விஷ்ணுபுரம் சிங்கப்பூர் கிளையிலிருந்து ஒரு கடிதம்

IMG_0621

ஜெமோ,

நேற்று என் கனவுல நயந்தாரா வந்திருந்தார் ….

விஸ்ணுபுரம் விழாவிற்கு அவர்தான் சீஃப் கெஸ்ட். அவரை அழைத்து வரும் பணி எனக்கு கொடுக்கப்பட்டிருந்தது :-)

நயந்தாராவின் விழா உரை ரொம்ப நல்லா இருந்துச்சு, ஜெமோ.

“உங்களுக்கு முன் இந்த மேடையில் இன்ஃபிரியராக ஃபீல் பண்ணுவதை போல் இதற்க்கு முன்எந்த மேடையிலும் நான் இவ்வளவு இன்ஃபிரியராக ஃபீல் பண்ணியதேயில்லை” என்பதுதான் அவர் உரையின் தொடக்கமாகவே இருந்துச்சு.

“பின்தொடரும் நிழலின் குரல்” என்பதை புத்தகத்திற்க்கு உருவகபடுத்திபேசியதும், இந்த உலகம் மனிதர்களால் அல்ல, புத்தகங்களால் மட்டுமே ஆளப்படுகிறது, இந்த புத்தகங்களின் கைபாவையாக இருப்பது மட்டுமே மனிதனின் பெருமையாக இருக்கிறது என்றும் சொன்னது ரொம்ப இம்ப்ரசிவ் ஆக இருந்தது. இந்த புத்தகங்களுக்கு தங்களுக்கென ஒரு திட்டம் இருக்கிறது, அவை தங்களுக்குள் ரகசியமாக உரையாடி இவ்வுலகை ஆள்கின்றன என்றும் சொன்னார். அவை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தது. நான் அவர் உங்கள் மகாபாரதக் கதைகளை படித்திருப்பார் என்று நினைத்துக் கொண்டேன்.

என்னுடைய குழப்பம், ஆக்சுவலா என்னுடைய ஃபேவரைட் ஆன சார்மிதானே என் கனவில் வந்திருக்க வேண்டும், ஏன் நயன்தாரா வந்தார்?

உண்மைதான், இலக்கியம் என்பது ஒரு கராறான செயல்பாடு, நமக்கு பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள், வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற எந்த பாகுபாடும் இலக்கிய செயல்பாடுகளுக்கு இல்லைதான் போல … :-)

சரவணன் விவேகானந்தன்

***

அன்புள்ள சரவணன் விவேகானந்தன்

நயனதாரைக்கு வயது ஆகிவிட்டது. அந்தக்காலத்தில் லோகிததாஸின் ஆல்பத்தில் அம்மையார் சான்ஸ் தேடி அனுப்பிய படத்தைப்பார்த்த ஞாபகம். அதாவது கால்நூற்றாண்டுக்கு முன்பு.

அரங்கசாமி மாதிரி இளைஞர்கள் கேதரைன் தெரஸாவையே கொஞ்சம் வயசாயிடுச்சு, இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லும் காலகட்டம் இது

ஜெ

***

பிகு

புரஃபைல் படத்தின் ஃபோட்டோஷாப் வேலை சிறப்பு. நீங்களே செய்ததா?

***

 

முந்தைய கட்டுரைதிருப்பூர், கொற்றவை- கடிதம்
அடுத்த கட்டுரைநான் எண்ணும் பொழுது…