குறிச்சொற்கள் பராசரர்

குறிச்சொல்: பராசரர்

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-30

நான் வசிட்டரின் முதல் மைந்தர் சக்திக்கு அதிருஸ்யந்தி என்னும் மலைமகளில் மைந்தனாகப் பிறந்தவன். விழியறியாது காட்டில் உலவும் கலையறிந்த ஹரிதகர் என்னும் குலத்தில் பிறந்தவள் என் அன்னை. காட்டில் தவமியற்றச் சென்ற என்...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-29

நைமிஷாரண்யத்தில் இளைய யாதவர் கிருஷ்ண துவைபாயன வியாசரிடம் சொன்னார் “கவிமுனிவரே, பிரம்மத்திற்கு ஆயிரம் யுகம் ஒரு பகல், ஆயிரம் யுகம் ஓரிரவு. ஆயிரம்கோடி பகலிரவுகளாலான ஆயிரம்கோடி யுகங்கள் அரைக்கணம். நாம் கோருவதனைத்தும் காலத்தில்,...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-28

நைமிஷாரண்யத்தில் இளைய யாதவரின் சிறுகுடிலின் அறையில் தன்னை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தமர்ந்த வியாசர் “என்ன நிகழ்ந்தது? துயின்றேனா? கனவா?” என்றார். “மீண்டீர்கள்” என்றார் இளைய யாதவர். வியாசர் “என்னை காட்டுக்குள் சூக்ஷ்மம் என்னும்...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ -12

பகுதி 4 : தழல்நடனம் - 2 சிசிரன் வந்து வணங்கியதை ஆடியிலேயே நோக்கி அர்ஜுனன் தலையசைத்தான். ஆடியில் நோக்குகையில் உடலெங்கும் பரவும் சினத்தை உணர்ந்தான். ஏனென்றறியாத அந்தச் சினம் அவனிடம் இருந்துகொண்டே இருந்தது....

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 10

பகுதி 3 : பிடியின் காலடிகள் - 4 ஆற்றிடைக்குறை புழுதிக்கு நிகரான மென்மையான மணலால் ஆனதாக இருந்தது. கோரையின் செறிவுக்கு நடுவே காற்று மணலை வீசி உருவாக்கிய மென்கதுப்புப்பாதை வெண்தடமாக தெரிந்தது. அவள்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 88

பகுதி பதினேழு : புதியகாடு இருக்குமிடத்தை முழுமையாக நிறைக்க குழந்தைகளால் மட்டும் எப்படி முடிகிறது என்று மாத்ரி வியப்புடன் எண்ணிக்கொண்டாள். ஐந்து மைந்தர்களும் இணைந்து சதசிருங்கத்தின் ஹம்ஸகூடத் தவச்சோலையை முற்றிலுமாக நிறைத்துவிட்டனர். அவர்களன்றி அங்கே...

வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 68

பகுதி பதின்மூன்று : தனிப்புரவி அதிகாலையில் எழுந்ததும் அகத்தில் முதலில் முளைப்பது முந்தைய நாளிரவு சிந்தனைசெய்த கடைசிச்சொற்றொடர்தான் என்பதை விதுரன் உணர்ந்திருந்தான். ஆகவே ஒவ்வொருநாளும் அலுவல்களை முடித்து கண்கள் மயங்குவதுவரை அவன் காவியத்தைத்தான்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 8

நூல் இரண்டு : கானல்வெள்ளி விதுரன் காலை வழிபாடுகள் பூசைகள் என எதையுமே செய்வதில்லை. அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வந்து விளக்கை ஏற்றி வைத்து வாசிப்பதுதான் அவனுடைய வழக்கம். காலையில் ஒருபோதும் அவன் நெறிநூல்களையோ...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 29

பகுதி ஆறு : தீச்சாரல் வியாசவனத்தின் தெற்குமூலையில் சித்ரகர்ணி கண்களும் பிரக்ஞையும் மட்டும் உயிருடனிருக்க இறந்துகொண்டிருந்தது. அதன் உறுமல்கள் அதன் வயிற்றுக்குள் ஒலிக்க, மனதுக்குள் மூடுண்ட அறைக்குள் சிக்கிக்கொண்ட வௌவால் போல பிரக்ஞை பரிதவித்துக்கொண்டிருந்தது....

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 8

பகுதி இரண்டு : பொற்கதவம் அஸ்தினபுரியின் மன்னர் சந்தனுவின் ரதத்தில் ஏறி முதன்முதலாக பீஷ்மர் தன் ஏழு வயதில் உள்ளே வந்தபோதே அந்நகர மக்கள் அது தங்கள் குலமூதாதை ஒருவரின் நகர்நுழைவு என்று...