குறிச்சொற்கள் கிருதர்

குறிச்சொல்: கிருதர்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–86

86. சூழ்மண் காலடியோசை கேட்க தேவயானி சீற்றத்துடன் திரும்பி வாயிலில் வந்து தலைவணங்கிய யயாதியை பார்த்தாள். அவன் தலைக்குமேல் கூப்பிய கைகளுடன் உள்ளே வந்து எட்டு உறுப்புகளும் நிலம்படிய விழுந்து சுக்ரரை வணங்கி முகம்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–85

85. இறுதி நஞ்சு ஹிரண்யபுரியை அடைய ஒரு நாள் இருக்கையில்தான் யயாதி குருநகரியிலிருந்து கிளம்பி தன்னைத் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதை தேவயானி அறிந்தாள். அவன் பெயர் நீண்ட இடைவேளைக்குப்பின் காதில் விழுந்ததும் ஒரு திடுக்கிடலை உணர்ந்தாள்....

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–69

69. எண்ணுவதன் எல்லை யயாதி மலர்க்காட்டுக்குள் சென்று நின்று திகைத்து சுற்றிலும் பார்த்தான். உள்ளத்தில் மானுடப்புழக்கமிருப்பதாக பதிந்திருந்த இடத்தில் அது இல்லாதது அளித்த வெறுமையை வெல்ல “சென்றுவிட்டார்கள்” என்றான். பார்க்கவன் கூர்ந்து தரையைப் பார்த்து...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–67

67. வேள்விக்குதிரையின் கால்கள் குருநகரியின் சந்திரகுலத்து அரசன் யயாதி சர்மிஷ்டையை மணங்கொள்ளவிருக்கும் செய்தி ஹிரண்யபுரியை பெருங்களியாட்டு நோக்கி கொண்டுசென்றது. சம்விரதரும் உடன்சென்ற அணிப்படையினரும் மீண்டு வருவதை முறைப்படி அறிவிக்கவில்லையென்றாலும். அரண்மனையிலிருந்து அப்பேச்சு வெளியே செல்வதற்கு...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–66

66. கிளையமர்தல் சர்மிஷ்டையை தான் எந்த வகையிலும் பொருட்படுத்தவில்லை என்று தேவயானி எண்ணினாள். அதையே ஒவ்வொரு அசைவிலும் வெளிக்காட்டிக் கொண்டாள். பரிவையும் ஏளனத்தையும் கலந்து மிகக் கீழிறங்கிவரும் தன்மையில் அவளிடம் உரையாடினாள். ஆனால் தனிமையில்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–62

62. புதுப்பொற்கதிர் இருளும் குளிரும் சுற்றியிருந்த காட்டிலிருந்து கிளம்பி குடில்களை சூழ்ந்துகொண்டபோது அடுமனைப்பெண் தேவயானியை நோக்கி “இன்னமும் அப்படியே நின்றிருக்கிறார். அவர் அங்கே நிற்கும்போது இங்கு என்னால் துயில முடியாது. நான் சென்று அழைக்கப்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–61

61. தென்முனைக்கன்னி அன்று இரவு முழுக்க அவள் இனித்துக்கொண்டே இருந்தாள். உடலே தேனில் நாவென திளைத்தது. மாலையில் சிவந்து உருகி முறுகி இருண்ட ஒளி, மயங்கி எரிந்து அணைந்த மரங்கள், அந்தியின் இளநீராவிக்காற்று, எழுந்து...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–60

60. கனவுக்களப் பகடை அன்றும் தேவயானி பின்காலையில் படுத்து உச்சிப்பொழுதுக்குப் பிறகுதான் துயின்றெழுந்தாள். முந்தைய நாள் துயின்ற பொழுதை உடல் நினைவில் பதித்திருக்க வேண்டும். அந்த நேரம் வந்ததுமே இனியதோர் சோர்வு உடலில் படர்ந்தது....

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–59

59. மலர்மருள் வேங்கை தன் மஞ்சத்தில் கசனை துயிலவிட்டு அறைமூலையில் கால்களை நீட்டி அமர்ந்தபடி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் தேவயானி. அவன் பெருமூச்சுகள் விட்டபடி உடல் இறுகியும் அறியாது மெல்ல தளர்ந்தும் மீண்டும் இறுகியும் புரண்டுபடுத்தும்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–58

58. முள்நுனிக் காற்று அன்று பகல் முழுக்க தேவயானி ஆழ்ந்த அமைதியின்மை ஒன்றை தன்னுள் உணர்ந்துகொண்டிருந்தாள். தந்தையின் பயிற்றறைக்குச் சென்று அவர் கூறியவற்றை ஏட்டில் பொறிப்பது அவள் காலைப்பணிகளில் முதன்மையானதாக இருந்தது. அவர் குரலும்...