குறிச்சொற்கள் சினி

குறிச்சொல்: சினி

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-52

சஞ்சயன் சொன்னான்: பேரரசே, இன்று காலைமுதல் நிகழ்ந்துவரும் இந்தப் போரை நான் உங்களுக்கு முழுமையாக சொல்லி முடிக்க இன்னும் சில பிறவிகள் தேவையாகக்கூடும். இன்று ஒவ்வொருவரும் பலவாகப் பிரிந்தனர். ஒரே போரை வெவ்வேறு...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-37

தெய்வமெழுந்த பூசகன் என வில் நின்று துள்ள அம்புகளை தொடுத்துக்கொண்டிருந்த அசங்கன் போர்முழவில் ஒலித்தது தன் தந்தையின் பெயரென்பதை எண்ணியிராக் கணமொன்றில் ஓர் அறை விழுந்ததுபோல் உணர்ந்தான். இயல்பாக அவன் வில்லும் அம்பும்...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-36

பாண்டவர்களின் யானைப்படைக்குப் பின்னால் அணிவகுத்துச்சென்ற தொலைவில்லவர்களின் தேர்ப்படையில் அசங்கனும் இருந்தான். அவனைச் சூழ்ந்து அவன் தம்பியர் ஒற்றைப்புரவி இழுத்த விரைவுத்தேர்களில் வந்தனர். முரசுகளும் முழவுகளும் இணைந்த முழக்கம் காற்றில் நிறைந்திருந்தது. அசங்கன் திரும்பி...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-17

விண்மீன்கள் விரிந்த வானின் கீழ் விளக்கொளிகளாக அரச ஊர்வலம் வருவது தெரிந்தது. சுடர்கொண்ட கொடிகள் நுடங்கின. மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் அணுகிவந்தன. தொலைவில் வெண்குடையின் கின்னரிகள் நலுங்கிச் சுழன்றன. நின்று கண்கூர்ந்து “வருவது...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-16

அசங்கன் மூச்சுவாங்க விரைந்தோடிச் சென்று அரக்கர்நிரைமுன் வந்தவன் அருகே சிற்றுருவாக நின்று தலைவணங்கி “வணங்குகிறேன் மூத்தவரே, தாங்கள் இடும்பவனத்தின் அரசர் கடோத்கஜர் என்று எண்ணுகிறேன். நான் ரிஷபவனத்தின் சாத்யகரின் சிறுமைந்தனும் யுயுதானரின் முதல்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 13

இரவெல்லாம் புரவியிலேயே பயணம் செய்து பாண்டவர்களின் ஆணைக் கீழ் அமைந்த அனைத்து படைப்பிரிவுகளுக்கும் நேரில் சென்று நோக்கி, படைப்புறப்பாட்டை மதிப்பிட்டு செய்திகளை அரண்மனைக்குச் சென்று சகதேவனிடம் அறிக்கையிட்டுவிட்டு முன்புலரியில் சாத்யகி தன் அறைக்கு...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 9

சாத்யகி தன் மாளிகையை அடைந்தபோது தொலைவிலேயே ஊடி அமர்ந்திருக்கும் கைக்குழந்தைபோல அந்தச் சிறிய கட்டடம் ஓசையின்றி இருப்பதை கண்டான். அங்கு தன் மைந்தர்கள் இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. அவர்கள் அரண்மனையிலிருந்து திரும்பிய...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 6

ஒவ்வொருவராக வெளியேறுவதை நோக்கி அமர்ந்திருந்த சாத்யகி அசங்கனிடம் “அவையில் நிகழ்ந்த எதைப்பற்றியும் உங்களுக்குள் பேசிக்கொள்ளவேண்டியதில்லை. இங்கு நிகழ்ந்தன அனைத்தும் உங்கள் நினைவில் நின்றால் போதும். சென்று அரண்மனையில் ஓய்வெடுங்கள். நான் அரசரையும் அமைச்சர்களையும்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 4

அறையிலிருந்து அனைவரும் வெளியே சென்றதும் சாத்யகி திரும்பி அசங்கனிடம் “இங்கு நிகழ்ந்த எதையுமே அவ்வண்ணமே பொருள்கொள்ள வேண்டியதில்லை. அரசுசூழ்தலின் கணக்குகள் நம்மால் புரிந்துகொள்ள முடியாதவை. இங்கு ஏன் இளைய யாதவர் இந்தத் திருமணப்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 3

யுதிஷ்டிரர் சலிப்புடன் நகுலனிடம் “எங்கே சென்றாள்? இன்னும் வந்தணையவில்லையே?” என்றார். நகுலன் “அரசியின் இயல்பே மாறிவிட்டது. எதிர்ப்படும் அனைவரிடமும் நலம்பேசாமல் வரமுடிவதில்லை. இளையோர் என்றால் முகம் மலர்ந்துவிடுகிறது” என்றான். யுதிஷ்டிரர்  இளைய யாதவரிடம்...