இனிய ஜெயம் அடிக்கடி ரயில் கடக்கும் தண்டவாளங்களருகே ஆடு மேய்ப்பவன் கண்களை ஜன்னல்கள் தோறும் பதித்து வைத்து விடுகிறான் தடியின் உதவியாலும் மந்தையுடனும் இரவில் வீடு திரும்புகிறான் மறுநாள் ஆடுகள் அவனைப் பத்திரமாகத் தண்டவாளங்க அருகே அழைத்துப் போய் விடுகின்றன முதல் ரயில் கடந்து போகையில் கண்களைத் திருப்பித் தருகின்றன கடைசி ரயில் வாங்கிக் கொள்கிறது மனைவியிடம் இதை சொல்ல வேண்டாமென ஆடுகளிடம் சொல்லி வைத்திருக்கிறான் ( பெரு. விஷ்ணுகுமாருக்கு) விகடன் விருது பெறுவதை ஒட்டி ,கவிஞர் …
Category Archive: கடிதம்
Permanent link to this article: https://www.jeyamohan.in/118206
பனை – கடிதங்கள்-2
பனைகளின் இந்தியா – அருண்மொழி நங்கை அன்புநிறை ஜெ, பனைகளின் இந்தியா வாசித்தேன். இந்தத் தலைப்பே மனதுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. எந்த ஆரவாரமுமின்றி எளிமையான கிராமத்து மனிதரைப் போல நம் பயணங்களில் கவனம் பெறாது கடந்து பின்நகரும் பனை, ஓலைகளாகத் தாங்கி நின்ற மானுட அறிதல்கள் எத்தனை!! அதற்காக ஒருவர் மேற்கொண்ட பயணம், அதைப் பற்றிய எழுத்து மீண்டும் பனைகளை அடையாளப்படுத்தியிருக்கிறது. ஆறுமுகநேரியிலிருந்து அடைக்கலாபுரம் வழியாகத் திருச்செந்தூர் செல்லும் சாலையில் நடந்த இளவயது நினைவுகள் கிளர்ந்தெழ …
Permanent link to this article: https://www.jeyamohan.in/118102
அலகிலா ஆடல் – சைவத்தின் கதை
அலகிலா ஆடல்- சைவத்தின் கதை வாங்க அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம் விழைகிறேன். இது ஒரு சாதாரணக் கடிதம் தான். ஐயம் கேட்கும் வாசகர் கடிதம் அல்ல. வேலைப்பளுவின் மத்தியில் (குறிப்பாகச் சொன்னால் வெண்முரசுப் பளுவின் மத்தியில் ) இதைப் படிக்கிறீர்கள் என்றால், பிறகொரு முறை ஆறுதலாகப் படித்து பதிலிறுக்கலாம். என் “அலகிலா ஆடல்: சைவத்தின் கதை” நூல் தங்கள் கரம் சேர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். தலைப்பிலிருந்து அதன் உள்ளடக்கத்திற்கு சில தகவல்களைத் தந்தது வரை எனது நூலில் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/118190
பத்மபிரபா நினைவு விருது
என்றாவது வெகுதூரப் பயணத்துக்குப் பிறகு வீடு திரும்பும் நேரம் ஏதோவொரு நாளின் குளிரடங்காத அதிகாலையாகவே இருக்கிறது. கதவைத் திறந்த அம்மா கைப்பையை வாங்கியதும் இளைத்துப் போனாயே என்று கைகளைப் பிடித்துக் கொள்கிறாள். காய்சலோ வேறு தொந்தரவோ என்று நெற்றியையும் கன்னத்தையும் தொட்டுப் பார்க்கிறாள். குளிரில் நடுங்கும் உடலில் மேலும் அவள் தொடுகை சில்லிடுகிறது. அப்படித்தான் கவிஞர் கல்பற்றா நாராயணனின் சொற்கள். அவர் தன் கவிதைகளைச் சொல்வதோ தன் நிலத்துக்கே உரிய குளிராக. இரவில் மலையேற்றமும் காணத்தோன்றாத உறக்கத்தில் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/118065
கல்பற்றா நாராயணன் கவிதைகள் – கடிதங்கள்
ஆகாயமிட்டாய் – கல்பற்றா நாராயணன் கல்பற்றா நாராயணன் – இன்னும் மூன்று கவிதைகள் ஜெ கல்பற்றா கவிதைகளை இன்னும் பல செய்து ஒரு தொகுப்பாக கொண்டுவர வேண்டும். அதற்கு நீங்கள். முயல வேண்டும். இன்றைய கவிதைகள் கண்ணீரைப் பெருக்கெடுக்கச் செய்தன.உங்களுக்கு நன்றி ! இசை அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, கல்பற்றா நாராயணன் அவர்களின் மூன்று கவிதைகளும் இந்நாளை உவகையாலும் அருளாலும் நிறைத்தது. தவறாக கவிதை – பிரார்த்தனை, சொற்கள் தேடப்படுகின்றன, சொற்கள் குறைத்துக்காணப்படுகின்றன, சொற்கள் அருள் வடிவம் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/117946
மோகன் வாறே !
ஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள் ஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி அன்பு ஜெ, உங்களுக்கு ஜின்னாஹ் என்னும் மாகவிஞர் எழுதிய வசைக்கவிதையை அனுப்புகிறேன். வசைபட வாழ்தல் என நீங்கள் எழுதிய பழைய கட்டுரையை நினைவுகூர்க இலங்கையில் கவிஞர்கள் இலையெனும் ஜெயமோகன் இழிமொழி கேட்டு வியந்தேன் மலப்புழு அறியுமோ மலர்மணம் நறைதரு மதுரத்தை மோகன் வாறே அலைகடல் தாண்டியவர் அறிந்தவை என்னவோ அறிந்திலை யாதும் நெஞ்சில் நிலைகொண்ட காழ்ப்பினை நெறிபிறழ்ந் துரைப்பது நீசனின் செயலு மன்றோ! என்னதான் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/117883
அறிவியல் புனைகதைகள் – கடிதங்கள்
அறிவியல் புனைகதைகள் பற்றி…ஜெயமோகன் பேட்டி ஓர் அறிவியல் சிறுகதைப் போட்டி அன்புள்ள ஜெ, அரூ இணைய இதழில் வெளியாகிய அறிவியல் புனைகதைகளைப் பற்றிய உங்களுடைய விரிவான நேர்காணலை வாசித்தேன். அறிவியல் புனைகதைகள் பற்றிய மிகப்பெரிய தெளிவான சித்திரத்தைக் கொடுத்தது. ஏற்கனவே விசும்பு தொகுப்பின் முன்னுரையில் மிகக்கூர்மையாக அதன் எல்லைகளை விவாதித்து எழுதி இருந்ததே பெரிய திறப்பைக் கொடுத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக இங்கு எத்தனை விவாதங்கள் உரையாடல்கள் நிகழ்ந்தன என்று தெரியவில்லை. ஆனால், தமிழில் நிகழ்ந்த அறிவியல் புனைகதைகள் பற்றிய …
Permanent link to this article: https://www.jeyamohan.in/117725
வானம் வசப்படும் காட்டும் அன்றைய உலகம்
அன்புள்ள ஐயா வானம் வசப்படும் வாசித்தேன். முடிவு பெறாத ஒரு வரலாற்றுப் புனைவு , பிரபஞ்சன் நினைவுகளை துயருடன் கிளர்த்தியது. பிரெஞ்சு காலனியத்திற்கு அடிமைப்பட்டிருந்த புதுச்சேரி வாசிகளின் துயரும் அரசியல் சதிகளும் அடிமைகளாக விற்கப்பட்டவர்களின் வாழ்க்கையும் நிலத்தின் வாசனையுடன் வட்டார வழக்கில் வங்கக் கடல் காற்றில் வீசிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு 100 கிலோ மீட்டர் இந்தியாவிற்குள் பயணம் செய்யும்போதும் மக்கள் வாழ்வு முறை மாறுகிறது என்று ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். சில ஐயங்கள் 1 புதினத்தை முழுதாய்ப் புரிந்து கொள்ள …
Permanent link to this article: https://www.jeyamohan.in/117609
சந்தையும் திருவிழாவும்
பேருருப் பார்த்தல் புத்தகக் கண்காட்சி – ஒரு குமுறல் புத்தகக் கண்காட்சி 2018 இனிய ஜெயம் இங்கே நிகழ்ந்துகொண்டிருப்பது சந்தை அமைப்புக்கும் ,திருவிழா எனும் பண்பாட்டு அமைப்புக்கும் இடையே ஆன கயிறுஇழுக்கும் போட்டி . ஒவ்வொரு ஆண்டும் சந்தை அமைப்புதான் வெல்வதாக தெரிகிறது . சிந்தனைக் களமும் ,செயற்களமும் ஒரு நாணயத்தின் இரு பகுதிகள் போல செயல்பட்டு ,அதன் வழியே வரலாறு தொழிற்படுகிறது எனக்கொண்டால் , சிந்தனைக் களத்தின் அடிப்படை கட்டுமானங்களை உருவாக்கும் அனைத்து காரணிகளையும் ,ஆளுமைகளும் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/117648
குழந்தைகளுக்கு புராணங்களை கற்றுக்கொடுக்கலாமா?
குழந்தைகளுக்கு மதம் ஜெ வணக்கம், இந்த வருடம் தொடக்கத்தில் இருந்து குழந்தைகளுக்கு (10 மற்றும் 5 வயது) மகாபாரத கதையை ஒலி புத்தக வடிவில் கேட்கவைக்கலாம் என்று அமேசானில் உள்ள இஸ்கான் அமைப்பின் ஆங்கில மதிப்பின் மாதிரியை கேட்டேன் அந்த மாதிரியில்; விச்சித்திரவீரீயன் இறந்து விடுகிறான். நியோக நியதி படி அம்பிக்கையையும் அம்பாலிகையையும் கருவுற செய்ய முடிவெடுக்க படுகிறது. விச்சித்திரவீரீயனின் அண்ணனின் துணையுடன்.அம்பிகை பீஷ்மரை எண்ணியபடி சிறு உவகையுடன் மஞ்சத்தில் அமரந்திருக்க, ஓரு கரிய அழுக்கு படிந்த …
Permanent link to this article: https://www.jeyamohan.in/117588