அப்துல் ரகுமான்: அஞ்சலி

ab

கவிஞர் அப்துல் ரகுமான் அவர்களை நான் 1988 வாக்கில் சுந்தர ராமசாமியின் இல்லத்தில் சந்தித்தேன். அதன்பின்னர் இருமுறை சந்திக்கும் வாய்ப்பு வந்தது. சுவாரசியமான உரையாடல்காரர். உருது, அரபு கவிதைகளில் மிகப்பெரிய ஈடுபாடு உடையவர். ஃபெய்ஸ் அகமது ஃபெய்ஸ் குறித்தும் மிரஸா காலிப் குறித்தும் அவரிடம் விரிவாக உரையாடியிருக்கிறேன். கவிதை பற்றிய அவருடைய கொள்கை நான் எண்ணுவதற்கு முற்றிலும் மாறுபட்டது. கவிதையை அவர் சொல்வீச்சாக, மேடை நிகழ்வாகவே பார்த்தார். அவை மௌனவாசிப்பில் மிகையாகவே எஞ்சின

தமிழ் வானம்பாடி மரபின் முதன்மைக்கவிஞர் என அப்துல் ரகுமானைச் சொல்லலாம். அவருக்கு அஞ்சலி

***

அப்துல் ரகுமான் – பவள விழா

***

 

முந்தைய கட்டுரைகுமரகுருபரன் கவிதைவிருது
அடுத்த கட்டுரைஎனது இன்றைய காந்தி –கடிதம்