வெண்முரசு புதுவை கூடுகை – 5

pavannan

அன்புள்ள நண்பர்களுக்கு. வணக்கம்.

நிகழ்காவியமான “வெண்முரசு கலந்துரையாடல்” புதுவையில் சென்ற பிப்ரவரி 2017 முதல், மாதந்தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

புதுவை கூடுகை மூன்றாம் வியாழக்கிழமைகளில் நிகழ்வது வழமை. இம்முறை திரு. பாவண்ணன் அவர்கள் புதுவைக்கு வருகைதரும் சந்தர்ப்பத்தை நழுவவிடாது, வெண்முரசு கலந்துரையாடலை 26 ஜூன் 2017 திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு தொடங்கவிருப்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக்கொள்கின்றோம்.

26 ஜூன் மாதத்தில் கூடவிருக்கிற ஐந்தாவது கூடுகை, ஒரு சிறப்புமிக்க கூடுகையாக நிகழவிருக்கின்றது. இலக்கிய உலகின் ஆளுமைகளில் ஒருவரான திரு.ஜெயமோகன் அவர்களின் மதிப்பிற்குரிய நண்பரும், வெண்முரசின் தொடர் வாசகருமாகிய மதிப்பிற்கினிய திரு.பாவண்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெண்முரசின் சொல்மடிபில் கரந்துள்ள அர்த்தவிசேஷங்களை விரித்தெடுக்க இருப்பது, அதன் பிற பரிமாணங்களில் ஒளிரும் தருணங்களை நம்முள் நிகழ்த்தலாம்..

திரு. பாவண்ணன் அவர்கள் சிறுகதை, நாவல், கட்டுரை, குறுநாவல், கவிதை, குழந்தைப்பாடல்கள் என பலதளங்களில் முப்பதாண்டுகள் மேலாக இயங்கிவரும், தமிழின் முக்கிய எழுத்தாளரும், மகாபாரததத்தை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் அணுகி புனையப்பட்ட கன்னட எழுத்தாளர் திரு எஸ்.எல்.பைரப்பாவின் பர்வா நாவலை தமிழ்ப்படுத்தியவரும் கன்னடத்தின் முக்கிய இலக்கிய நூல்களின் ஆகச்சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பாளருமாவார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்தக் கூடுகை அனைத்துவிதத்திலும் மிக முக்கியமானதாக நிகழவிருக்கிறது.

அதில் பங்குகொள்ள நம் கூடுகை உறுப்பினர்கள், வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

நாள்:- திங்கட்கிழமை (26-06-2017) காலை 10:30 மணிக்கு தொடங்குகிறது.

இடம்:-

கிருபாநிதி அரிகிருஷ்ணன்,

” ஶ்ரீநாராயணபரம்”,

முதல்மாடி,

27, வெள்ளாழர் வீதி ,

புதுவை-605001

Between MG Road & Bharathi Street,

Next to

Madhan traders

Upstair to

Srima plastics store

Contact no:- 99-43-951908 , 98-43-010306.

முந்தைய கட்டுரைவாஞ்சியும் தலித்துக்களும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 26