விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 21 -ராஜா

je(1)

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களை பற்றியும் உங்கள் படைப்புகள் பற்றியும் நன்கறிந்தாலும் உங்கள் இணையதளத்துக்குள் மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்துக்குள் நான் சமீபத்தில்தான் நுழைந்தேன். விஷ்ணுபுரம் விருது விழா அழைப்பிதழ் கண்டு ஒரு வித தயக்கத்துடன்தான் கோவை வந்தேன். வந்தவுடன்தான் அறிந்தேன் ‘சோற்றுக்கடன்’ என்பது ஒரு சிறுகதை மட்டுமல்ல என்று. கெத்தேல் சாஹிப் உயிருடன்தான் இருக்கிறார் என்று. பசிக்கு மட்டுமல்ல, செவிக்கும், சிந்தைக்கும், வயிற்றுக்கும் விஷ்ணுபுரம் வட்டம் கெத்தேல் சாஹிப் கரம் போன்று உணவை அள்ளி அள்ளி தந்து திணறடித்து விட்டனர். ஒரு டிஜிட்டல் உண்டியலை நிரந்தரமாக வைத்து விடுங்கள். உங்கள் படைப்புகளால் பயனடைந்தவர்களும், இன்றைய மாணவர்கள் நாளை சம்பாதித்து அந்த உண்டியலை நிரப்பிக்கொண்டே இருப்பார்கள். அறம் செழிக்கட்டும்.

விஷ்ணுபுரம் இலக்கிய அமர்வுகள் அனைத்துமே சிறப்பு. அமர்வுகளின் நடுநடுவே, வாசலில், வெராண்டாவில், மாடி படிக்கட்டுகளில், அதிகாலை டீக்கடையில், காத்திருந்த வரிசைகளில் என்று நீங்கள் நின்றுகொண்டே நிகழ்த்திய குறு அமர்வுகள் படு சுவாரசியம். ஒரு கல்ட் தத்துவமாகி, பின் அந்த தத்துவம் மதமாவதை அழகாய் விவரித்தீர்கள். போகிற போக்கில் காஷ்மீர சைவத்தையும் கடலூர் சைவத்தையும் இணைத்து நீங்கள் சொன்ன தகவல்கள் அனைத்தும் பிரமிக்க வைத்தன. தூரத்தில் இருந்து கொண்டு உங்களுடன் கடிதத்தில் உரையாட முடிகிறது. ஆனால் அருகில் வந்தும் உங்களை நெருங்கி பேச முடியவில்லை. எப்போதும் நீங்கள் நின்ற இடத்தை சுற்றிலும் மலரை மொய்க்கும் வண்டுகளாய் வாசகர்கள். ஒரு கட்டத்துக்கு மேல் உங்களை புகைப்படம் எடுக்க ஆரம்பித்துவிட்டேன். நான் உங்களை எடுத்த புகைப்படம் ஒன்றை இணைத்துள்ளேன்.

விஷ்ணுபுரம் வட்டத்தின் முன்னோடிகள் புதியவர்களை அன்புடன் அரவணைத்தார்கள். மீனாம்பிகை, செந்தில், விடாக்கொண்டன் கொடாக்கண்டன், மற்றும் பலர் பம்பரமாக சுழன்று வேலை செய்தார்கள். விஷ்ணுபுரம் வட்டத்தை பற்றி மற்றும் உங்கள் இணையதளத்தை பற்றி கடலூர் சீனு நன்றாக விளக்கினார். செல்வேந்திரன், ராஜகோபாலன், ராம்குமார், அரங்கா போன்றோரின் ஆளுமை மலைக்க வைத்தது. பேருந்தில் வந்தவர்கள், ரயிலில் வந்தவர்கள், விமானத்தில் வந்தவர்கள், ஆண்கள், பெண்கள், மாணவர்கள், முன்னோடிகள், கிராமம், நகரம், தமிழிலக்கியம், பிற மொழி இலக்கியம் என்று பல தரப்பட்ட மனித மனங்களின் சங்கமமாய் இந்த விழா திகழ்ந்தது. டார்மெட்ரியில் சிறு சிறு குழுவாய் நடந்த விவாதங்கள் அனைத்தும் அருமை. பலரது நட்பு கிடைத்து, அவர்களுடன் வாட்ஸப் மூலம் இணைந்து இலக்கிய பரிவர்த்தனை இன்றும் தொடர்கிறது.

இரண்டாம் நாள் காலை அமர்வில், வண்ணதாசன் அவர்களின் நெகிழ்ச்சியான உரை விழாவின் உச்சமான கணங்கள். நடுவில் வந்து உட்கார சொன்னதற்கு, ஒரு ஓரத்தில் இருந்து கொண்டே மையத்தையும் பிற அனைத்தையும் பார்க்க விரும்புவதாக கூறினார். உங்கள் கதவுகளை திறந்து வையுங்கள், அதன் வழியே நான் நுழைந்து வருகிறேன் என்றும் சொன்னார். தன்னை காண வந்த வாசகியை மட்டுமன்றி அவருடன் வந்த தோழியை நினைவு கூர்கிறார். சால்வை நழுவியபோது விருதுகள் கூட இப்படித்தான் நழுவி செல்கிறது என்று சட்டென சொன்ன நகைச்சுவை அபாரம். அன்று மாலை விழாவுக்கு வந்த வாசகர்களை மட்டுமன்றி, செல்வராஜ் போன்ற வராத வாசகர்களையும் அவர் சிலாகித்து பேசியது, ஒற்றைக்கண்ணால் உலகத்தை பார்க்காமல், வண்ணதாசன் எப்படி அனைத்தையும் முழுமையாக ஒட்டு மொத்தமாக பார்க்கிறார் என்று தெள்ளத்தெளிவாய் புரிந்தது

நீங்கள் சமீபத்தில் ஒரு சிறுகதையில் சொன்னது போல், ஃப்யூஜியாமா என்கிற மலையை நேரில் சென்று பார்க்காத வரை, ‘ஃப்யூஜியாமா’ என்பது ஒரு சொல் மட்டுமே. வண்ணதாசன் அவர்கள் காலை அமர்வில் சொன்னது போல், ஒரு மீனையோ, மீன்கொத்தியையோ பார்க்காத வரை, ‘நொடி நேர அரை வட்டம்’ என்பது ஒரு வரி மட்டுமே. விஷ்ணுபுரம் விழாவை நேரில் சென்று பார்க்காத வரை, அதை எழுத்துக்களால் காணொளிகளால் புரிந்து கொள்வதென்பது சிரமம் என்றே நினைக்கிறேன்.

விழா முடிந்து வீட்டுக்கு வந்த பின்பும், அலுவலக அல்லலுக்குள் நுழைந்த பிறகும், புது வருடம் பிறந்த பின்னும், “கனியான பின்பும் நுனியில் பூ” போன்று, விஷ்ணுபுரம் விழா நெஞ்சுக்குள் தேனாக ஒட்டிக்கொண்டு இனிக்கின்றது.

நன்றி.

அன்புடன்,

ராஜா,

***

முந்தைய பதிவுகள்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 1 விஷ்ணு

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 2

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 3 ராகேஷ்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 4 சுரேஷ் பிரதீப்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 5

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 6

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 7

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 8 யோகேஸ்வரர்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 9 சிவமணியன்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 10

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 11 குறைகள்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 12 சசிகுமார்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 13 ராஜீவ்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 14

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 15

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 16 தூயன்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 17

விஷ்ணுபுரம் விழாப்பதிவு-18

விஷ்ணுபுரம் விழாப்பதிவு-19 பேசப்பட்டவை கிருஷ்ணன்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 20

ஒருங்கிணைதலின் கொண்டாட்டம் ஜெயமோகன்

உரைகள்

இராமுருகன் உரை

சுப்ரபாரதிமணியன் உரை

காணொளிகள்

ஜெயமோகன் உரை

வண்ணதாசன் உரை

நாஸர் உரை

கு சிவராமன் உரை

பவா செல்லத்துரை உரை

இரா முருகன் உரை

எச் எஸ் சிவப்பிரகாஷ் உரை

புகைப்படங்கள்

புகைப்படங்கள் தங்கவேல் 1

புகைப்படங்கள் தங்கவேல் 2

புகைப்படங்கள் ஆனந்த் சீனிவாசன்

புகைப்படங்கள் கணேஷ்பெரியசாமி1

புகைப்படங்கள் கணேஷ்பெரியசாமி2

=============================================================

விஷ்ணுபுரம் விருதுகள்- கடந்தவை பதிவுகளின் தொகுப்பு

============================================================

விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு இதுவரை கட்டுரைகள்

வண்ணதாசன்- விலகும் திரை – ஏ வி மணிகண்டன்

வண்ணதாசன்- சுவையாகி வருவது ஜெயமோகன் 1

வண்ணதாசன்- சுவையாகி வருவது ஜெயமோகன் 2

வண்ணதாசன்- மனித முகங்கள் வளவதுரையன்

வண்ணதாசன்- கேந்திப்பூவின் மணம் ராஜகோபாலன்

வண்ணதாசன்- சாளரத்தில் குவியும் ஒளி சுனீல் கிருஷ்ணன்

வண்ணதாசன்- குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம் எம் ஏ சுசீலா

வண்ணதாசன்- வண்ணமும் மென்மையும் – சௌந்தர்

வண்ணதாசன்- சிவசக்தி நடனம் கடலூர் சீனு

==============================================================================

வண்ணதாசன் இணையதளம்

வண்ணதாசன் நூல்கள்

வண்ணதாசன் இணையப்பக்கம்

வண்ணதாசன் கதைகள்

வண்ணதாசன் கவிதைகள்

==============================================================================

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

வண்ணதாசன் கவிதைகள் பாடல்களாக

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 4

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 5

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 6

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 7

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 8

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 9

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 10

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 11

வண்ணதாசன்- மென்மையில் விழும்கீறல்கள்

சிறுகதைகள் நான் வண்ணதாசன் சரவணன்

வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா?

முந்தைய கட்டுரைஎன் கல்யாண்ஜி
அடுத்த கட்டுரைஅபிப்பிராயசிந்தாமணி