மின்நெடுஞ்சாலையில் புத்தர்

wed

 

அன்புள்ள ஜெ

 

நெடுஞ்சாலை புத்தரின் நூறுமுகங்கள் என்ற நூலின் பிடிஎஃப் வடிவை இணையத்தில் பார்த்தேன். அதை வலைனேற்றம் செய்தது நீங்களா? [முக்கியமான நூல். ஒரே மணிநேரத்தில் வாசித்தேன். பல வரிகள் மனதிலேயே வாழ்கின்றன]

 

சுந்தர்

 

 

அன்புள்ள சுந்தர்,

 

நான் வலையேற்றம் செய்யவில்லை. அந்நூல் வெளிவந்து பலகாலமாகிறது. கவிதைகள் உடனுக்குடன் மறுபதிப்பு வருவதில்லை. நான் மலையாளக்கவிதைகளின் 3 தொகுதிகள் வெளியுட்டுள்ளேன். தற்கால மலையாளக் கவிதைகள், இன்றைய மலையாளக்கவிதைகள், நெடுஞ்சாலை புத்தரின் நூறுமுகங்கள். அவை எவையும் அச்சில் இல்லை.

 

அச்சில் இல்லாத நூல் இணையத்தில் கிடைப்பது நல்லதுதான். அதில் ஆர்வமுள்ள சிலராவது வாசிக்கலாமே. என் கோரிக்கைப்படிதான் நீலகண்டபறவையைத்தேடி, அக்னிநதி போன்ற அச்சில் கிடைக்காதிருந்த அரிய நூல்கள் நண்பர்களால் பிடிஎஃப் வடிவில் வலையேற்றம் செய்யப்பட்டன.

 

ஆனால் அச்சில்கிடைக்கும் நூல்களை அனுமதியில்லாமல் வலையேற்றம் செய்வது குற்றம். அது ஏற்கனவே நலிந்துகொண்டிருக்கும் தமிழ்ப்பதிப்பியக்கத்தை அழிக்கும் செயல். அதிலுள்ளது இலக்கியத்திற்கு எதிரான ஒரு பாமர வன்மம். அதை நுண்ணுணர்வுள்ளோர் ஆதரிக்கக்கூடாது

 

என் நூல்கள் பெரும்பாலானவை மின்னூல்களாக கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன. விலை மிகக்குறைவு. எளிதில் வசதியாக வாசிக்கலாம். பிடிஎஃப் வடிவின் சிக்கல்களும் இல்லை

 

ஜெ

 

நெடுஞ்சாலை புத்தரின் நூறுமுகங்கள்

முந்தைய கட்டுரைசின்னஞ்சிறு அதிசயம்!
அடுத்த கட்டுரைமிகச்சரியாக உளறுதல்