குறிச்சொற்கள் துருமசேனன்

குறிச்சொல்: துருமசேனன்

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-71

துச்சாதனன் படைகளின் நடுவிலூடாக புரவியில் விரைந்துசென்றான். அவன் விழிகள் இருபக்கமும் துழாவி பதறிக்கொண்டிருந்தன. எதிரில் வந்த படைத்தலைவன் காஞ்சனனிடம் “மைந்தர்கள் எங்கே?” என்றான். அதன் பின்னரே தான் பன்மையில் கேட்டுவிட்டிருப்பதை உணர்ந்தான். படைத்தலைவன்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39

நாகக் களமுற்றத்தில் அமர்ந்து அரவான் சொன்னான். நான் இப்போது நூற்றெட்டு இதழ்களுடன் விரிந்த பெருந்தாமரையின் இதழ்கள் ஒன்றன்மீது ஒன்றென மெல்ல படிந்து ஒற்றை வளையமென்றாகி குவிந்து மொட்டாகி இறுகி செண்டாகி மணியாகி மூடிக்கொள்வதை...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-30

கிழக்கே புலரியை அறிவிக்கும் முரசொலி எழுந்ததும் சிலிர்த்து, செவி முன் குவித்து, முன்கால் தூக்கி பாய ஒருங்கும் படைப்புரவியென தன்னில் விசை கூட்டியது பாண்டவப் படை. கதையை வலக்கையால் பற்றியபடி சுதசோமன் மூச்சை...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-23

லட்சுமணன் பீஷ்மரை முதலில் பார்த்தபோது அவரும் விஸ்வசேனரும் உரையாடிக்கொண்டு வருவதை கண்டான். தன் அம்பையும் வில்லையும் எடுக்க குனிந்தபோதுதான் அதிர்ச்சிகொண்டு நிமிர்ந்து பார்த்தான். பீஷ்மர் தனக்குள் என தலைகுனிந்து கையசைத்து மெல்ல முணுமுணுத்தபடி...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-22

புரவிகள் பெருநடையிட தன் படையணிக்குச் செல்லும்போது லட்சுமணன் நிறைவுற்றிருந்தான். துருமசேனன் “முதலில் அவர்களை சந்திக்கவேண்டாமே என எண்ணினேன். உங்கள் உளம் விழைந்ததனால் சென்றேன். ஆனால் நீங்கள் அவர்களை சந்தித்தது நன்று என இப்போது...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-21

லட்சுமணன் அவையிலிருந்து வெளியே வந்து குளிர்காற்றை உணர்ந்தபோது மேலும் களைப்படைந்தான். கால்கள் நீரிலென நீந்தி நீந்தி அவனை கொண்டுசெல்வதுபோல தோன்றியது. வெளியே அவனுக்காகக் காத்து நின்றிருந்த துருமசேனன் அருகணைந்து “களமொருக்குதானே அடுத்த பணி,...

வெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–8

 பகுதி இரண்டு : பெருநோன்பு - 2 வாயில்கதவு பேரோசையுடன் வெடித்து திறக்க அறைக்குள் நுழைந்த துருமசேனன் இரு கைகளையும் விரித்து உரத்த குரலில் “அன்னையே!” என்றான். சுவடியை நோக்கி தலைகுனிந்திருந்த அசலை திடுக்கிட்டு உடல்...