தேவதேவன் -தக்காளி

devadevan

வணக்கம்.

நமது வீட்டில் தானாக முளைத்து எழுந்த செடியில் இன்று பறித்த தக்காளி அம்மா கையில் இருக்கிறது. அம்மா ஆஸ்பத்திரி போய் வந்தாள் இன்று. பார்க்கணும் என்று தங்கையிடம் படமெடுத்து அனுப்பக் கேட்டேன். அவள் இந்த படத்தை அனுப்பி “அம்மா கைல என்னன்னு சொல்லு பாப்போம்” என்றாள். நான் “நம்மூட்டு தக்காளி” என்றேன். அவள், “தேவதேவன் தக்காளி” என்று சொன்னாள். ‘கவிதைவெளி’ ஞாபகம் வந்ததுவிட்டது. எல்லாரிடமும் அதைப் பகிர்ந்துகொண்டேன். ஜெ. ‘எல்லாம் எவ்வளவு அருமை’ இல்லையா? அம்மாவின் அந்த படத்தை பெரிதாக சுவர் நிறைக்க மாட்ட வேண்டும். எனக்கு நிறைய தேவதேவன் கவிதைகள் ஞாபகம் வருகின்றன. இந்த இரவு முழுக்க அவ்வளவு தான். நேற்று முன்தினம் தேவதேவனை இரண்டாவது முறையாக சந்தித்தேன். நூறு சொற்கள் பேசியிருப்போம் இருவரும். அதிகம் லௌகீகம். உதிர்சருகின் முழுமை வாசித்துக்காட்டினேன். லால் பார்க்கில் அமர்ந்திருந்தோம். “நிறைய ஆர்ட்டிஸ்டுகள் இங்கே வருவார்கள். அவங்களுக்கு ஏற்ற இடம் இதுதான். நீயும் இங்கே வந்து படிக்கலாம். நானும் அப்படித்தானே. நான் எழுதுறது எல்லாம் இப்படி உட்கார்ந்து பார்த்துட்டு இருக்கிறது தானே” என்றார். நேற்று தங்கை சொன்னாள். ‘காவியம்’ கவிதை.

நன்றி.

சீனிவாச கோபாலன்

 

காவியம்

எட்டுத் திக்குகளும் மதர்த்தெழுந்து

கைகட்டி நிற்க

எந்த ஓர் அற்புத விளக்கை

நான் தீண்டிவிட்டேன்?

 

கைகட்டி நிற்கும் இப்பூதத்தை ஏவிக்

காவியமொன்று பெற்றுக் கொள்வதெளிது

ஆனால் திக்குகளதிரத் தாண்டவமாடும் மூர்த்தீ

நான் எதற்காகக் காத்திருக்கிறேன்

amma

அன்புள்ள சீனிவாச கோபாலன்

காய்கறிகளில் நான் முயல் என டி பி ராஜீவனின் ஒரு அழகிய கவிதை உண்டு. அது நினைவுக்கு வந்தது

ஜெ

06lr_rajeevan_jpg_380595e
ராஜீவன்

 

காய்கறிகளில் முயல்

தக்காளி கேட்டது

இன்றைக்கு என்ன குழம்பு?

சாம்பாரா அவியலா ஓலனா?

ஆடு கோழி

அயிலை சாளை

ஆகியவற்றுடன் இணைந்து

நாங்கள் இன்று

நெடுக்காகப் பிளக்கவேண்டுமா

துண்டுதுண்டாகவேண்டுமா

கத்தி

பலகையிடம்

ரகசியப்புன்னகையுடன் பேசுவதை

கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்

மேஜைமேல்
பாத்திரங்கள் அவசரப்படுவதையும்

வாணலியில்
எண்ணை துள்ளிக்குதிப்பதையும்

பார்த்துக்கொண்டிருக்கிறோம்
எங்களுக்குத்தெரியும்
இந்தச் சின்ன வெங்காயத்தை

சமையலறையில்
எவரும் சும்மா வெட்டிக்குவிப்பதில்லை

சிரிக்கும் பற்கள்தான்

கடித்துக் கிழித்து மெல்பவை

கருணைக்கிழங்கு அரிக்கும்

பாகற்காய் கசக்கும்

மிளகாய் எரியும்

பலாவுக்கு முள் உண்டு

வாழைக்காயில் கறை.

நாங்கள்

எப்போதும்

அக்கணம் பிறந்தவர்களைப்போல இருப்போம்

காய்கறிகளில்

முயல்!

neruda
நெருதா

 

பிறிதொரு கவிதை. பாப்லோ நெரூதா.   பதாகை இணைய இத்ழ்

தக்காளி போற்றுதும்

பாப்லோ நெரூதா

தமிழில்: செந்தில்நாதன்

 

 

 

முந்தைய கட்டுரைஐரோம் ஷர்மிளா -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவரம்பெற்றாள்