புதியவாசகர் சந்திப்பு ஈரோடு

images
நண்பர்களே,

 

வருகிற பிப்ரவரி 18,19 ஈரோடு புதிய வாசகர் சந்திப்புக்கு 20 பேர் வரை தான் எதிர்பார்த்தோம், இட வசதியும் அவ்வளவே. கடந்த ஆண்டை  போலவே இம்முறையும் கூடுதல் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

 

முதலில் பதிவு செய்தவர், ஈரோடு அருகில் வசிப்பவர் போல சில அம்சங்களை கருத்தில் கொண்டு இதில் 20 பேரை தேர்வு செய்துள்ளோம். அவர்களுக்கு தனி மடல் வரும். தனி மடல் கிடைக்கப் பெறாதவர்ககளான மீதம் உள்ள வாசகர்களை கருத்தில் கொண்டு  வருகிற மார்ச் 11,12 ஆகிய தேதிகளில் தஞ்சை, வல்லத்தில் உள்ள சுவாமி விவேகானந்தா கலை & அறிவியல் கல்லூரியில் இரண்டாவது புதிய வாசகர் சந்திப்பை நடத்த உள்ளோம். அதற்கான முறையான அறிவிப்பு பிப். 20 வாக்கில் வரும்.

 

புதியவர்களை ஈரோட்டுக்கு மகிழ்ச்சியுடன் அழைக்கிறோம்.

 

கிருஷ்ணன்,

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.

 

[பிகு]

 

சென்ற புதியவாசகர் சந்திப்பில் ஈரோடு, கோவையில் இருந்து இருவர் வருவதாகச் சொல்லிவிட்டு முறையாக தெரிவிக்காமல் வராமலிருந்தனர். அவர்கள் இம்முறையும் பதிவுசெய்திருந்தனர். அவர்கள் பதிவுசெய்யவேண்டியதில்லை. அவர்கள் விஷ்ணுபுரம் சந்திப்புகள் எதிலும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது பொழுதுபோக்கு நிகழ்வு அல்ல. இலக்கியத்தை வாழ்க்கையின் முக்கியமான செயல்பாடாக நினைப்பவர்கள் மட்டும் பங்குகொள்வதற்கானது. ஜெயின் நேரம் மதிப்பு மிக்கது

முந்தைய கட்டுரைஜல்லிக்கட்டு -காந்திய நோக்கில்
அடுத்த கட்டுரைமாமங்கலையின் மலை – 1