2018 July
மாதாந்திர தொகுப்புகள்: July 2018
தணியாத தாகம்
தன்னை தனியனாகவும் உணர்வுகளால் நிறைந்தவனாகவும் உணரும் ஒருவன் முன்பு தான் கண்ட ஒரு பெண்ணை நினைத்துக்கொள்கிறான். அவளை ஒரு குளக்கரையில்தான் முதலில் அவன் காண்கிறான். அரசமரப்படித்துறையில் அவள் துணிதுவைத்துக்கொண்டிருக்கிறாள். அருகே ஒரு குடியானவப்பெண்...
மாத்ருபூமி பேட்டி -கடிதங்கள்
மாத்ருபூமி பேட்டி
அன்புள்ள ஜெ அவர்களுக்கு
July 29 மாத்ருபூமி இதழில் வெளியான உங்களின் விரிவான பேட்டியை தமிழில் வாசிக்க காத்திருக்கிறேன் ஆவணம் செய்யவும்
பிரியமுடன்
சக்தி
(குவைத்)
அன்புள்ள சக்தி
அந்தப்பேட்டி வழக்கமானதுதான். அதில் தமிழ் வாசகர்கள் அறிந்துகொள்ளவேண்டிய புதிய செய்திகள்...
ஊர்வன்களின் உலகம்!
அன்புள்ள ஜெ
https://youtu.be/Tt8ONu-slSM
இந்த காணெளிக்காட்சியை கண்டவுடன் ஏற்பட்ட சிரிப்பை அடக்க முடியாமல் தங்களுக்கு இதை அனுப்புகிறேன். கூடிய விரைவில் கீழ்காணும் கடிதம் போன்றதை யாரேனும் ஒருவர் உங்களுக்கு அனுப்புவார்.அதனால் பதிலை இப்போதே பதிவுசெய்து வைத்திருக்கவும்.
..........................................................
அன்புள்ள...
வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 61
யுதிஷ்டிரரின் அவைமாளிகையை அங்கிருந்து நோக்க முடிந்தது. அவர்கள் அமர்ந்திருந்த கூடமும் ஒழுகியமையால் அது அசைவிலாது நிற்பதுபோலவும் அப்பாலுள்ள வான்புலத்தை நோக்கியபோது ஒழுகுவதுபோலவும் விழிகளுடன் விளையாடியது அது. அதன் பேருருவே அது அசையாது என்னும்...
எஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது
யு. ஆர். அனந்தமூர்த்தியும் எஸ். எல். பைரப்பாவும் கன்னட மொழியில் இரு துருவங்களாக கருதப்படுகிறார்கள். அனந்தமூர்த்தியின் மேற்கத்திய மனம் சார்ந்த அணுகுமுறையை பைரப்பா கடுமையாக எதிர்ப்பார். (நான் `பார்க்க` நேர்ந்த அனந்தமூர்த்தியின் கட்டுரையன்றில்...
கல் அழகுறுதல்
கம்போடியா பயணம்
அன்புள்ள ஜெயமோகன் சார்,
"கம்பொடியாவில் நல்ல மழை. நனைந்தபடித்தான் ஆலயவளாகத்தைப் பார்க்கவேண்டும் என்றனர். மழை கல்லுக்கு மிகவும் பிடித்தமானது. கல் அழகுகொள்வது நனையும்போதுதான்".
அப்படித்தான் இருந்தது சில நாட்கள் முன்பு தஞ்சாவூர் கோவிலில் மழை...
பிழை -கடிதம்
பிழையின் படைப்பூக்கம்
வணக்கம் திரு ஜெயமோகன்
தளத்தில் தொடர்ந்து வந்த கடிதங்கள் மூலம் பிழை சிறுகதையை அடைந்தேன். படிக்கையில் ஸ்டீபன் ஸ்வெய்க் எழுதும் கதைகளை படிக்கும் ஒரு அனுபவம் ஏற்பட்டது. ஸ்வெய்கின் பெரும்பாலான கதைகள் இருவருக்குள்...
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 60
காலையில் முதற்புலரியில் கரிச்சான் குரலெழுப்பும்போதே விழித்துக்கொண்ட ஸ்வேதன் தன்னைச் சுற்றி நிழல்கள்போல பாண்டவர்களின் படை அசைந்துகொண்டிருப்பதை கண்டான். எழுந்தமர்ந்தபோது பல்லாயிரக்கணக்கான பந்தங்களின் ஒளியில் உருவங்களும் நிழல்களும் இணைந்து பலமடங்காக பெருகிய படை பறவைமுழக்கம்போல்...
மாத்ருபூமி பேட்டி
இன்றைய மாத்ருபூமி நாளிதழில் வெளிவந்துள்ளது இந்த வாழ்வுவிவரிப்பு. எனக்கும் அருண்மொழிக்குமான காதல், எங்கள் மணவாழ்க்கை, அத்துடன் என் இலக்கியம் ஆகியவற்றை தொட்டுச்செல்லும் விரிவான பேட்டி. பேட்டியாளர் அருண் கோபி
என்மொழியே
வாசிப்பும் அ.முத்துலிங்கமும்
கணினியில் எழுதுவது…
அன்புள்ள ஜெ
கணினியில் எழுதுவது பற்றி நீங்கள் எழுதிய குறிப்பை வாசித்தேன். அ. முத்துலிங்கம் எழுதிய இந்தக்கட்டுரையை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்
வாசகர் தேவை
ஜெயராமன்
அன்புள்ள ஜெயராமன்,
அ.முத்துலிங்கம் அவருக்குரிய நையாண்டியுடன் இன்றைய எழுத்து வாசிப்புச்...