சுஜாதா அறிவியல்புனைகதை பரிசு

சுஜாதா அறிமுகம்

அமரர் சுஜாதா நினைவு அறக்கட்டளை – ஆழி பதிப்பகம் இணைந்து நடத்திய அறிவியல் புனைகதை பரிசளிப்பு விழாவில் தமிழ்மகன்    எழுதிய `கிளாமிடான்’ சிறுகதை முதல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மறைந்த எழுத்தாளர் சுஜாதா நினைவாக நடத்தப்பட்ட “அறிவியல் புனைகதை-2009′ போட்டியில், எழுத்தாளர் தமிழ்மகனுக்கு முதல் பரிசு (ரூ.20 ஆயிரம்) கிடைத்துள்ளது.2008-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதா நினைவாக அவரது குடும்பத்தினரும், ஆழி பதிப்பகமும் இணைந்து இப்போட்டியை நடத்தின.போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200 தமிழ் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.

எழுத்தாளர் இரா.முருகன், ஊடகவியலாளர் சந்திரன், எழுத்தாளர் அய்யப்ப மாதவன், எழுத்தாளர் திவாகர் ஆகியோர் பரிசுக்குரிய கதைகளை தேர்வு செய்தனர்.தி.தா.நாராயணன் இரண்டாவது பரிசு பெறுகிறார். நளினி சாஸ்திரி, ஆர்.எம்.நெüஷத் (இலங்கை), வ.ந.கிரிதரன் (கனடா), கே.பாலமுருகன் (மலேசியா) ஆகியோர் சிறப்பு ஆறுதல் பரிசு பெறுகின்றனர்.

பரிசளிப்புவிழா நாள் : 07.03.09
நேரம்: காலை 10

View Full Size Image

இடம்: ஆஷா நிவாஸ்

9, ரட்லாந்து கேட் 5-வது தெரு,
நுங்கம்பாக்கம்,
கதர் நவாஸ் கான் சாலை முடிவில்,
சென்னை
பங்கேற்ப்போர்:
அமைச்சர் தங்கம் தென்னரசு,
டைரக்டர் வசந்த்,
 ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனன்,
 கிரேசி மோகன். 
தமிழ்மகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
தமிழ்மகன் வலைப்பூ
முந்தைய கட்டுரைஅனல் காற்று (குறுநாவல்) : 4
அடுத்த கட்டுரைமொழியாக்கம்:கடிதங்கள்