பெயர்ந்தோர்

அன்புள்ள ஜெ,

உங்கள் வாழும் தமிழ் பதிவு, http://www.jeyamohan.in/?p=29570, மனதை நெகிழவைத்தது.
இந்த வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு. ( பிரஞ்சு – கரீபியத் தீவுகளில் உள்ள தமிழர்களை / இந்தியர்களைப் பற்றிய ஆவணம்).

https://www.youtube.com/watch?v=CZ11YjOMp4o
https://www.youtube.com/watch?v=ZR1zisa_N-o&feature=relmfu

பாண்டிச்சேரியிலிருந்தும், காரைக்காலிலிருந்தும் கொத்தடிமைகளாக சென்றவர்களின் வம்சாவளியினர் பற்றிய ஆவணம்.
இவர்களுக்குத் தமிழ் மறந்துவிட்டது. ஆனால் மாரியம்மனும், மதுரைவீரனும் மறக்கவில்லை.
பிரெஞ்ச் பேசிக்கொண்டு, இலைபோட்டு சாப்பிடும் இவர்களைக் காணும்போது, உங்கள் கொற்றவை நினைவிற்கு வருகிறது.
இவர்கள், ஆழி அடித்துச்சென்ற கன்னியன்னையின் மெட்டி தானே.

தொடர்பான கட்டுரை :
http://independent.academia.edu/SureshPillai/Papers/392416/Hindu_Indian_cultural_Diaspora_in_French_Caribbean_islands_of_Guadeloupe_and_Martinique

ஹென்ரி சிதம்பரம் என்பவரை குவாதலூப்பின் காந்தி என்கிறார்கள். இவரைபற்றி அதிகம் தெரியவில்லை.
கரீபிய, பிஜி தீவுகளுக்கு கொத்தடிமைகளாக சென்றவர்களைப்பற்றித் தமிழிலோ, இந்திய மொழிகளிலோ ஆவணமோ/ நூலோ வந்துள்ளதா ?

ஆப்ரிக்க அடிமைகளைப்பற்றியும், யூத படுகொலைகளைப்பற்றியும் ஆயிரக்கணக்கில் நூல்கள் உள்ளன.
இந்திய பஞ்சங்களையும், கொத்தடிமைகளையும் பற்றி ஐம்பது புத்தகங்கள் வந்திருக்குமா ஜெ ?

விசு

அன்புள்ள விசு

மிகவும் பேராசைப்படுகிறீர்கள்

எனக்குத்தெரிந்து ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றவர்களைப்பற்றி அனேகமாக எதுவுமே எழுதப்பட்டதில்லை. எந்த ஆராய்ச்சியும் நடத்தப்பட்டதில்லை. அதற்காக ஒரு பைசாகூட செலவழிக்கப்பட்டதில்லை.

ஓரளவேனும் பதிவுகள் உள்ளது இலக்கியத்தில். குறிப்பாக இலங்கை மலையகத் தமிழர்களைப்பற்றியும் மலேசியத்தோட்டத்தொழிலாளர்கள் பற்றியும் ஒரு சில ஆக்கங்கள். தெளிவத்தை ஜோசப், மாத்தளை சோமு முதலிய சில இலங்கை எழுத்தாளர்களை குறிப்பாகச் சொல்லலாம்

ஜெ

முந்தைய கட்டுரைசாதியாதல்
அடுத்த கட்டுரைபடைப்பு-கடிதங்கள்