ஜெ, சாமிநாதனைப்பற்றிய உங்கள் குறிப்புகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நன்றி. சாமிநாதனுக்கு இன்றுள்ள இடம் என்ன? அவர் சென்றகாலத்தைய ஓர் அறிஞர் மட்டும்தானா? ராஜாராம் [எம் ஏ நுஃமான்] அன்புள்ள ராஜாராம், எந்த விமர்சகரும் ஒரு காலகட்டத்தைச் சேர்ந்தவர்தான். மாபெரும் விமர்சகர்களான டி.எஸ்.எலியட், ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ், ஹரால்ட் ப்ளூம் அனைவருக்கும் இது பொருந்தும். ஏனென்றால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுப்பரப்பில் ஒரு காலகட்டத்தில் நின்று பேசியவர்கள். இலக்கியம் மட்டுமே மானுடக் கனவு என்னும் அகாலத்தில் நின்று பேசுகிறது. வெங்கட் சாமிநாதன் எழுபது …
Tag Archive: சிவத்தம்பி
Permanent link to this article: https://www.jeyamohan.in/80088
பின்நவீனத்துவம் -விளையாட்டுக்கையேடு
பின்நவீனத்துவம் என்பது பொதுவாக ஒரு மிரட்டுவதற்குரிய சொல்லாகவே இங்கே அறிமுகமாகியது. அதை அன்றைய சூழலை அறிந்து , அது உருவான பினன்ணியைப் புரிந்துகொண்டு பேசாமல் சிக்கலான மொழியாக்க நடையில் எழுதப்பட்ட நீள்கட்டுரைகள் வழியாகவும் தூக்கிவீசும் ஒற்றை வரி விமர்சனங்கள் வழியாகவும் முன்வைத்தார்கள். அன்று இணையம் போன்ற தொடர்புவசதிகள் இல்லாதிருந்தமையால் நூல்களும் பெயர்களும் மிரட்சி அளிப்பவையாக இருந்தன. ஒரு தேனீர்க்கோப்பைப் புயலாக அது நிகழ்ந்து முடிந்தது காரணம் முதன்மையாக இங்கே நவீனத்துவம் சார்ந்த விவாதங்களே அதுவரை பெரியதாக நிகழவில்லை …
Permanent link to this article: https://www.jeyamohan.in/74687
அஞ்சலி – எஸ்.பொ
ஈழ இலக்கியத்தின் முதன்மைப்படைப்பாளிகளில் ஒருவரான எஸ்.பொன்னுத்துரை ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நவம்பர் 26-ஆம் தேதி இரவு 11 மணிக்கு காலமானார். அவருக்கு என் அஞ்சலி. ஈழ இலக்கியத்தின் கலகக்குரலாக ஒலித்தவர் எஸ்.பொ. அன்று ஈழ இலக்கியத்தை மூடியிருந்தது கைலாசபதி, சிவத்தம்பி இருவராலும் முன்வைக்கப்பட்ட முற்போக்கு எழுத்தின் முன்வடிவம். அதுவன்றி வேறு எழுத்தே இல்லை என்ற நிலை. அதையொட்டி செய்யப்பட்ட போலி எழுத்துக்களின் பெருக்கத்தை மீறி உண்மையான உணர்ச்சிகள் இலக்கியத்தில் இடம்பெறவே முடியாத சூழல். இடம்பெற்றாலும் அவை ‘அரசியல்சரி’ …
Permanent link to this article: https://www.jeyamohan.in/66446
தமிழில் இலக்கிய விமர்சனம்
திரு ஜெயமோகன் அவர்களுக்கு, தமிழில் இன்று இலக்கியத் திறனாய்வு என்பது எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது? அது ஒரு தனிக் கலையாக இன்று நிற்கிறதாகக் கருதுகிறீர்களா? தீவிரமாகவும் ஆழமாகவும் செய்பவர்கள் யார்? யாருடைய திறனாய்வையாவது வாசிக்க சிபாரிசு செய்ய இயலுமா? ராம்குமார் சாத்தூரப்பன் அன்புள்ள ராம்குமார் தமிழில் தொன்மையான திறனாய்வு முறைமை ஒன்று இருந்துள்ளது. நூல்களை சபை நடுவே அரங்கேர்றம்செய்யும் முறை இருந்தது, அது ஒரு திறனாய்வுமேடையே. அந்தத் திறனாய்வுகள் பதிவாகவில்லை நம்முடைய உரைகளைத் திறனாய்வு முறைகளில் ஒன்றாகக் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/20586