குறிச்சொற்கள் எச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள்
குறிச்சொல்: எச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள்
எச்.எஸ்.சிவப்பிரகாஷ் கவிதைகள்-3
1.இரவு முழுதும்
இரவு முழுதும்
ஓவென்ற காற்றின் ஊளை
உடல்மீது பாய்வதுபோல இருந்தது
இந்நேரம்
சுக்குநூறாகச் சிதைந்திருக்கலாம்
என் வாடகை வீடு
பகல் முழுதும்
பொழிந்தபடியே இருந்தது
மழைமழைமழை
இந்நேரம்
கரைந்துபோயிருக்கலாம்
என் வாடகை வீடு
இந்தக் கோடை முழுவதும்
எரிந்தபடியே இருந்தது
வானுயர்ந்த நீல அடுப்பு
இந்நேரம்
எரிந்து பொசுங்கியிருக்கலாம்
என் வாடகை வீடு
குளிர்காலம் முழுவதும்
கவிந்து மூடிக்கொண்டிருந்தது
கடுமையான...
எச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள்-2
இத்தருணங்கள் அழியாமல்
இருக்க வேண்டும்….
அழியாமல் இருக்க வேண்டும்
இத்தருணங்கள்
குன்றின் உச்சியில்
மைல் நீளஇறக்கைபோல் மேகமிருந்தாலும்
சிலைபோல இருக்கும் பாறைகள்
நீலம் பச்சை நடுவில்
ஜோடி வானவில்கள்
ஜோடிக் குருவிகளே
வானைத் துளைத்து பாடிப்பறங்கள்
பறவை மொழியைக் கற்ற சாலமன்
இப்போது சக்ரவர்த்தி
அழியாமல் இருக்கட்டும் இத்தருணங்கள்
தாளமற்ற ஆட்டம்
மேளமற்ற பாட்டு
துடிக்கும்...