வெண்முரசு வெய்யோன்

வெய்யோன்

வெய்யோனொளியில்…

கர்ணனைப்பற்றிய நாவல் இது.வெண்முரசு நாவல்களை நான் செவ்வியலின் வெவ்வேறு வடிவங்களாகவே உள்ளூர உருவகித்திருக்கிறேன். செவ்வியல் என்பது அனைத்துவகையான புனைவுவகைகளுக்கும் உள்ளே இடமளிப்பது. அதன் இயல்பே தொகுப்புத்தன்மைதான். அதற்குள் ஒருமையையும் ஒத்திசைவையும் அது அடையமுயல்கிறது....

வெய்யோன், எண்ணை, மரபு

வெண்முரசு நாவல்வரிசையின் ஒன்பதாவது நாவலான வெய்யோன் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. எண்ணியவற்றை எண்ணாதவை வென்றுசெல்லும் புனைவுப்பெருக்கு இந்நாவலிலும் நிகழ்ந்ததை நிறைவுடன் எண்ணிக்கொள்கிறேன். பிறாநாவல்கள் எவற்றையும் விட உளவலியும் துயரமும் அளிப்பதாக இருந்தது வெய்யோன். கர்ணனுடன்...

’வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 79

பகுதி பத்து: நிழல்கவ்வும் ஒளி- 3 புரவி துணிகிழிபடும் ஓசையில் செருக்கடித்ததைக்கேட்டு கர்ணன் விழித்தெழுந்தான். அந்த உளஅசைவில் சற்றே இருக்கை நெகிழ்ந்து மீண்டான். கடிவாளத்தைப் பற்றியபடி விழிதூக்கி நோக்கினான். விண்ணில் ஒரு புள் முரசுத்தோல்...

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 78

பகுதி பத்து   : நிழல்கவ்வும் ஒளி- 2 இந்திரப்பிரஸ்தத்தின் தெருக்களை புரவி நன்கறிந்திருந்தது. அவன் உள்ளத்தையும் கால்களினூடாக அது உணர்ந்து கொண்டிருந்தது. சீரான பெருநடையில் மையச்சாலையை அடைந்து சாலையோரங்களிலும் இல்லமுகப்புகளிலும் கடையின் ஓரங்களிலும்...

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 77

பகுதி பத்து: நிழல் கவ்வும் ஒளி- 1 தேர் வரைக்கும் துரியோதனனை கர்ணன் தன் தோள்வல்லமையால் தூக்கிக்கொண்டு சென்றான். துரியோதனனின் குறடுகள் தரையில் உரசி இழுபட்டன. நோயுற்றவனைப்போல மெல்ல முனகிக்கொண்டிருந்தான். துச்சாதனன் இயல்படைந்து துரியோதனனின்...

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76

பகுதி ஒன்பது – மயனீர் மாளிகை -  13 இரு தாமிரக்கதவுகள் உள்ளங்கைக்குடுமிக்குழிகளில் உருளைகள் வழுக்கிச்சுழன்று ஓசையின்றி விரியத்திறக்க பேரமைச்சர் சௌனகரும் மறுபக்கம் அமைச்சர் சித்ரகரும் நின்று அனைவரையும் உண்டாட்டு அறைக்கு வரவேற்றனர். “வருக!...

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 75

பகுதி ஒன்பது : மயனீர் மாளிகை – 12 துரியோதனன் திகைத்து மாளிகையின் சுவர்களை நோக்கி “ஆசிரியரே” என்றான். திரும்பி கர்ணனிடம் “என்ன நிகழ்கிறது அங்கரே?” என்று கூவினான். கர்ணன் தன் விழிகளை வேற்றிருப்புகளென...

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 74

பகுதி ஒன்பது : மயனீர் மாளிகை – 11 துரியோதனனுடன் இந்திரப்பிரஸ்தத்தின் அரசப்பெருவீதிகளின் வில்வளைவுகளினூடாக சுழன்று மேலேறிச் சென்றுகொண்டிருந்த கர்ணன் கைகளைக் கட்டியபடி குழலும் மேலாடையும் பறக்க தேர்த்தட்டில் அசையாமல் நின்று நோக்கில்லா நோக்குடன்...

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 73

பகுதி ஒன்பது : மயனீர் மாளிகை - 10 மஞ்சத்தறையின் எடைமிக்க கதவு கிரீச்சிட்டு திறக்க, அழுந்தி ஒலித்த காலடிகளுடன் உள்ளே வந்த முனிவரை காய்ச்சல் படிந்த கண்களால் கர்ணன் நிமிர்ந்து நோக்கினான். மரவுரி...

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 72

பகுதி ஒன்பது : மயனீர் மாளிகை - 9 விழிகொண்ட நாள்முதல் பச்சை நிறமன்றி பிறிதொன்றை அறியாதவர்கள் காண்டவத்து தட்சநாகர்கள். அங்கு இருளும் ஒளியும் ஆகி நின்றது பசுமையே. அனலென்று அவர்கள் அறிந்ததெல்லாம் இலைமீறிவந்த...