மதுரையில் பேசுகிறேன்

images

 

சங்கக் கவிதைகளை மறுவாசிப்பு செய்யும் கருத்தரங்கு

2017 ஜனவரி 23 & 24

சங்கக் கவிதைகளைப் பண்பாட்டுப் பிரதிகளாகப் பாவித்து பொருள் கொள்வதில் சில அனுகூலங்களும் சில ஆபத்துகளும் இருக்கின்றன. ஒரு காலகட்டத்தில் உருவான இலக்கியப் பிரதிகளை அடிப்படையாகக் கொண்டு, அக்காலச் சமூகப் பண்பாட்டுச் சூழலை மீட்டுருவாக்கம் செய்வதற்கு இலக்கிய இனவரைவியல் போன்ற முறையியல்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட முன்னுதாரணங்கள் நம்மிடம் உள்ளன.

சங்கக் கவிதைகளை மறுவாசிப்பு செய்வதன் மூலம், அவை எழுதப்பட்ட காலகட்டத்தின் சிந்தனையோட்டங்களையும், அக்காலகட்டத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களையும், அம்மாற்றங்களைத் தோற்றுவித்த காரணிகளையும் நம்மால் சரியாகக் கணிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அந்த வகையில் சங்கக் கவிதைகள் சித்தரிக்கும் காலகட்டமானது, புதிய பண்பாட்டுக் கூறுகளின் அறிமுகம் (திருமணம்…), புதிய உணவு உற்பத்தி முறையின் மேலாண்மை (விளைவித்தல்…), புதிய அரசியல் அமைப்பின் எழுச்சி (அரசு, நாடு…), புதிய வாணிப முறைகளின் பரிச்சயம் (உள் நாட்டு, கடல் கடந்த வணிகங்கள்), புதிய அழகியலின் வருகை (கவிதை…), புதிய மொழிவடிவின் ஊடாட்டம் (எழுத்து), புதிய வாழிடங்களின் உருவாக்கம் (ஊர், பேரூர்…) என்று பல்வேறு புதிய ஒழுங்குகளுக்கு ஆட்பட்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.

இக்கவிதைகளில், புதிய அல்லது நவீன என்ற பொருள் தரும் ‘யாணர்’ என்ற சொல்லின் பயன்பாடும், அதனையொத்த உச்சரிப்பை உடைய ‘அமணர்’, ‘யவனர்’ என்ற சொற்களின் அர்த்தமும், தமிழக நிலவுடைமைச் சமூக ஒழுங்கமைப்பு வேளாண்மையால் மட்டுமல்லாது முதலாளித்துவ சாயல் கொண்ட வணிகத்தாலும் கட்டப்பட்டிருக்கிறது என்பதையே நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

பேராச்சரியமாக, இத்தகைய ஒட்டுமொத்த சமூக மாற்றத்தின் ஒரு பகுதி விளைவான கவிதையே தான் இக்காலகட்ட மாற்றங்களை வெளிப்படுத்தும் ஊடகமாகவும் இருக்கிறது.

Dr. T. Dharmaraj
Head and Chairperson
Department of Folklore and Culture Studies
School of Performing Arts
Madurai Kamaraj University
Madurai – 625 021.
சங்கக் கவிதைகளில் ஒழுங்கும் ஒழுங்கின்மையும்

கருத்தரங்கம் – 23,24, ஜனவரி 2017.

இடம்: சந்தானம் அரங்கு, நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறை

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

தொடக்க விழா

23.01.2017, திங்கள் கிழமை

முற்பகல் – 10.00 – 1.00 மணி

 

தலைமை முனைவர் டி. தருமராஜ்

கருத்தரங்க தொடக்க உரை எழுத்தாளர் ஜெயமோகன்

கருத்தரங்க மைய உரைமுனைவர் இ. முத்தையா

 

மதிய உணவு 1.00 – 2.00

அமர்வு – 1 – பிற்பகல் 2.00 – 3.30 மணி

 கருத்துரையாளர்: முனைவர். பக்தவத்சலபாரதி

தேநீர் இடைவேளை – 3.30 – 4.00

 அமர்வு – 2 பிற்பகல் 4.00 – 5.30 மணி

 ஒருங்கிணைப்பாளர்: முனைவர் டி. கோபிநாத்

கருத்துரையாளர்கள்: முனைவர். பாரதி

 முனைவர். அ. கலையரசி

 ரா. ராதிகா

24.1.2017, செவ்வாய் கிழமை

அமர்வு – 3 முற்பகல் 10.00 – 11.15 மணி

கருத்துரையாளர்: முனைவர் ந. முருகேச பாண்டியன்

தேநீர் இடைவேளை 11.15 – 11.45

அமர்வு – 4 முற்பகல் 11.15 – 1.00 மணி

ஒருங்கிணைப்பாளர். முனைவர். பாரதி

கருத்துரையாளர்கள்: முனைவர். அரிபாபு

கோ. சுபா காந்தி

மதிய உணவு – 1.00 – 2.00

அமர்வு – 5 பிற்பகல் 2.00 – 3.00 மணி

கருத்துரையாளர்: கவிஞர் சக்தி ஜோதி

தேநீர் இடைவேளை – 3.00 – 3.30

அமர்வு – 6 பிற்பகல் 3.30 – 5.30

ஒருங்கிணைபாளர்: பேரா. சி. ஜஸ்டின்செல்வராஜ்

கருத்துரையாளர்கள்: பேரா. பெ.க.பெரியசாமி ராஜா

 முனைவர் ஹமீம் முஸ்தபா

 முனைவர் கந்தசுப்பிரமணியன்

முந்தைய கட்டுரைவானதி -அஞ்சலிகள்
அடுத்த கட்டுரைகுறளுரை -கடிதங்கள்-2