சோழர்காலச் செப்பேடுகள்- தினமலர் விருது

தமிழ் வரலாற்றாய்வுத்தளத்தில் புதுத்தடம் பதித்த வரலாற்றாய்வுநூல் சோழர்காலச் செப்பேடுகள். முனைவர் ராஜேந்திரன் இஆப அவர்கள் எழுதிய இந்நூலுக்குப்பின் வரலாறே மாறிவிட்டது. அதைப்பற்றிய விரிவான செய்தி ஏற்கனவே இந்தத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள்து

அந்நூலுக்கு தினமலர் நாளிதழ் வழங்கும் பெருமைக்குரிய ராமசுப்பையர் விருது வழங்கப்பட்டுள்ளது .செய்தி இணைப்பு. தினமலர் விருதுக்கு எல்லாவகையிலும் தகுதியானவர்தான் ராஜேந்திரன். சொல்லப்போனால் ராஜேந்திரன் விருதுக்கு தினமலர் தகுதியானது

விழாவில் வைக்கோ பேச்சு ஒரு மகுடம். என்ன ஓர் ஆழ்ந்த வாசிப்பு, அகலமான சிந்தனை. அடுத்த தமிழர் தலைவர் இவர்தான். ராஜேந்திரன் அவர்களைக்கொண்டு இந்திய வரலாற்றையும் செப்பனிட வைக்கோ ஆவன செய்யவேண்டும்

முந்தைய கட்டுரைபயனுறு சொல்
அடுத்த கட்டுரைகருக்கலைப்பு ஓர் எதிர்வினை