குறிச்சொற்கள் இந்திரப்பிரஸ்தம்

குறிச்சொல்: இந்திரப்பிரஸ்தம்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 36

பகுதி நான்கு : அன்னையெழுகை – 8 யுயுத்ஸு திரௌபதியின் விழிகளை பார்த்துக்கொண்டிருந்தான். தான் பேசும் சொற்கள் அவளை சென்றடைகின்றனவா என்று ஐயுற்றான். திரௌபதி பிறர் பேசும்போது எப்பொழுதும் சற்றே விழிகளை சரித்து வேறெங்கோ...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 35

பகுதி நான்கு : அன்னையெழுகை – 7 இந்திரப்பிரஸ்தத்தில் தன் அரண்மனை அறையில் யுயுத்ஸு ஆடியின் முன் நின்று ஆடைகளை சீர்படுத்திக்கொண்டான். அவனே தன் ஆடைகளை அணிந்திருந்தான். பிறர் உதவியின்றி அணியாடைகளை அணிவது அவனுக்கு...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 34

பகுதி நான்கு : அன்னையெழுகை – 6 இந்திரப்பிரஸ்தத்தின் தெற்குக் கோட்டைவாயிலை தொலைவிலேயே யுயுத்ஸு பார்த்தான். அஸ்தினபுரியின் கோட்டைவாயிலைவிட பலமடங்கு பெரியது. மாபெரும் கற்களை வெட்டி ஒன்றன்மேல் ஒன்றென அடுக்கி எழுப்பப்பட்ட அடித்தளக் கோட்டைக்கு...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 33

பகுதி நான்கு : அன்னையெழுகை – 5 இந்திரப்பிரஸ்தத்தின் பெரும்படித்துறையில் நீர் தெரியாமல் படகுகள் செறிந்து நின்றிருப்பதை தொலைவிலேயே யுயுத்ஸு கண்டான். காற்றில் பறந்த மேலாடையை உடலில் சுற்றிக்கொண்டு படகின் வடத்தைப் பிடித்து சற்றே...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 8

பிறை விளக்குகளின் சிறுசுடர்கள் நடுங்கி விரித்த ஒளியில் எழுந்து சுழன்ற நிழல்கள் தொடர காவலனுக்குப் பின்னால் சாத்யகி நடந்தான். அவனுக்குப் பின்னால் இரு ஒற்றர்களும் நிழல்களென ஓசையின்றி வந்தனர். அறைகள் அனைத்திலும் பெண்களிருப்பதை...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 7

சாத்யகி கிளம்பி மாளிகையிலிருந்து வெளியேவந்து புரவியில் ஏறும்பொருட்டு காலைத்தூக்கி சேணத்தில் வைத்தபோது ஓர் எண்ணம் எழுந்தது. புரவி உபப்பிலாவ்யத்தின் கோட்டையைக் கடந்ததும் நேராகச் செல்லும் மையப் பாதையில் இருந்து விலகி பக்கவாட்டில் சென்ற...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 79

எட்டு : குருதிவிதை - 10 சகுனி கிழக்குக் கோட்டையை அடைந்தபோது அங்கே பல்லக்கு நிற்பதை கண்டார். புரவியை இழுத்து விரைவழிந்து பல்லக்கை நோக்கியபடி சென்றார். அது விதுரரின் பல்லக்கு என்று அணுகிய பின்னர்தான்...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 75

நிமித்திகர் சுதாமர் பன்னிரு களத்தில் ஒவ்வொன்றாக கைதொட்டுச் சென்று கண்மூடி ஒருகணம் உள்நோக்கி விழிதிறந்து “மீன் எழுந்து அமைந்துவிட்டது. களம் நிறையக்காத்துள்ளது. அமுதமாகி எழுக!” என்றார். சௌனகர் மெல்லிய குரலில் “நன்று சூழும்...

வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 66

துரியோதனனின் புரவி யமுனையை அடைந்ததும் நில்லாமல் பக்கவாட்டில் நீர்ப்பெருக்குக்கு இணையாகச் சென்ற பெருஞ்சாலையில் திரும்பி அங்கு கரைமுட்டி பெருகிச் சென்றுகொண்டிருந்த மக்கள்திரளில் மறைந்ததும் கர்ணன் தன் புரவியின் சேணத்தின்மேல் காலூன்றி எழுந்து தொலைவில்...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 63

பகுதி பத்து : தை இந்திரப்பிரஸ்தத்தின் அரசவிருந்தினர்களுக்கான மாளிகைநிரையின் இறுதியில் அமைந்திருந்த துரியோதனனின் மாளிகையின் முன்பு முதற்புலரியிலேயே  சகட ஒலி சூழ தேர்கள் வந்து நின்றன. துர்மதனும் துச்சலனும் துர்முகனும் இறங்கினர். அவர்களுக்குப் பின்னால்...