குறிச்சொற்கள் அரவான்

குறிச்சொல்: அரவான்

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–83

பகுதி எட்டு : சொல்லும் இசையும் - 2 அர்ஜுனன் சிற்றோடைக்கரையில் நீர்மருத மரத்தின் வேரில் உடல் சாய்த்து கால் நீட்டி படுத்திருந்தான். அவன் கால்களைத் தொட்டு ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அதில் மிதந்து வந்த...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-88

சஞ்சயன் சொன்னான்: அரசே, குருக்ஷேத்ரக் களத்தில் பொடியும் புகையும் மெல்ல அடங்கிக்கொண்டிருப்பதை இப்போது பார்க்கிறேன். முகில்கள் பெய்தொழிந்து வான் வெளுப்பதுபோல் அங்கே ஒவ்வொரு வீரராக தோன்றுகிறார்கள். அதுவரை அங்கு படைகள் மோதிக்கொண்டிருந்தன. அப்படைகளுக்குள்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-87

அஸ்வத்தாமன் அணுகி வருந்தோறும் புரவிக்கனைப்பொலி பெருகிப் பெருகி வந்தது. அது நான்குபுறங்களிலும் இருந்து எழுந்து அவர்கள் அனைவரையும் சூழ்ந்தது. சகதேவன் அச்சத்துடன் “மூத்தவரே…” என்றான். யுதிஷ்டிரர் “யாதவனே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-72

சுதசோமன் பீமனை நோக்கி விரைந்துசெல்ல அவனுடன் சர்வதனும் சுருதசேனனும் இருபுறங்களிலுமாக வந்தனர். பீமனை அறைந்து பின்னடையச் செய்துகொண்டிருந்தன கர்ணனின் அம்புகள். அவன் தேர் முழுக்க அம்புகள் தைத்து நாணல்கள் என செறிந்து நின்றிருந்தன....

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-62

அரவான் சொன்னான்: தோழர்களே, அரவுகளுக்குரியது விழியும் செவியும் ஒன்றாகும் ஸ்ரவ்யாக்ஷம் எனும் யோகம். காட்சிகளை ஒலியென்று அறியவும் ஒலிகளை காட்சிகளாக விரிக்கவும் அவர்களால் இயலும். நாகர்குலத்து அன்னை உலூபியிலிருந்து இளைய பாண்டவர் அர்ஜுனர்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-51

அரவான் சொன்னான்: நாகர்களே, கேளுங்கள். இன்று கௌரவப் படையின் அணிகுலைத்து கௌரவர்கள் நால்வரின் குருதியை உடலெங்கும் அணிந்து பாதாளத்திலிருந்து எழுந்து வந்த கொடுந்தெய்வம்போல் வெறித்த விழிகளும் விரித்த வாயுமாக கைகளில் நிணம் வழுக்கும்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-49

அரவான் சொன்னான்: ஜயத்ரதனை அள்ளித் தூக்கிக்கொண்ட அதலன், அஹோரன் முதலிய ஏழு மாநாகங்கள் பன்றிவடிவ முகம்கொண்டு தேற்றைகளால் மண்ணைப்பிளந்து உள்ளே கொண்டுசென்றன. பிளந்து பிளந்து அவை செல்லச்செல்ல இருள் எடைகொண்டதுபோல் ஆழம் வந்து...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-48

ஏகாக்ஷர் சொன்னார்: மீண்டும் வில்லவர் எழுவரும் ஒன்றென்றாகி நிரை வகுத்தனர். அப்பால் பீமனை பால்ஹிகர் எதிர்த்துக்கொண்டிருக்கும் செய்தியை முரசுகள் அறிவித்தன. திருஷ்டத்யும்னனும் சாத்யகியும் துரியோதனனையும் துச்சாதனனையும் எதிர்த்துக்கொண்டிருந்தனர். “இன்னும் சற்றுபொழுது! இதுவரை வந்துவிட்டோம்!...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-46

பார்பாரிகன் சொன்னான்: இடும்பர்களே கேளுங்கள்! அன்று புலரி எழும் பொழுதில் கௌரவ அரசன் துரியோதனனின் தனிக்குடிலுக்குள் துரோணர், கிருபர், சல்யர், கர்ணன், அஸ்வத்தாமன், பூரிசிரவஸ், கிருதவர்மன் என ஏழு வில்லவர்களும் கூடி அமர்ந்திருந்தனர்....

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39

நாகக் களமுற்றத்தில் அமர்ந்து அரவான் சொன்னான். நான் இப்போது நூற்றெட்டு இதழ்களுடன் விரிந்த பெருந்தாமரையின் இதழ்கள் ஒன்றன்மீது ஒன்றென மெல்ல படிந்து ஒற்றை வளையமென்றாகி குவிந்து மொட்டாகி இறுகி செண்டாகி மணியாகி மூடிக்கொள்வதை...