பறக்கையில்…

sankar

அன்பின் ஜெயம்

நான் தங்களுக்கு எழுதும் இரண்டாவது கடிதம். நான் இதுவரை மூன்று முறை தங்களை சந்தித்து இருக்கிறேன்., திருநெல்வேலி, இராஜபாளையம், பறக்கை, ஒவ்வொரு சந்திப்புமே வாழ்கையில் மறக்கமுடியாத சந்திப்புகள். இராஜபாளையத்தில் தங்கள் உரை கேட்க வந்தது. தங்களுடன் உரையாடியது. சுந்தரவடிவேலன், இசக்கி போன்ற வாசகா்களை சந்தித்தது என்றும் நினைவில் இருக்கும்.

சுந்தரவடிவேலனின் வெண்முரசு வாசிப்புமுறை ஆச்சாியம். நானும் இதுபோல் தான் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டேன். இராஜபாளையத்திலிருந்து நீங்கள் நாகா்கோவில் செல்லும் போது தங்கள் காாிலேயே என்னை அழைத்து வந்து கயத்தாாில் தாங்களும் இறங்கி என்னை வழியனுப்பியது என்னாளும் மறவேன்.

பறக்கை சந்திப்புக்கு வரும்போது தாங்கள் வாசகா்கள் கேள்விக்கு பதில் அளித்துக்கொண்டு இருந்தீா்கள். சோழா் கால கட்டிடகலை பற்றி, தஞ்சைகோவில், கங்கைகொண்டசோழபுரம், தாராசுரம் கோவில்கள் பற்றி. மேலும் அறிவியலுக்கும், தொழில்நுட்பத்திற்கும் உள்ள வேறுபாடு. அறிவியல் இல்லாமல் தொழில்நுட்பத்தில் மட்டும் சிறந்து விளக்கும் கிழக்கு ஆசியா நாடுகளான சிங்கப்புா், ஜப்பான், கொாியா. அந்நாடுகளில் தற்போதைய கல்வி முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள். ஜப்பான் வீழ்ச்சி. தாங்கள் சிங்கப்பூல் பணியாற்றிய அனுபவம்.

எமொ்சன் மற்றும் தோரா மெய்யியல் பற்றிய பதில்கள். அசோகமித்திரன் ”மாற்றம்” சிறுகதை, தேவசகாயகுமாா் அய்யா விளக்கிய தலித் இலக்கியங்கள். தாங்கள் பெண்ணியல் இலக்கியவாதிகளை குறிப்பிட்டது. தாங்கள் பகடியாக எழுதிய கட்டுரைகளுக்கு வந்த எதிா்வினைகள், அந்த பகடியை உண்மையாக நம்பிவா்கள் பற்றி குறிப்பிட்டது. சீனாவின் பொருளாதார எழுச்சி காாில் பயணம் செய்யும் போது குறிப்பிட்டது எல்லாமே சிறப்பானது. சிலேட், படிகம் அமைப்பினா் மதியம் ஏற்பாடு செய்திருந்த உணவு நாஞ்சில் நாட்டுக்குாிய சுவை. நீங்கள் அளித்த புத்தகங்கள் என்றும் என் பொக்கிஷமாக இருக்கும்.

மாலை அசோகமித்திரன் நினைவுஞ்சலி நிகழ்ச்சில் நிறைவாக வாசகா்களின் இறுக்கத்தை நீக்கி இயல்பாக மாறுவதற்கு நகைச்சுவையாக உரையாற்றினீா்கள்.

நன்றி

சங்கா் (கயத்தாா்)

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–70
அடுத்த கட்டுரைதளம் – கடிதங்கள்