குறிச்சொற்கள் குங்கன்

குறிச்சொல்: குங்கன்

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 89

88. அரியணையமைதல் உத்தரன் அரண்மனைக்குள் நுழைந்து தன் அறைக்குச் சென்றதுமே “நான் சற்று இளைப்பாறவேண்டும்” என்றான். அவனுடன் வந்த படைத்தலைவன் சங்காரகன் “இளவரசே, நமக்கு பொழுதில்லை. குடியவை கூடிவிட்டிருக்கிறது. சாளரங்கள் வழியாக நம் மக்கள்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 88

87. கோட்டை நுழைவு பீடத்தை ஓங்கித் தட்டிய விராடர் “மூடர்களே… இழிமக்களே…” என்று கூவினார். ஏவலர் உள்ளே வந்து வணங்க “எங்கே? தூதுச்செய்திகள் என்னென்ன? எங்கே ஒற்றர்கள்?” என்றார். “அரசே, சற்றுமுன்னர் வந்த செய்திதான்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 84

83. படைமுகம் விராடர் தன் அருகே இருந்த பீடத்தை கையால் அறைந்து “சூக்தா, மூடா, உள்ளே வா” என்றார். கதவைத் திறந்து உள்ளே வந்த காவலனிடம் “சாளரக் கதவுகளை திறந்து வைக்கவேண்டுமென்று உன்னிடம் சொன்னேன் அல்லவா?...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 80

79. நச்சின் எல்லை பாகுகன் பெரும்பாலான பொழுதுகளில் ரிதுபர்ணனுடனேயே இருந்தான். அவன் தனியறைக்குள் பீடத்திற்குக் கீழே வளைந்த கால்களை நீட்டியபடி அமர்ந்து பெரிய பற்கள் ஒளிவிட உரத்த குரலில் பேசிக்கொண்டிருப்பான். அறைக்குள்ளேயே உடல் ததும்ப...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 76

75. காகத்தின் நகர் அரண்மனையை அடைந்ததும் தன்னைத் தொடர்ந்து பதற்றத்துடன் ஓடிவந்த பத்ரரிடம் புஷ்கரன் “புலரியில் நான் கலி ஆலயத்திற்குச் செல்லவேண்டும். அதற்குள் சற்று ஓய்வெடுக்கிறேன்” என்றான். அவனுடைய அந்த சீர்நடையும் நிகர்நிலையும் அவரை...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 75

74. நச்சாடல் ஆபர் அறைக்குள் நுழைந்ததும் விராடர் பணிவுடன் எழுந்து வணங்கி “வருக அமைச்சரே, அமர்க!” என்றார். ஆபர் தலைவணங்கி முகமன் உரைத்து பீடத்தில் அமர்ந்தார். பின்னர் “அரசே, நீங்கள் இந்நாட்டின் அரசர். நான்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 71

70. நாற்கள அவை நிழலுரு கொண்டிருந்த தமயந்தி ஒருநாள் உணவின் மணத்தால் ஈர்க்கப்பட்டு காவலர் எவரும் அறியாமல் அரண்மனை வளைவுக்குள் நுழைந்தாள். அங்கே அடுமனைப் புழக்கடையில் குவிந்திருந்த எஞ்சிய அன்னத்தை அள்ளி அள்ளி உண்டாள்....

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 64

63. களம்நிறைத்தல் காலகேயனாகிய ஜீமுதன் சந்தனமரம் பிணைந்த வேங்கைமரத்தடிபோல நரம்புகளும் தசைநார்களும் முறுகிப்பின்னி புடைத்த  இரு கைகளையும் தூக்கி காற்றில் அசைத்து, தொண்டை நரம்புகள் புடைத்து முடிச்செழ பேரொலி எழுப்பியபடி சுழன்று கூடி நின்றிருந்த...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 63

62. மற்களம் ஆபர் குங்கனின் அறை முன் நின்று தொண்டையை செருமினார். குங்கன் எழுந்து வந்து கதவைத் திறந்து அவரைக் கண்டதும் தலைவணங்கி “தாங்களா? சொல் அனுப்பியிருந்தால் வந்திருப்பேனே?” என்றான். “இளவரசர் இங்கிருக்கிறாரா?” என்றார்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 61

60. நிழலியல்கை “சூதாடுவது வெறும் ஆடலல்ல, அது தெய்வங்களை அறைகூவுதல்” என்றார் ஆபர். “தற்செயல்களுடன் மானுடன் விளையாடலாகாது. தற்செயலென்னும் வடிவில் எழுந்தருள்வதே தெய்வம்.” குங்கன் தாடியைத் தடவியபடி பெருமூச்செறிந்தான். விராடர் “ஆனால் தொன்றுதொட்டே இது...