வெளி

kumarak

மழையில் ஒரு காலைநடை சென்று வந்தேன். சற்றுத்தொலைவில் ஓர் உருவம் திடுக்கிடச்செய்தது. குமரகுருபரன். அதே நடை. புன்னகை வேறு. எப்படி விழாமலிருந்தேன் என்பதே ஆச்சரியம். அணுகிவந்தபோது இன்னொருவராக மாறினார். என்னிடம் “பார்வதிபுரத்துக்கு இப்டி போலாம்ல?’

புன்னகை வேறு. கண்கள் வேறு. குரலும் வேறு. முற்றிலும் வேறு ஆள்தான். ஆனால் குமரகுருபரன் நெல்லைக்காரர். இப்பகுதியில் பெரும்பாலும் எல்லாம் ஒரே குருதிக்குழுவினர்தான். என்னால் அவர் இரண்டாம் முறை கேட்டபின் தலையசைக்க மட்டுமே முடிந்தது

அவர் நடந்து அகன்று செல்வதைக் கண்டேன். அதே நடை. கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் குமரகுருபரன். தொலைவில் மீண்டும் நெஞ்சு அதிர்ந்தது. அவரேதான்

வெளிதான் விளையாடுகிறதுபோல

***

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஇந்த டீ சூடாறாதிருக்கட்டும்..