படைப்புகள் கடிதங்கள்

வணக்கம் குரு

தங்களின் “பத்ம வியூகம்” குறுநாவல் எந்த பதிப்பகத்தில் கிடைக்கும்? உங்கள் நூல்களின் பட்டியலிலும் (என்னால்) காணபடவில்லை. எனி இந்தியன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளவற்றிலும் காண நேரவில்லை. அக்குறுநாவல் வேறு தொகுப்புகளில் இடம்பெற்றிருந்தால் தெரியப்படுத்தவும். எதனால் என்று தெரியவில்லை இந்நாவல் எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்பு என்றே கருதி வந்தேன். கடிதத்தில் தங்கள் வாசகர் குறிப்பிடும் போது தான் தெரிந்துகொண்டேன்.. “விஷ்ணுபுரம்” பிரதியும் தற்போது கிடைக்கவில்லை என என் நண்பன் தெரிவித்தான் எங்கு கிடைக்கும் என தெரிவித்தால் நலம். சந்தைபடுத்துவதில் தங்களுக்குள்ள நாட்டம் அறிந்ததே! எனினும் நேரம் கிடைக்கும் போது தெரியப்படுத்தவும்.
பணிவன்புடன் மகிழவன்.,

அன்புள்ள மகிழவன்

பத்மவியூகம் கதை என்னுஐய ஜெயமோகன் குறுநாவல்கள்தொகுத்யில் உள்ளது. உயிர்மை பதிப்பகம். விஷ்ணுபுரம் இப்போது அச்சில் இல்லை. உடனடியாக வெளிவரும் என கவிதா சொக்கலிங்கம் சொன்னார்- நான்காம் பதிப்பு

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு..,

நலம் அறிய விருப்பம் சார் , நதி , வீடு, மற்றும் பல்லக்கு மூன்று சிறுகதைகளை தற்போது படிதேஅன். இதில் பல்லக்கு – தாக்கம் ஏற்படுத்திய சிறுகதை (என்னளவில் ) ஆக உணர்கிறேன். வாழ்ந்து கெட்டவன் பற்றி ஒரு வீரியமான கவிதை போன்றதொரு நடை. . அனேகமாக யாரையோ நீங்கள் மனதில் வைத்து எழுதிய மாதிரி உள்ளது. உன்னதங்கள் வாழ்வின் வலியை தான் நுட்பமாக பதிவு செய்கின்றன. பல்லக்கு அந்த அனுபவத்தை தந்தது .

Regards
dineshnallasivam

அன்புள்ள தினேஷ்,

பல்லக்கு ஓர் இள வயது மனப்பதிவு. பின்னர் அக்கதை அறத்தாறிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடைஎன்ற குறளுக்கு நெருக்கமாக வருவதைக் கண்டேன்

பல்லக்கில் இருப்பவன் இறங்குவதும் பல்லக்கு சுமப்பவன் ஏறுவதும் இயல்பே இவ்வாழ்க்கையில்..

ஜெ

அன்புள்ள ஐயா,

வணக்கம். தங்களின், மகனின் பள்ளி அனுபவங்கள் படித்தேன். அரசு பள்ளிக்கூடத்தின் சுதந்திரமான சுழல் தங்களின் மகனுக்கு ஏற்புடையதாக இருந்திருக்கிறது. அவனுக்கு என் வாழ்த்துக்கள்!

முதன் முதலாக இப்போது தான் உங்களின் எழுத்தை படிக்கிறேன். மிகவும் அருமையாக சொல்லியிருக்கிரிஇர்கள். இதற்கு மேல் எனக்கு சொல்லத் தெரியவில்லை.

நன்றி.


(¨`·.·´¨)
அன்புடன்,
`·.¸(¨`·.·´¨)
(¨`·.·´¨)¸.·´
கணேசமுர்த்தி

அன்புள்ள கணேசமூர்த்தி

நன்றி. அக்கட்டுரை வந்து இரண்டான்டு ஆகப்போகிறது. நம் கல்விமுறை எப்படி ஒரு கௌமையான , வலிமிக்க, தேர்வாக உள்ளது என்பதைச் சொல்லவே அதில் முயன்றிருதேன். இப்போது என் மகன் பிளஸ் டூ படிக்கிறான். இந்த கல்வியமைப்பின் வதைகள் இன்னமும் அவனை தொடர்கின்றன. என்ன செய்வது?

ஜெ

ஜெயமோகன்,

நலமா?
ஆஸ்திரேலியப் பயணம் நல்ல விதமாக இருக்குமென்று நினைக்கிறேன். மத்தகம் படித்துவிட்டேன். முடிவு என் கண்களை கலங்கச் செய்து விட்டது. அந்த உணர்வுகளை முழுதாய் வடிக்க எனக்கு வார்த்தைகள் சிக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தன் கால்களைத் தூக்கி பரமனை தன் மேல் ஏற அனுமதிக்கும் போது கேசவனின் மன நிலை என்னவாக இருந்திருக்குமோ அந்த நிலை நமக்குள்ளும் ஒருநொடி உருவாகி நம்மையும் தாக்கத்தான் செய்கிறது.

யானை மிகவும் பலம் பொருந்திய விலங்கு, இருந்தும் அவை மனிதருக்குக் கட்டுப்பட்டு இயங்கும் தன்மை எனக்கு மிகுந்த வியப்பைத் தரும். அனால் அவை தாங்கள் விரும்பினால் மட்டுமே மனிதருக்குக் கட்டுப்படுகின்றன. ஆனால் மனிதன் கொண்டியங்கும் குணமும் இயல்பும் பல நேரம் விசித்திரமானது. அந்த குரூரம் , கொடுமை அந்த யானைப் பாகன் வழியாக படம் பிடித்துக் கட்டப்பட்டுள்ளது.

விலங்குகள் எப்பொழுதும் தூய்மையானவை. தங்கள் போக்கிலேயே வாழ்கின்றன. அவை மற்ற விலங்குகளை துன்புறுத்துவதில்லை. உணவுக்காகவோ, உடலத் தேவைக்காகவோ அல்லது தங்களைப் பாது காத்துக் கொள்ளவோ மட்டுமே தாக்குகின்றன(விதிவிலக்கு இருக்கலாம்). மனிதன் மட்டுமே மற்றவர்களை எதோ ஒரு விதத்தில் தாக்கிக் கொண்டிருப்பதின் மூலமே தான் இருப்பதை நிலை நிறுத்திக்கொள்ள விழைகிறான்.

யானை நடந்து வரும் தோரனையை தாங்கள் விவரித்திருந்த விதம் அந்த காட்சி நடந்து கொண்டிருந்த இடத்திற்கு என்னையும் அழைத்து சென்று விட்டது. திருவட்டாரில் இருந்து திருவனந்தபுரம் கிழக்கேக் கோட்டை வரைக்கும் செல்லும் பாதை மிக அழகைப் படம் பிடித்து காட்டப்பட்டு இருந்தது .

நான் சில மாத காலங்கள் திருவனந்தபுரத்தில் பணி செய்து கொண்டிருந்தேன். அக்காலங்களில் நான் நாகர்கோயில் – திருநெல்வேலி வழியாகத்தான் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்று வருவது வழக்கம். அப்போதெல்லாம் குழித்துரையும், கழியக்காவிளை வழியாகவும் தான் பயணம் செய்தாக வேண்டும். இப்பொழுது மீண்டும் ஒரு யானைப் பாகனாக அதே வழித்தடத்தில் பயணித்தது போல் இருந்தது.

நாம் புழங்கிய இடம் அல்லது கடந்து சென்ற இடங்கள் கதைக்களமாய் அமைந்து இருக்கும் படைப்புகளை படிக்கும் பொழுது அந்த அனுபவம் அந்தப் படைப்பை உள்வாங்கிக் கொள்ள மேலும் ஒரு ஈர்ப்பாக அமைந்து விடுகிறதோ? இதே அனுபவம் உடையார்இல் தஞ்சை பெரிய கோயில் படித்து போதும் அமைந்ததுண்டு.

தவறு செய்தல் மனித இயல்பு. நான் இங்கு குறிப்பிட்டவற்றில் தவறுகள் இருக்கலாம், தவறு செய்தல்தான் ஒன்றைச் சரியாகச் செய்வதற்கு வாய்ப்பாய் அமைகிறது. எனினும் என் தவறுகளைப் பொருத்து ஆள்க. (சுட்டிக் காட்டபடும் பொழுது கண்டிப்பாக திருத்திக் கொள்ளவேன்).

நன்றி,
தங்கள் வாசகன்,
சுந்தரவடிவேலன்.

அன்புள்ள சுந்தரவடிவேலன்

நலம்தானே? மத்தகம் குறித்த உங்கள் பதிவுகளைப் பார்த்தேன். அந்தக்கதை மத்தகம் குறித்தது. உயர்ந்த- சிம்மாசனம் போன்ற தலை. அதற்கு மத்தகம் என்ற் பெயர். மத்து + அகம். மதத்தை உள்ளே வைத்திருக்கும் இடம். அதிகாரம் கொண்ட தலை என்பதற்கு பொருத்தமான பெயர் அது. தமிழின் அருமைஅயன சொல்லாட்சிகளில் ஒன்று. அந்த மத்தகம் தாழ்ந்து இன்னொன்றை ஏற்பதன் அந்தக் கணமே அந்நாவல்

ஜெ

 

 

குறளறம்

ஏழாம் உலகம்: கடிதங்கள்

ஏழாம் உலகம் :கடிதங்கள்

 

முந்தைய கட்டுரைலோகி.5, தனியன்
அடுத்த கட்டுரைபோர்-கடிதங்கள்