தினசரி தொகுப்புகள்: April 14, 2017
கால்கள், பாதைகள்
அன்புள்ள ஜெ.,
எலியட்டின் கட்டுரைத்தொகுப்பு நூலை வாசிக்கத்தொடங்கியுள்ளேன். ஒரு கட்டுரையில், எழுத்தாளருக்கு கட்டாயமாக இருக்கவேண்டிய இலக்கியம் சார்ந்த வரலாற்று நோக்கை பற்றி பேசுகிறார். எந்த ஆக்கமும் தனித்து நிற்பதில்லை; அந்தச்சூழலின், அந்த மொழியின், அந்தக்கலாசாரத்தின்...
அனல் காற்று , சினிமா- கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
அனல் காற்று மனதிற்கு நெருக்கமான வாசிப்பாய் அமைந்தது. அம்மா மனைவி நான் என்னும் சதுரங்க ஆட்டத்தை, கொஞ்சமேனும் விலகி நின்றுப் பார்க்க உதவியது. ஆழ் மனதின் விசித்திரங்களை நீங்கள் தொட்டு...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–73
73. சொற்றுலா
தேவயானியை யயாதி மணந்த நிகழ்வு பாரதவர்ஷம் முழுக்க கதைகளாக பரவிச்சென்றது. ஒவ்வொரு நாளும் மலையடுக்கிலிருந்து எதிரொலி மீள்வதுபோல அக்கதைகளிலொன்று அவனிடமே திரும்பி வந்துகொண்டிருந்தது. “நூறாயிரம் முறை பிறந்து நூறாயிரம் தேவயானிகளை நான்...