கி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு அன்புள்ள ஜெ, கிரா கட்டுரை முழுக்க சொல்லும் கருத்தின் சாரமாக தலைப்பிடுவது என்பது அடிப்படை நெறி. அதை இதழாளர் புரிந்து கொண்டாரா இல்லை புரியாமல் தலைப்பிட்டாரா அல்லது cognitive dissonance ஆகி விட்டதா ? உங்கள் கட்டுரையின் ஒட்டு மொத்த வரிகளும் கலக குரலாய் ஒலிப்பது கழக குரல்களுக்கு தொண்டை கலகத்தை ஏற்படுத்துகிறது. எழுத்தின் உறுதிப்படா தன்மையை இலக்கியவாதியை விட திராவிட முறுக்கு சுற்றும் ஆட்கள் செவ்வனே செய்வதால் வரும் குழப்பங்கள் …
Category Archive: கடிதம்
Permanent link to this article: https://www.jeyamohan.in/119830
ஈரோடு விவாதப்பட்டறை – கடிதங்கள்
அன்புள்ள ஜெ, இன்றைய வாசகனுக்கு ஒரு பொதுச் சிக்கலுண்டு. தினமும் சில மணிநேரம் அவன் உலவும் ஒரு தனியுலகிலிருந்து வெளிவந்தவுடன் அவன் சென்று முட்டும் பொதுவுலகின் சராசரி சவலைத்தனம் கொடுக்கும் சிக்கல் அது. 90% அவன் நேரம் கழிவது அப்பொதுவுலகில்தான். சிலருக்கு அது தொழிலாகவும், வேலையாகவும், படிப்பாகவும் இருக்கும். அப்பெரும்பான்மை உலகம் கொடுக்கும் மன நிலையின் தாக்கம் மெல்ல மெல்ல அவனறியாமலே அவன் தனியுலகில் ஆதிக்கம் செலுத்தும். அது சோம்பலாக, தீவிரமின்மையாக, சிறிதிலேயே கொள்ளும் திருப்தியாக, சாக்குகள் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/119823
உகவர், ராமச்சந்திர சிரஸ்
அன்புள்ள ஜெ, சமீபத்தில் தன்பால்-ஈர்ப்பு பற்றி தங்கள் தளத்தில் நிகழ்ந்துவரும் பரிமாறல்களை, ஆரோக்கியமான விவாதங்களை, என் நண்பர் ஒருவர் மூலம் அறிந்து, படித்தேன். தமிழ்ச்சூழலில் இதுபோன்ற அரிதான வெளிப்படையான விவாதங்கள் உண்மையிலேயே உவப்பளிக்கிறது. தன்பால்-ஈர்ப்பை மையமாகக் கொண்ட ‘அலிகார்’ என்ற ஹிந்தி திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். ஹன்சல் மெஹ்தா இயக்கத்தில் 2016 ல் இத்திரைப்படம் வெளியானது. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மராத்தி இலக்கிய பேராசிரியராகப் பணியாற்றிய ராமச்சந்திர சிரஸ்-ன் உண்மைக்கதையின் தழுவல் இத்திரைப்படம். ராமச்சந்திர சிரஸ் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/119684
திராவிட இயக்க இலக்கியம் – ஒரு வினா
கி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு கி.ரா உடனான சமஸின் அந்தப் பேட்டி, தமிழ் சிற்றிதழ் சார்ந்த எழுத்தாளர்களால் அண்ணாவும், திராவிட இயக்க கருத்தியலும் புறக்கணிக்கப்பட்டதற்கான காரணத்தை பற்றி பேச முயல்கிறதேத் தவிர தமிழ் இலக்கியத்தில் அண்ணாவிற்கான இடத்தைப் பற்றி பேசுவதாக இல்லை. பிறகு ஏன் சமஸ், தமிழ் சிற்றிதழ் சார்ந்த இலக்கியவாதிகளால் அண்ணா புறக்கணிக்கப்பட்டதைப் பற்றி பேச விரும்புகிறார் என்பது தான் இங்கு அடிப்படைக் கேள்விகளில் ஒன்றாக இருக்க முடியும். தமிழ் சிற்றிதழ் சார்ந்த இலக்கிய மரபும் சரி, திராவிட …
Permanent link to this article: https://www.jeyamohan.in/119813
என்ன அளவுகோல்?
கி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு அன்புள்ள ஜெ சமீபத்தில் ஈழ எழுத்தாளர்களைப் பற்றி நீங்கள் சொன்னதை ஒட்டி ஒரு விவாதம் நிகழ்ந்தது. அதன்பின்னர் இப்போது திராவிட எழுத்தாளர்களான அண்ணா கலைஞர் பற்றிச் சொன்னமைக்காக விவாதம் நிகழ்கிறது. என்னுடன் வாசிப்பு சம்பந்தமான சர்ச்சைகளில் ஈடுபடும் ஒரு நண்பர் ‘இவருக்கு இப்படி தரம்பிரித்து அடையாளப் படுத்தும் அதிகாரத்தை யார் கொடுத்தது?” என்று கேட்டார். “இது நாட்டாமைத்தனம்” என்று சொன்னார். நான் இதற்குப் பதில் சொல்லவில்லை. எனக்கு தெரிந்த பதில் என்பது …
Permanent link to this article: https://www.jeyamohan.in/119779
உகவர் வாழ்க்கை – உளவியலாளர் கடிதம்
உகவர் வாழ்க்கை திரு ஜெ அவர்களுக்கு, உங்கள் இணைய தளத்தில் உகவர் வாழ்க்கை கடிதத்தை வாசித்தேன். மனநல மருத்துவர் என்ற முறையில் என் கருத்துக்களை உங்களுக்கு அனுப்புகிறேன். இது திரு வி அவர்களுக்கோ மற்றும் இது சம்பந்தமாக தெரிந்துகொள்ள விழைபவர்களுக்கோ உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்களும் அப்படி நினைத்தால் ஆர்வமுள்ளவர்களுக்கு இதை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி முரளி சேகர் உகவர் வாழ்க்கை! திரு ஜெ, உகவர் வாழ்க்கை என்ற கடிதத்தில் திரு வி அவர்கள் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/119681
சிவ இரவு – கடிதம்
சிவஇரவு அன்புள்ள ஜெ., உங்கள் ‘சிவ இரவு’ சிறப்பாக இருந்தது. இதில் திருவாலங்காடு மட்டும் பார்த்திருக்கிறேன். அங்கு என்னை ஆச்சரியப்படுத்தியது கோயில் குளம். கோயிலளவோ அல்லது அதை விடவோ பெரியது. என்றாவது பகலில் போனால் பாருங்கள். காரைக்கால் அம்மையாரைப் பற்றி நீங்கள் எழுதியிருந்தது கோயிலை இன்னொரு முறை பார்க்கத் தூண்டுகிறது. திருவாலங்காட்டுச் செப்பேடுகள் குறித்து எழுதியிருந்தீர்கள். அந்தச் செப்பேடுகள் நெதர்லாந்தில் ஏதோ ஒரு காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதாக எங்கோ படித்த ஞாபகம். அது இந்தத் திருவாலங்காடுதானா? ஏனென்றால் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/119706
உகவர் – கடிதங்கள்
உகவர் வாழ்க்கை ஜெ, வணக்கம். உகவர் வாழ்க்கைச் சிக்கல்கள் மற்றும் உளவியல் சிக்கல்கள் குறித்த கடிதங்களைப் படிப்பதற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. இன்று ‘வி’யின் கடிதத்தினை காலையில் படித்தேன். பின்பு அலுவலகம் வந்து நாளிதழ் வாசிக்கையில் ‘மிண்ட்’ பத்திரிக்கையில் கண்ட செய்தி மேலும் வருத்தமளித்தது. அந்தக் கட்டுரைக்கு ஆன்லைன் லின்க் கிடைக்காததால், அதன் சாரத்தினை ஒரு படமாக இணைத்துள்ளேன். அவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, இந்திய நகரங்களில் உகவர்களை ஏற்கும் மனப்பான்மை இன்னமும் குறைவாகவே இருக்கிறது. அதிலும், …
Permanent link to this article: https://www.jeyamohan.in/119632
குரு நித்யா சந்திப்பு – கடிதங்கள்
ஊட்டி குரு நித்யா இலக்கிய முகாம் பற்றி அன்புள்ள ஜெயமோகன், 2013ம் ஆண்டு என நினைக்கிறேன். அந்தாண்டு மட்டும் காவிய அரங்கு ஏற்காட்டில் நடந்தது. அதில்தான் உங்களுடன் 2 நாட்கள் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்று திரும்பிப் பார்க்கையில் அதன் மதிப்பு மேலும் மேலும் கூடிக்கொண்டே வருகிறது. அந்தந்த கணங்களில் வாழ்ந்த உங்கள் ஆளுமையை நேரில் உணர்ந்த தருணங்களை எண்ணும் போதெல்லாம் மனம் பெரும் கிளர்ச்சி அடைகிறது. வாசகர்களாகிய எங்களுக்கு அதெல்லாம் பெரும் பேறு. குறிப்பாக …
Permanent link to this article: https://www.jeyamohan.in/119529
சீ.முத்துசாமியின் மலைக்காடு – காளி பிரசாத்
எழுச்சியின்மையின் கலை – சீ.முத்துசாமியின் புனைவுலகு சீ.முத்துசாமியின் மலைக்காடு- ஹரன் பிரசன்னா அன்புள்ள ஜெ, ஒரு வருடம் கழித்து மீண்டும் எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்கள். அவரின் ஒரு புதிய நாவலான மலைக்காடு நாவலை வாசித்தேன். சீ.முத்துசாமியின் சிறுகதைகள் 1977ல் எழுதப்பட்டு காலத்தால் பல்லாண்டுகள் முந்தியிருந்தாலும், நான் படித்தது என்னவோ நாற்பதாண்டுகள் கழித்து 2017ல் விஷ்ணுபுரம் விருது சமயத்தில்தான். அவரின் நாவல்களும் சிறுகதைகளும் ஒரு குறிப்பிட்ட மனநிலைகளில் சொல்லப்படுபவையாகவே முதலில் எனக்குத் தோன்றின. சில சமயங்களில் அவை ஒரு புகார் போல …
Permanent link to this article: https://www.jeyamohan.in/119602