பாபநாசம் ,கமல் பேட்டி

 

papanasam-movie-poster_141957088500

ஜெ,

 

பாபநாசம் படத்தைப்பற்றி கமல் பேசும் இந்த இடம் உங்கள் பார்வைக்கு. அவர் அக்கதாபாத்திரத்தைப்பற்றிப் பேசுவதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா? அவரது புரிதல் சரிதானா?

 

சத்யன்

 

அன்புள்ள சத்யன்

அந்த கதாபாத்திரம் பேசி அமைக்கப்பட்டது. அதை நானே விரிவாக முன்னரும் எழுதியிருக்கிறேன். அதாவது ஜார்ஜ் குட்டி ஒரு கேரள கிறித்தவர். அவர்கள் மலையோர விவசாயிகள். அந்த மனநிலை வேறு. அவர்கள் கொஞ்சம் கடினமானவர்கள். போராளிகள்.

 

சுயம்புலிங்கம் ஒரு நாடார். வணிகர். ஆகவே நயமானவர். கூடவே உணர்ச்சிகரமானவர். நல்லவர். அப்பாவியும்கூட. ஜார்ஜ்குட்டிக்கு ஒரு உறுதி உண்டு . குற்றவுணர்ச்சி இல்லை. சுயம்புலிங்கம் குற்றவுணர்ச்சியால் அழுபவர். முதல் காட்சியில் இருவரும் தோன்றும்போதே அந்த வேறுபாடு வெளிப்படுகிறது. ஜார்ஜ் குட்டி ஒரு வன்முறைக்காட்சியை நுட்பமாக பார்க்கிறார். சுயம்புலிங்கம் பாவமன்னிப்பு பார்த்து கண்ணீர்விடுகிறார்

 

ஆனால் தமிழில் இரு கதாபாத்திரங்களையும் ஒப்பிட்டு எவரும் பேசவில்லை. இவரைவிட அவர் அவரைவிட இவர் என்றே பேசினார்கள். கடைசியில் அதை எடுத்தவர்களே வந்து அமர்ந்து விளக்கவேண்டியிருக்கிறது

 

ஜெ

பாபநாசம் 55 நாள்
 பாபநாசம் வெற்றி
பாப
பாபநாசம்
நாசம் சிலகுறிப்புகள்
பாபநாசம் – படப்பிடிப்பின் முடிவில்

 

 

முந்தைய கட்டுரைடோரா
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-9