வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-19
இளைய யாதவர் புன்னகையுடன் “அங்கநாட்டரசரும் பீஷ்மரும் சிகண்டியும் இங்கே வந்தனர். இங்கு வருபவர்கள் எவரும் தங்கள் மெய்யான வினா என்ன என்பதை உடனே உரைப்பதில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கையை பற்றித்தான் முதலில் சொல்லத்...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-41
பகுதி ஒன்பது: சொல்
இளைய யாதவரின் குடில்வாயிலை வந்தடைந்த தௌம்யரும் கர்க்கரும் அதர்வ வேதியரான சண்டகௌசிகரும் அவர்களுடன் வந்த வேதியர்களும் ஒருகணம் தயங்கி நின்றனர். கர்க்கர் “அவர் உள்ளே இருக்கிறார்” என்றார். தௌம்யர் “ஆம்,...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-51
அர்ஜுனன் சொன்னான். என்மீது அருள்பூண்டு எனக்கிரங்கி ஆத்மஞானம் என்னும் ஆழ்ந்த மந்தணத்தை நீ எனக்கு உரைத்தது கேட்டு என் மயக்கம் தீர்ந்தது. ஏனென்றால் உன்னிடமிருந்து உயிர்களின் தோற்றத்தையும் அழிவையும் விரிவாக கேட்டேன். அழிவற்ற...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-20
இளைய யாதவர் சொல்லப்போகும் மறுமொழிக்காக விதுரர் முகம்கூர்ந்து காத்திருந்தார். அவர் “விதுரரே, தாங்கள் முன்பு மறைந்த அரசர் பாண்டுவிடமிருந்து பெற்ற அஸ்வதந்தம் என்னும் அருமணி எங்குள்ளது?” என்றார். விதுரர் சற்று திடுக்கிட்டு பின்...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-42
நைமிஷாரண்யத்தில் கர்க்கர் இளைய யாதவரிடம் கேட்டார் “யாதவனே, வேதம்நாடும் முதற்பொருள் முடிவிலாதது எனில் வேதம் எனத் திரள்வது என்ன? எங்கள் எரிகுளத்தில் எழுந்து அவிகொள்ளும் தெய்வங்கள் எவை?” தௌம்யர் அவருடன் இணைந்துகொண்டார். “ஒவ்வொரு...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-52
அர்ஜுனன் கேட்டான். கேசவா, முதலியற்கை, முதலோன், நிலையம், நிலையன், அறிவு, அறிபடுபொருள் எனும் இவற்றை அறியவிழைகிறேன்.
இறைவன் சொன்னார். இவ்வுடல் நிலையம். இதை அறிபவன் நிலையன் என்கின்றனர் அறிஞர். எல்லா நிலையங்களிலும் நிலையன் நானே...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-21
சுவடிகளில் குருதிமணம் இருந்தது. கொழுங்குருதி. மானுடக்குருதிக்கு மட்டுமே உரிய மணம். அதை அறியாத மானுடர் இல்லை. உமிழ்நீரின், உயிர்த்துளியின், கண்ணீரின் மணம். சுவையின், காமத்தின், துயரின் மணம். ஒவ்வொரு சுவடியும் எனக்கு எனக்கு...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-43
பகுதி பத்து : பொருள்
நைமிஷாரண்யத்திற்கு வெளியே காலதேவனின் ஆலயத்திற்கு வந்து அமர்ந்த யமனுக்கு அருகே அகோரன் என்னும் காலன் வந்து வணங்கினான். அவர் விழிதூக்கி நோக்க “குசேலரின் இறுதிக்கணத்தில் உடனிருந்தேன். அவர் உயிரை...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-53
அர்ஜுனன் சொன்னான். கிருஷ்ணா, நூல்நெறியை மீறி ஆனால் நம்பிக்கையுடன் வேள்வி செய்பவர்களுக்கு என்ன நலன் அமைகிறது? நிறையா செயலூக்கமா அமைவா?
இறைவன் சொன்னார். உயிர்களின் இயல்பான நம்பிக்கை மூன்றுவகை. நிறை, செயல், அமைவு. அனைவருக்கும்...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-30
நான் வசிட்டரின் முதல் மைந்தர் சக்திக்கு அதிருஸ்யந்தி என்னும் மலைமகளில் மைந்தனாகப் பிறந்தவன். விழியறியாது காட்டில் உலவும் கலையறிந்த ஹரிதகர் என்னும் குலத்தில் பிறந்தவள் என் அன்னை. காட்டில் தவமியற்றச் சென்ற என்...