குறிச்சொற்கள் துரியோதனன்

குறிச்சொல்: துரியோதனன்

சிறியன சிந்தியாதான்

  நான் படித்த, பார்த்த மகாபாரதங்களில் எல்லாம் துரியோதனன் ஒரு வில்லன். முழுக்க முழுக்க எதிர்மறைக் குணங்கள் மட்டுமே நிறைந்த ஒருவன். வெண்முரசின் மொழியில் சொன்னால் இருளின் தெய்வங்களால் ஆசிர்வதிக்கப்பட்டவன். ஆனால் வெண்முரசு காட்டும்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை-2

பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள்-2 அச்சொல் அவனில் ஒரு கனவாக நிகழ்ந்தது. அவன் சாலையோரம் நின்றிருந்தான். உமணர்களின் வண்டிகள் நிரையாக சென்றுகொண்டிருந்தன. எடைகொண்ட வண்டிகளை இழுத்த காளைகளின் தசைகள் இறுகி நெளிந்தன. வால்கள்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-45

“நெடும்பொழுது...” என்னும் சொல்லுடன் சதானீகன் தன்னுணர்வு கொண்டபோது அவன் எங்கிருக்கிறான் என்பதை உணரவில்லை. நெடுநேரம் அவன் போரிலேயே இருந்தான். குருதிமணம், அசைவுகளின் கொந்தளிப்பு, சாவில் வெறித்த முகங்கள். பின்னர் ஒரு கணத்தில் அவன்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-38

சகதேவன் தன் கைகளிலேயே உயிர்விடக்கூடும் என்னும் எண்ணத்தை நகுலன் அடைந்தான். பட்டாம்பூச்சிச் சிறகுபோல் அவன் உடல் நகுலனின் கையிலிருந்து துடித்தது. பின்னர் ஒரே கணத்தில் அனைத்து நரம்புகளும் அறுபட்டுத் தளர்ந்ததுபோல, எங்கோ சென்று...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-37

சகதேவன் அருகிலிருந்த புல்வெளியை நோக்கி “அங்கா?” என்றான். இளைய யாதவர் “ஆம், இந்த இடத்தை தெரிவுசெய்தவர் அவரே” என்றார். சுனையின் வலப்பக்கமாக நீர் வழிந்து வெளியேறும் ஓடையின் அருகில் பசும்புல்வெளி நீள்வட்டமாக விரிந்திருந்தது....

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-36

பீமன் சுனையை அணுகி அதன் பாறைவிளிம்பில் கால் மடித்து அமர்ந்து கைகளால் அதன் கூர்மடிப்பை பற்றியபடி குனிந்து நீரில் நோக்கினான். அவனுடைய பாவை எழுந்து அலைகொண்டது. அவன் விழிகள் இரண்டு நான்கு பதினாறு...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-34

துரியோதனன் ஓர் அருகமைவை உணர்ந்தான். விழிகளை மூடி, மூக்கு உணர்விழக்க, செவிகள் ஒலிதுறக்க, உடலை உடல் மறக்க அமைந்திருக்கையிலும் தன்னுள் இருக்கும் தன்னை அவன் உணர்ந்துகொண்டிருந்தான். அருகமைவு அதைப்போல் ஓர் இருப்பாக அவனுள்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-33

காலகம் எப்போதுமே இளமழையில் நனைந்துகொண்டிருக்கும் என்று அஸ்வத்தாமன் அறிந்திருந்தான். இலைகள் சொட்டி இலைகள் அசைந்துகொண்டிருந்தன. அங்கே செறிந்திருந்த காட்டுமரங்களெல்லாம் பசுந்தழை செறிந்து காலடியில் இருளை தேக்கி வைத்திருந்தன. இருளுக்குள் நீர் சொட்டும் ஒலியில்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-24

ஆர்ஷியின் அமைதி முதல் நாள் சகுனியை கொந்தளிக்கச் செய்தது. அன்று இரவு முழுக்க அவளிடம் அவர் மன்றாடினார். தன்னால் கெஞ்சமுடியும் என்றும் குழையமுடியும் என்றும் அன்று அறிந்தார். “நான் பிழை செய்திருக்கலாம். ஆனால்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21

சல்யர் யுதிஷ்டிரனின் வில்லையே விழிவாங்காமல் நோக்கிக்கொண்டிருந்தார். முதலில் அந்த வில் போருக்கு எழும் என்பதையே அவரால் உணரமுடியவில்லை. அதன் அம்புகளின் விசையை மெல்ல மெல்ல அவர் உணர்ந்தபோது ஒரு கணத்தில் அது தன்...