இன்று [25- ஜூன் 2017] மாலை கன்யாகுமரியில் ஒரு நிகழ்ச்சிக்கு செல்கிறேன். “எனது அடையாளம் தோல் அல்ல- நான்’ என்பது நிகழ்ச்சியின் பெயர். வெண்புள்ளிகள் [leucoderma] நோய் அல்ல, அது தொற்றாது, பரம்பரையாக வராது என்னும் கருத்துக்களை முன்வைத்து நிகழும் ஒரு நூல்வெளியீடு. கே.உமாபதி எழுதிய வெண்புள்ளிகளைப்பற்றிய விளக்கநூல் வெளியிடப்படும்.
இடம் சுனாமி பூங்கா, கன்யாகுமரி
நேரம் மாலை 4 மணி
நாள் 25 6 2017
கவிஞர் தேவேந்திரபூபதி, ஜி.தர்மராஜன் ஐபிஎஸ், மயன் ரமேஷ்ராஜா, மலர்வதி. டி.இ.திருவேங்கடம், பொன்னீலன், நாஞ்சில்நாடன், அ.கா.பெருமாள். எச்.ஜி.ரசூல், மீரான் மைதீன் போன்றவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
விரல்கள் நுண்கலைகளுக்கான அரங்கம் சார்பில் கூட்டு ஓவியம் வரையும் நிகழ்ச்சி ஒன்று நடக்கவிருக்கிறது
*
இரண்டுநாட்களாக கண் ஒவ்வாமை நிலைமீண்டு காட்சிகள் தெளிவாக ஆரம்பித்திருக்கிறது. கன்யாகுமரிக் காற்று என்ன செய்யும் என்று கொஞ்சம் குழப்பமாகவே உள்ளது. ஆனால் கறுப்புக்கண்ணாடியில் நான் திராவிடர் இயக்க ஆதரவாளன் போலத் தெரிவதாக சொன்னார்கள். அப்படி தோற்றமளித்து வைப்போம், எதிர்காலத்திற்காக என்று நினைக்கிறேன்.