அனல் காற்று , சினிமா- கடிதம்

 

true

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

அனல் காற்று மனதிற்கு நெருக்கமான வாசிப்பாய் அமைந்தது. அம்மா மனைவி நான் என்னும் சதுரங்க ஆட்டத்தை, கொஞ்சமேனும் விலகி நின்றுப் பார்க்க உதவியது. ஆழ் மனதின் விசித்திரங்களை நீங்கள் தொட்டு சென்றிருக்கும் இடம் நுட்பமானவை – இந்த நேரத்தில் இதைச் சொன்னால் விஷயம் இன்னும் பெரிதாகும் என்று தெரிந்தே சில நேரங்களில் நான் உளறுவதன் விசித்திரம்? இப்ப என்ன தான் வேண்டும்? என்று களைத்து சில நேரங்களின் நிம்மதியான உறக்கம் – தடபுடலாய் சென்று கொண்டிருக்கிறது என் வாழ்க்கை. குழந்தைகளின் அமர்க்களம் கூட சேர்ந்து ஆஹா என்ன ஒரு அதிரடி சரவெடி காட்சிகள் குடும்ப வாழ்வில் –

ஜோ வை போல எளிமையாக்கி அமைதியாய் இருத்தலே நலம் – அதற்கு நம்முள் இருக்கும் துறவியை நாம் வளர்க்க வேண்டும் – குழந்தையையும் ஆண்மகனையும் ஒன்றும் செய்ய முடியாது – அவர்கள் இருவரும் பெண்கள் பிடியில் பத்திரமாய் இருப்பார்கள் வெடிகுண்டை வைத்து கால்பந்து விளையாடும் அவர்களிடம் நாம் என்ன செய்து விட முடியும்?

அனைத்திற்கும் நான் என்னும் அகந்தை ஆடும் ஆட்டமும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி கரைந்தால் பல நேரங்களில் நிம்மதியும் எல்லாரும் உன்ன ஏமாத்தறாங்க என்ற உள்ளுணர்வின் எச்சரிக்கை மணியும் – இந்த நாவலை வாசிப்பது அற்புதமான ஒரு தயார் நிலையை ஏற்படுத்துகிறது

தங்கள் விருப்பம் போல் விரைவில் இந்நாவலை ஒரு திரைப்படமாக காண ஆவல்

அன்புடன்

மணிகண்டன்

***

அன்புள்ள மணிகண்டன்,

இன்றைய சூழலில் அனல்காற்றை சினிமாவாக எடுக்க முடியாது. பரபரப்பான நிகழ்ச்சிகள் இல்லாமல் இன்று சினிமா எடுக்கப்பட்டால் அரைமணிநேரம் மட்டுமே படம் பார்த்துவிட்டு சமூகவலைத் தளப்போராளிகள் கிழித்துத் தோரணம் கட்டிவிடுவார்கள். அவர்களுக்குரியதையே அவர்களுக்கு அளிக்கவேண்டும்.

ஜெ

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–73
அடுத்த கட்டுரைகால்கள், பாதைகள்