குறிச்சொற்கள் திருதராஷ்டிரர்

குறிச்சொல்: திருதராஷ்டிரர்

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11

அஸ்தினபுரியின் அவைக்கூடத்தில் அமர்ந்திருந்தவர்கள் பொறுமையிழந்தவர்களாக உடலை அசைத்துக்கொண்டிருந்தனர். ஏவலர்களிடமும் அந்தப் பொறுமையின்மை இருந்தது. சம்வகை அவையை நோக்கியபடி நின்றாள். யுயுத்ஸு அங்கிலாதவன் போலிருந்தான். இளையோர் நால்வரும் நிலம்நோக்கி உடல் அசைவிலாது உறைந்திருக்க அமர்ந்திருந்தனர். யுதிஷ்டிரன்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8

வியாசரின் மாணவர் ஓலையிலிருந்து படித்துச் சென்றார். “எப்போதும் எவ்வுயிர்க்கும் நன்மையே செய்துகொண்டிருந்த பிரதீபன் என்னும் அரசன் கங்கையின் பிறப்பிடத்திற்குச் சென்று அங்கே நெடுங்காலம் தவமியற்றிக்கொண்டிருந்தான். அந்த அரசமுனிவன் வேதம் உரைத்துக்கொண்டிருக்கையில் அழகிய முகமும்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7

பலி நிகழ்வுகளுக்குப் பின்னர் கங்கையின் பெருமணல் பரப்பில் அனைவரும் உண்டாட்டுக்கு அமர்ந்தனர். நீத்தோரை வழுத்தி நிறையுணவு உண்டு செல்வது என்பது தொல்மரபு. உண்டாட்டுக்குரிய ஓசைகளோ முகமன்களோ இல்லாமல் அனைவரும் அமைதியாக தங்களுக்குரிய இடங்களில்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-6

அன்று முன்விடியலில்தான் இளவரசரை பலிநகருக்கு கொண்டுவந்தார்கள். அவரை கொண்டு வருவதற்கென்று விந்தையானதோர் தேர் அமைக்கப்பட்டிருந்தது. அகன்ற தேர்பீடத்தில் வெண்கலத்தாலான தொட்டி ஒன்றில் நீர் நிறைக்கப்பட்டு அதற்குள் மிதந்து கிடந்த பிறிதொரு கலம்மீது அவர்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-5

உத்கலத்து வணிகர்களுக்கான குடியிருப்பின் பெருங்கூடத்தில் குபேரருக்கு மிருத்திகன் முன்பு அந்த பலிச்சடங்கின்போது நிகழ்ந்தவற்றை சொன்னான். நான் வணிகச் செய்திகளுக்காக அன்றி எங்கும் செல்வதில்லை. பெருவிழவுகளையும் களியாட்டுகளையும் எப்போதும் தவிர்த்து வந்திருக்கிறேன். வணிகர்கள் அவற்றை...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59

பகுதி ஒன்பது : சிறகெழுகை - 1 யுயுத்ஸு சுகோத்ரன் செல்வதை விழிநிலைக்க நோக்கிக்கொண்டிருந்தான். அவன் சென்று மறைவதை கண்டபின் விழிவிலக்கி கங்கைச்சூழலை நோக்கினான். அங்கிருந்த அனைவருமே சுகோத்ரனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள். விட்டுச்செல்பவனுக்கு அமையும் அந்த...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-58

பகுதி எட்டு : விண்நோக்கு - 8 கங்கைக்கரை எங்கும் ஓசைகளும் உடலசைவுச்சுழல்களும் உருவாயின. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் நிலையழிய அச்சூழலே கொந்தளித்துக் கொண்டிருந்தது. ஸ்ரீமுகர் அங்குமிங்கும் ஓடினார். தொலைவில் குந்தியின் தேர் கிளம்பிச்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-57

பகுதி எட்டு : விண்நோக்கு - 7 சுகோத்ரன் கண்களை மூடி அந்தக் காலத்தையும் இடத்தையும் கடந்து வேறெங்கோ இருந்தான். உஜ்வலன் அசைந்து அசைந்து அமர்ந்தான். அவ்வப்போது சுகோத்ரனை நோக்கினான். வேள்வி தொடர்ந்து நடக்க...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-43

பகுதி ஆறு : விழிக்குமிழிகள் – 4 சங்குலன் திருதராஷ்டிரரின் அறையிலிருந்து வெளிவந்து, விதுரரை பார்த்ததும் நின்றான். அவர் அருகணைந்ததும் அவன் முகம் விரிந்து புன்னகையாகியது. தலைவணங்கி விலகி நின்றான். விதுரர் அவனருகே...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-42

பகுதி ஆறு : விழிக்குமிழிகள் – 3 திருதராஷ்டிரரின் குடில் முன் சஞ்சயன் நின்றுகொண்டிருந்தான். அவர்கள் வருவதைக் கண்டு புன்னகையுடன் அருகணைந்து விதுரரின் கால்களைத் தொட்டு வணங்கினான். அவன் தலைமேல் கைகளை வைத்து வாழ்த்திய...