகழ்ந்தவற்றை சொன்னபோது அவர் அகிபீனாவின் மயக்கிலிருந்தார். சலனின் இறப்பு அவரை...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-55

பார்பாரிகன் சொன்னான்: துரோணருக்கும் துருபதருக்கும் இடையேயான போர் மிக இயல்பாகவும் மிகமிக தற்செயலாகவும் நிகழ்ந்தது. அது நிகழாதொழிய இயலாதென்பதுபோல அது தொடங்கிய தருணத்திலேயே தோன்றியது. குருக்ஷேத்ரப் போர் தொடங்கிய நாள் முதலே அவர்கள்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-53

பார்பாரிகன் சொன்னான்: விந்தையான தனிமைகளால் மானுடர் நோயுறுகிறார்கள். தனிமைநோய் ஒரு பருவடிவ ஆளுமைபோல் உடனிருக்கிறது. உள்ளமும், உணர்வுகளும், எண்ணங்களும், அவற்றை இயற்றும் புலன்களும் கொண்டதாக. அதிலிருந்து தப்ப இயல்வதில்லை. அதனுடன் உரையாட முடியும்....