குறிச்சொற்கள் கிருபி

குறிச்சொல்: கிருபி

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-29

காட்டுக்குள் சென்றுகொண்டிருக்கையில் கிருபர் தன் உள்ளம் மானுடருக்காக ஏங்குவதை உணர்ந்தார். நாகர்களின் அடியுலகில் இருந்தபோது அவர் மேலே வர விரும்பியது ஏன் என்று அப்போது புரிந்தது. மானுட உடல்களை விழிகள் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது....

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-31

பாண்டவர்களின் படைவிரிவை நோக்கியபடி காவல்மாடம் ஒன்றின் உச்சியில் இளைய யாதவர் நின்றிருந்தார். பிறைசூழ்கை மிக எளியது. அனைத்துப் படையினரும் இணையாக நின்றிருப்பது அது. அவ்வாறு நின்றிருக்கையில் பிறைவடிவம் இயல்பாகவே உருவாகி வரும். இரு...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 32

பகுதி ஆறு : அரசப்பெருநகர் அஸ்வத்தாமனுடன் காலையில் கங்கைக்குச் செல்லும்போது ஒவ்வொரு காலடியிலும் தன் அகம்பெருகி முழுமையடைவதுபோல துரோணர் உணர்வதுண்டு. கருக்கிருட்டு இருக்கையிலேயே எழுந்துகொள்வது அவரது வழக்கம். அவர் எழுவதற்குச் சற்றுமுன்னரே கிருபி எழுந்துவிட்டிருப்பாள்....

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 31

பகுதி ஆறு : அரசப்பெருநகர் நூறு குடும்பங்கள் மட்டும் வாழ்ந்த பிரமதம் என்னும் சிற்றூருக்கு துரோணன் கிருபியுடன் கங்கை வழியாக ஓர் உமணர்படகில் வந்து இறங்கினான். மலையில் வெட்டி எடுக்கப்படும் கல்லுப்பை ஏற்றிக்கொண்டுவந்து கிராமங்கள்...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 30

பகுதி ஆறு : அரசப்பெருநகர் இமயத்தின் அடிவாரத்தில் திருஷ்டாவதி நதிக்கரையில் பிலக்ஷவனம் என்னும் காட்டுக்குள் இருந்த சரத்வானின் தவச்சாலைக்கு ஆஷாடமாதத்து இளமழை பெய்துகொண்டிருந்த ஒரு காலைநேரத்தில் துரோணன் சென்று சேர்ந்தான். கீழே திருஷ்டாவதி...