குறிச்சொற்கள் கின்னரஜன்யர்

குறிச்சொல்: கின்னரஜன்யர்

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 82

கைலைமலைத் தாழ்வரையில் உச்சிவெயில் எழுந்ததுமே பொழுது இறங்கத்தொடங்கிவிட்டது. பறவைகளின் ஒலிகள் சுதிமாறி, காற்றில் குளிர் கலந்தது. கதிர் சரிந்துகொண்டிருக்கும்போதே வேட்டைவிளைகளுடன் காலர்கள் வரலாயினர்.  மான்கள், பன்றிகள், காட்டுஆடுகள், மிளாக்கள் குருதியுறைந்து விழிவெறித்து நாசரிய...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 76

வெண்பனி ஒளிகொண்டு ஊரை மூடியிருந்த முதற்காலையில் அர்ஜுனன் தன் சிறுகுடிலில் இருந்து கதவைத்திறந்து மென்மயிர்த்தோலாடை உடல்மூடியிருக்க வெண்குஞ்சித் தலையணி காற்றில் பிசிற வெளியே வந்தான். தோளில் வில்லும் அம்புறையும் அமைந்திருந்தன. அவனைக் காத்து...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 75

காலையில் பார்வதி அர்ஜுனனைத் தொட்டு “புலர்கிறது, இங்கு மிக முன்னதாகவே காலையொளி எழுந்துவிடும்” என்றாள். அவன் திடுக்கிட்டு விழித்தெழுந்து உடல்நடுங்க காய்ச்சல் படர்ந்த விழிகளால் அவளை நோக்கினான். “என்ன?” என்றாள். “இல்லை” என...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 74

பன்னிருநாட்கள் அர்ஜுனன் கின்னரஜன்யர்களின் மலைச்சிற்றூர்களில் தங்கினான். அவன் காவலனாக அமைந்த வணிகக்குழு ஏழாகப் பிரிந்து ஏழு அங்காடிகளுக்கும் சென்றது. கின்னரர் கொண்டுவந்து அளித்துவிட்டுப்போன அருமணிகளில் சிறந்தவற்றை தாங்களே கொள்ளவேண்டுமென்ற போட்டி வணிகர்களிடையே இருந்தது....

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 73

பீதர்நாட்டு வணிகர்களுடன் மகாநாகம் வந்து காமரூபம் வழியாக இமயமலையடுக்குகளுக்குமேல் ஏறிய அர்ஜுனன் அங்குதான்   வெண்சுடர் கின்னரர்களின் உச்சிநிலம் குறித்து கேட்டறிந்தான். பீதவணிகர் ஆண்டுதோறும் கோடைகாலத்தின் தொடக்கத்திலேயே அத்திரிகள் சுமக்கும் வணிகப்பொருட்களுடன்  மலையடுக்குகள்மேல் ஏறிச்சென்று...