தினசரி தொகுப்புகள்: May 9, 2020
சீட்டு [சிறுகதை]
“அவன் விட்டாத்தானே?” என்று அழகப்பன் சொன்னான். “அவன் பேசிட்டிருக்கிறதை கேட்டேன். ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கிற மாதிரி தெரிஞ்சுது.”
“ஏன்?” என்று உமையாள் கேட்டாள். அவள் மூக்கைச் சுளித்தபடி அதைக் கேட்டபோது கண்களில் வந்த மங்கல்...
மூன்று வருகைகள்- கடிதங்கள்
மூன்று வருகைகள்.
அன்பு ஜெ,
நலமா?
இன்று தங்களின் மூன்று வருகைகள் வாசித்தவுடன், தேவதேவன் அவர்களின் கவிதை ஒன்று நினைவிற்கு வந்தது அது,
ஒரு சிறு குருவி
என் வீட்டுக்குள் வந்து
தன் கூட்டைக் கட்டியது ஏன்?
அங்கிருந்தும்
விருட்டெனப் பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு?
பார்...
நஞ்சு, காக்காய்ப்பொன் -கடிதங்கள்
நஞ்சு
அன்புள்ள ஜெ
இந்தக்கதைகளின் விதவிதமான கருக்கள், களங்கள் மட்டுமல்ல மட்டுமல்ல வாழ்க்கைப்பார்வைகளும் மாறிக்கொண்டே இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. உங்களுக்கென வாழ்க்கைப்பார்வை ஏதுமில்லையா என்ற கேள்வி எழுகிறது. வாழ்க்கைப்பார்வை என்ற ஒன்றில் கட்டுண்டது அல்ல...
இறைவன், துளி- கடிதங்கள்
துளி
அன்புள்ள ஜெ,
திருவரம்புக் கதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். துளி அதில் ஓர் உச்சம். மிகமிக எளிமையான சொற்களில் ஒரு கொண்டாடமான சூழலைச் சொல்லிக்கொண்டே செல்கிறீர்கள். மனிதர்கள், விலங்குகள். அனைத்தையும் பிணைத்திருக்கும் எளிமையான அன்பு.
இந்த எளிமையான...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–56
பகுதி ஐந்து : எரிசொல் - 2
அவந்தியில் இருந்து துவாரகைக்கு வரவேண்டியிருந்த வணிகக்குழுவினர் எதிர்க்காற்றில் புழுதி இருந்தமையால் சற்று பிந்தினர். ஆகவே அவர்களுக்கு முன்னரே எழுந்து நடந்து நகருக்கு வந்த விஸ்வாமித்ரர் கோட்டைமுகப்பில்...