குறிச்சொற்கள் சத்யவதி

குறிச்சொல்: சத்யவதி

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 70

ஏவலன் தலைவணங்கி வாயில் திறக்க விதுரர் சகுனியின் அறைக்குள் நுழைந்தபோது அவர்களிருவரும் கைகளை கட்டிக்கொண்டு நாற்களத்தை நோக்கிக் கொண்டிருந்தனர். அடுத்த நகர்வுக்காக காய்கள் காத்திருந்தன. அவர் வருகையை அவர்கள் அறிந்ததாகவே தெரியவில்லை. காலடியோசை...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 33

கன்யாகுப்ஜத்தை ஆண்ட காதி குசர்குலத்தின் முதன்மைப் பேரரசன் என்று கவிஞர்களால் பாடப்பட்டான். கங்கை ஒழுகிச்சென்ற நிலமெங்குமிருந்த பல்லாயிரம் ஊர்களில் ஒவ்வொருநாளும் ஒருமுறையேனும் அவனுடைய பேர்சொல்லி கதைகள் சொல்லப்பட்டன என்றனர் நிமித்திகர். விஷ்ணுவிலிருந்து பிரம்மன்,...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 2

பகுதி ஒன்று : மலைமுடித்தனிமை - 2 அகன்றுவிரி எழினி உவகைச் சொல்முளைத்த இதழ் என பிரிந்தகல உள்ளே ஏழடுக்கு நிலைவிளக்கு ஐம்பது நெய்த்திரிகளுடன் மலர்ச்செண்டு போல நின்றிருந்தது. இருபக்கமும் கரவெழினிக்கு அப்பால் அமர்ந்திருந்த...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 12

பகுதி மூன்று : இருகூர்வாள் - 2 குந்தியின் அரண்மனை நோக்கிச்செல்லும்போது அர்ஜுனன் கால்களைத்தான் உணர்ந்துகொண்டிருந்தான். தொடங்கிய விரைவை அவை இழக்கத்தொடங்கின. எடைகொண்டு தயங்கின. ஒரு கட்டத்தில் நின்றுவிட்டான். தொடர்ந்துவந்த சேவகனும் நின்றதை ஓரக்கண் கண்டதும் திரும்பி...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 92

பகுதி பதினெட்டு : மழைவேதம் ஏழு பாய்கள் கொண்டிருந்தாலும் காற்றே இல்லாமலிருந்தமையால் படகு துடுப்பின் விசையால்தான் கங்கையை எதிர்த்து ஓடிக்கொண்டிருந்தது. எட்டு குகர்களும் தசைகள் இறுகி நெகிழ, மூச்சு ஒன்றையே ஒலியாகக் கொண்டு,...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 91

பகுதி பதினெட்டு : மழைவேதம் கங்கையின் நீர் மேலேறி கரைமேட்டில் வேர் செறிந்துநின்ற மரங்களைத் தழுவி ஓடிக்கொண்டிருந்தது. சாலையில் வரும்போதே நீரின் குளிரை உணரமுடிந்தது. மரங்களுக்கு அப்பால் அலையடித்த நீரின் ஒளியில் அடிமரங்கள்...

வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 68

பகுதி பதின்மூன்று : தனிப்புரவி அதிகாலையில் எழுந்ததும் அகத்தில் முதலில் முளைப்பது முந்தைய நாளிரவு சிந்தனைசெய்த கடைசிச்சொற்றொடர்தான் என்பதை விதுரன் உணர்ந்திருந்தான். ஆகவே ஒவ்வொருநாளும் அலுவல்களை முடித்து கண்கள் மயங்குவதுவரை அவன் காவியத்தைத்தான்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 67

பகுதி பதின்மூன்று : தனிப்புரவி பீஷ்மர் அஸ்தினபுரியின் எல்லைக்குள் நுழைந்துவிட்டார் என்று செய்திவந்தபோதே விதுரனுக்குள் மெல்லிய பதற்றம் பரவியது. அதைவெல்ல தன்னை சுவடிகளுக்குள் செலுத்திக்கொண்டான். ஏமாற்றத்துக்கு தன்னை ஒருக்கிக்கொள்பவன்போல அந்த எதிர்பார்ப்புக்கு எதிராக எண்ணங்களைச்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 66

பகுதி பதின்மூன்று : தனிப்புரவி முதியசேடி கிரிஜை அருகே வந்து வணங்கி நின்றதை சிவை திரும்பிப்பார்த்தாள். பலவருடங்களாவே அவள் பேசுவது மிகவும் குறைந்துவிட்டிருந்தது. கேட்கவேண்டியவற்றை எல்லாம் விழிகளாலேயே கேட்பாள். சொல்லவேண்டியவற்றை சைகைகளாலும் ஒற்றைச்சொற்களாலும் அறிவிப்பாள்....

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 65

பகுதி பதின்மூன்று : தனிப்புரவி அஸ்தினபுரியின் அரண்மனை வளாகத்தின் வடக்குமூலையில் தனியாக இணைத்துக்கட்டப்பட்ட தன் சிறிய அரண்மனையின் உப்பரிகையில் அமர்ந்து அப்பால் யானைகள் நீராடச்செல்வதை சிவை நோக்கியிருந்தாள். அணிகளற்ற கரியயானைகள் தங்கள் கனத்த சங்கிலிகளை...