குறிச்சொற்கள் சோமதத்தர்

குறிச்சொல்: சோமதத்தர்

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-68

சோமதத்தரின் தேர் விசைகொண்டு களமுகப்பு நோக்கி சென்றது. பூரி அதைத் தொடர்ந்து தன் தேர் செல்லும்படி ஆணையிட்டான். சோமதத்தரின் தேர் போரிட்டுக்கொண்டிருந்தவர்களை பிளந்து வகுந்தபடி சென்றது. பாம்புசென்ற புல்விரிவுத் தடம்போல தேரின் பாதை...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-67

பூரி குருக்ஷேத்ரத்திலிருந்து ஒருநாள் தொலைவிலிருக்கையில் சலன் களம்பட்ட செய்தியை முரசொலிகளிலிருந்து அறிந்துகொண்டான். குருக்ஷேத்ரத்தின் மையச்செய்திகள் அனைத்தும் முரசுத்தொடரொலி வழியாக பரவிப்பரவி நாடுகள்தோறும் சென்றுகொண்டிருந்தன. அந்த ஒலிகளுக்குமேல் பல்லாயிரம் பறவைகள் செய்திகளுடன் வானில் சென்றன....

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-57

பார்பாரிகன் சொன்னான்: கூட்டரே, அங்கே நிகழ்ந்துகொண்டிருப்பது வெற்று உணர்ச்சிகளின் கொந்தளிப்பு. போர்க்களத்தின் பின்புறத்தில் உடைந்த தேர்த்தட்டின் அடியில் படுத்திருந்த சோமதத்தரிடம் சென்று நிகழ்ந்தவற்றை சொன்னபோது அவர் அகிபீனாவின் மயக்கிலிருந்தார். சலனின் இறப்பு அவரை...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 27

அரசப்பேரவை முன்னரே நிரம்பத் தொடங்கியிருந்தது. ஷத்ரிய அரசர்கள் இளைய கௌரவர்களாலும் சிற்றரசர்கள் உபகௌரவர்களாலும், சிற்றமைச்சர்களாலும் அவைமுகப்பில் தேரிறங்கும்போதே எதிர்கொண்டு வரவேற்கப்பட்டு அவைக்கு கொண்டுசென்று அமர்த்தப்பட்டனர். பூரிசிரவஸ் அவைமுகப்பில் நின்றுகொண்டு அங்கே அமர்ந்திருக்கும் அரசர்களை...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 24

பால்ஹிகருடன் ஷீரவதியை கடந்தபோதுதான் முதன்முறையாக அவரை அரசரும் குடிகளும் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற வியப்பை பூரிசிரவஸ் அடைந்தான். அதுவரை அவர் தன்னுடன் வருவதிலிருந்த விந்தையிலேயே அவன் உளம் திளைத்துக்கொண்டிருந்தது. முதல்நாள் பகல்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 17

பால்ஹிகபுரியின் குடிப்பேரவைக்கு பூரிசிரவஸ் கிளம்பிக்கொண்டிருந்தபோது மைந்தர் அவனைக் காண விரும்புவதாக ஏவலன் வந்து சொன்னான். மேலாடையை சீரமைத்தபடி அவன் சென்று பீடத்திலமர்ந்து அவர்களை வரச்சொல்லும்படி கைகாட்டினான். முதல் மைந்தன் யூபகேதனன் முன்னால் வர...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 16

பால்ஹிகநகரியின் தெருக்கள் மிகக் குறுகியவையாக இருந்தன. ஒரு தேர் ஒரு திசைக்கு செல்லத்தக்கவை. அந்நகரை பூரிசிரவஸ் புதுப்பித்து அமைக்கும்போது கிழக்குக்கோட்டையிலிருந்து அரண்மனை வரைக்கும் நேராகச் செல்லும் நான்கு தேர்ப்பாதைகள் கொண்ட பெருஞ்சாலை ஒன்றை...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 60

பகுதி 13 : பகடையின் எண்கள் - 1 தூமபதத்தை கடப்பதுவரை பிறிதொருவனாகவே பூரிசிரவஸ் தன்னை உணர்ந்தான். புரவிகள் மூச்சிரைக்க வளைந்துசென்ற மேட்டுச்சாலையில் ஏறிக்கொண்டிருந்தபோது அவன் உள்ளம் எங்கிருக்கிறோம் என்பதையே அறியவில்லை. ஒன்றுடன் ஒன்று...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 26

பகுதி 7 : மலைகளின் மடி - 7 இரவிலேயே செய்திவந்துவிட்டது, மத்ர நாட்டிலிருந்து சல்லியரும் அவரது மைந்தர்களான ருக்மாங்கதனும் ருக்மரதனும் அவரது இளையவரும் உத்தரமத்ரநாட்டின் அரசருமான தியுதிமானும் வந்துகொண்டிருப்பதாக. செய்திசொன்ன தூதன் மேலும் ஒரு...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 21

பகுதி 7 : மலைகளின் மடி - 2 நீளச்சரடுகளாக கிழிக்கப்பட்டு வெயிலில் உலர்த்தி சுக்காக்கி உப்புடன் அழுந்தச் சுருட்டி உலர்ந்த இலைகளால் கட்டப்பட்டு மேலே தேன்மெழுகு பூசி காற்றுபுகாத பெரிய உருளைகளாக...