விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 17

 

அன்புள்ள ஜெ வுக்கு ,

23 டிசம்பர் பொழுது கழியவேயில்லை. எப்போது 24 பகல் விடியும் ஆதர்ச எழுத்தாளர்களை எப்படி சந்திக்கப்போகிறோம் என்ற பரபரப்புடனேயே பொழுது விடிந்தது. காலையில் முதல் நிகழ்விலேயே நாஞ்சில் அய்யாவின் கம்பனின் தமிழாடல்களையும் பாரதியின் யுகத்தமிழையும் அவர்தம் சொல்லால் காது நிறைத்தேன். பாரதிமணி அய்யாவின் அனுபவங்கள் இயல்பான அவர்தம் உரையாடலால் அரங்கு களைகட்டியது. நான் மது உண்டவனில்லை. அவரின் ராயல் ஸ்காட்ச் டச்சில்! அது உண்ட மயக்கம் கொண்டேன்.

இனி விழா நாயகரின் கலந்துரையாடல் . அவரின் எழுத்தைப்போலவே உரையும் இவ்வளவு சுகமான வருடலாய் தென்றலாய் என்னை தீண்டும் என எதிர்பார்க்கவில்லை. விழாநாள் முடிந்தும் இன்றுவரை அந்த பேச்சிப்பாறையின் மின்மினிப்பூச்சி கண்ணில்! ஒளி விட்டுவிட்டுத் தெறித்துக் கொண்டேயிருக்கிறது. பவா அவர்களின் உரையை அன்றுதான் முதன்முதலாய் கேட்டேன். தேன்கிணற்றில் அவரே என்னை தள்ளிவிட்டுவிட்டார். கவிஞர் தேவதேவனின் எளிமை மனதை என்னவோ செய்தது சொல்லத் தெரியவில்லை. ஆக மொத்தம் எவ்விருது விழாவைத் தவற விட்டாலும் விடுவேன். விஷ்ணுபுரம் விருது விழாவைத் தவற விடேன். நன்றி இந்த ஒரு சொல் போதாது மீண்டும் நன்றி

கண்ணன்,

கோவை

புகைப்படங்கள் எடுத்த கணேஷ் பெரியசாமி

 

ஜெ

செல்வேந்திரன் எடுத்த ஆவணப்படம் சிறப்பு. எழுத்தாளர்களின் ஆவணப்படங்களைப் பொருத்தவரை அவற்றை நாம் ஒருமுறை பார்த்துவிட்டால் அதன் பின்னர் அவற்றை எப்போதும் நினைப்போம். அந்த எழுத்தாளர் அவருடைய எழுத்துக்கள் வழியாக நமக்கு மிகவும் நெருக்கமாகத் தெரிந்தவராக இருப்பார். அவர் உடல்மொழி நமக்குத்தெரிந்ததும் காலகாலமாகப்பழகியவராக ஆகிவிடுவார். வண்ணதாசனின் சிரிப்பும் கைகளின் அசைவும் மறக்கவே முடியாதது

செந்தில்

 

அன்புள்ள ஜெமோ

இந்த விஷ்ணுபுரம் விருதுவிழா தான் நிகழ்ச்சிகள் அமைப்பு எல்லாவற்றிலும் டாப். ஒருகணம் கூடத் தொய்வில்லை. நீங்கள் எதிலும் பெரிதாகக் கலந்து கொள்ளவில்லை என்பது மட்டும்தான் குறை. மற்றபடி அதிகமாகப் பெண்கள் இல்லை என்பதையும் குறையாகச் சொல்லலாம். கூட்டங்கள் எல்லாமே சுருக்கமாக அடர்த்தியாக இருந்தன. தேவையில்லாத மாலைமரியாதைகள் வளவளப்புப் பேச்சுக்கள் இல்லை என்பதை பெரிய சிறப்பாகச் சொல்லவேண்டும். எழுத்தாளர்களை அவர்களின் உணர்ச்சிகளையும் நேரடியாகப்பார்ப்பது அவர்களின் எழுத்தை மிகநெருக்கமாக அறிவதற்கான வாய்ப்பு. சென்னையிலும் இதேபோல நிகழ்ச்சிகள் நடக்கவேண்டும். சென்னையில் வெறும் கூட்டங்கள்தான் நடக்கின்றன

நாராயண்

 

 

பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு..

விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா மிகச்சிறப்பாக நடந்து முடிந்திருப்பதை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறேன். விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் ஒரு புறம் இருந்தாலும் விழாவில் பங்குபெற்ற நண்பர்களின் பதிவுகளையும், விழா புகைப்படங்களையும் பின்தொடர்வதன் மூலம் மானசீகமாக நம் இலக்கிய விழாவில் பங்கெடுத்திருக்கும் திருப்தி கொண்டு மனஅமைதி கொள்கிறேன்.

எந்த பலனையும் துளியும் எதிர்பார்க்காமல் நாம் செய்ய விழைகின்ற செயல் மிகப்பெரும் வெற்றியை கட்டாயம் அடையும் என்பது தான் இவ்வுலக தர்மம். விவேகானந்தரின் வலிமையான எண்ணத்தில் உதித்த ராமகிருஷ்ணா மிஷனின் ஆன்மீக தொண்டு போல, ஜெயமோகனின் வலிமையான எண்ணத்தில் உதித்த “விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்” -ன் இலக்கிய தொண்டும் வருங்காலத்தில் பெரும்புகழ் பெற்று, தாங்கள் எண்ணியதை விடவும் இலக்கியத்திற்கு அதிகமாக தொண்டாற்றும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

விழாவில் வண்ணதாசன் வாசகர் எஸ். செல்வராஜ் அவர்களின் கடிதம் வாசிக்கப்பட்டதாகவும், வண்ணதாசன் செல்வராஜை காண விரும்புவதாக மேடையில் நெகிழ்ந்திருப்பதை கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

 

நான் தமிழ் இலக்கிய உலகிற்கு ஜெயமோகன் மூலம் தான் அறிமுகம் ஆகி இருக்கிறேன். இவ்வாண்டிற்கான விஸ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு அளிக்க விருப்பதாக ஜெயமோகன் தளத்தில் வெளிவந்த பின்புதான், வண்ணதாசன் பற்றி தெரிந்து கொண்டேன். அவரின் வாசகர் கடிதங்களை படித்த பின்பு தான் எப்பேர்ப்பட்ட இலக்கிய ஆளுமை வண்ணதாசன் என்பதை உணர்ந்து கொண்டேன். அவ்வழியிலே எஸ்.செல்வராஜ் -ன் வாசகர் கடிதம் மிகவும் கூரியது. அதை படித்து சிறு கண்ணீர் துளி இல்லாமல் யாரும் கடந்து போயிருக்க முடியாது என்று படுகிறது. செல்வராஜின் கடிதத்தை படித்தவுடன் வண்ணதாசன் மேல் ஓர் சொல்லெண்ணா ஈர்ப்பு ஏற்பட்டது உண்மை, அதன் எழுச்சி யில் வண்ணதாசனின் பல புத்தகங்களை வாங்கி வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

எஸ்,செல்வராஜ் அவர் கடிதத்தில் குறிப்பிட்டது போல “நாங்களெல்லாம் வறண்ட நிலத்தில் இருந்து வந்தவர்கள்….” என்ற கருத்தையே மையமாக வைத்து “சுவையாகி வருவது” என்ற தலைப்பில் வண்ணதாசன் பற்றி எழுதிருந்தீர்கள். அதை படித்தவுடன் செல்வராஜின் கடிதம் உங்களையும் பாதித்திருக்கிறது என்று உணர்ந்தேன். அக்கட்டுரை செல்வராஜின் உணர்வுகளுக்கு நீங்கள் அளித்த மரியாதையாகவே எனக்கு பட்டது.

 

இரண்டாவது, விழாவில் அவர் கடிதம் அவர் (தந்தை) வண்ணதாசன் முன்பாகவே படிக்கப்பட்டது.  இதன் மூலம் விஷ்ணுபுரம் வாசகர் வட்டமும், தாங்களும் வாசகர் செல்வராஜின் உணர்வுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளீர்கள் என்று எண்ணி பேருவகை கொண்டேன். வண்ணதாசன் இதை எப்படி அழுகாமல் எதிர்கொண்டிருப்பார் என்று எண்ணும்போதே  அழுகை வருகிறது.

தங்களுடைய இணைய பக்கத்தில் “இலக்கியம் வாழ்க்கைக்கு பயன் படுமா?” என்ற தலைப்பில் நடந்த விவாதத்தை எண்ணி கொள்கிறேன். ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் செல்வராஜ் மாதிரியான வாசகர்கள் கட்டாயம் இருப்பார்கள் என்று என் அகம் சொல்கிறது, அவர்கள் அனைவரையும் கருத்தில் கொண்டு இந்த விவாதத்தை தாங்கள் மறுபடியும் தொடங்க வேண்டும். இலக்கியத்தின் பயன் வாழ்க்கையின் சகல விஷயங்களிலும் வேரூன்றி நிற்கிறது என்பதை உணர்கிறேன்.

தன் கடிதத்தில் தனக்கு  வாழ கற்றுக்கொடுத்த தன் தந்தை வண்ணதாசனிடம் அறிமுகம் செய்து கொள்ளாமல், எஞ்சிய காலங்களிலும் அவர் நினைவுடனே வாழ்ந்து சாக விரும்புவதாக செல்வராஜ் எழுதி இருந்தார். தந்தையும் தன் மகனை பார்க்க விரும்புவதாக மேடையில் நெகிழ்திருக்கிறார். ஜெயமோகனின் வாசகர்களாகிய நாங்களும் அத்தந்தையும் மகனும் சந்திக்க போகும் அத்தருணத்திற்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறோம். நன்மையே விழைக…

இப்படிக்கு தங்கள் நலம் விரும்பும்

பாண்டியன் சதீஸ்குமார்

 

 

===================================

முந்தைய பதிவுகள்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 1 விஷ்ணு

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 2

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 3 ராகேஷ்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 4 சுரேஷ் பிரதீப்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 5

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 6

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 7

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 8 யோகேஸ்வரர்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 9 சிவமணியன்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 10 குறைகள்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 11 சசிகுமார்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 12

உரைகள்

இராமுருகன் உரை

சுப்ரபாரதிமணியன் உரை

காணொளிகள்

ஜெயமோகன் உரை

வண்ணதாசன் உரை

நாஸர் உரை

கு சிவராமன் உரை

பவா செல்லத்துரை உரை

இரா முருகன் உரை

எச் எஸ் சிவப்பிரகாஷ் உரை

புகைப்படங்கள்

புகைப்படங்கள் தங்கவேல் 1

புகைப்படங்கள் தங்கவேல் 2

புகைப்படங்கள் ஆனந்த் சீனிவாசன்

புகைப்படங்கள் கணேஷ்பெரியசாமி1

புகைப்படங்கள் கணேஷ்பெரியசாமி2

=============================================================

விஷ்ணுபுரம் விருதுகள்- கடந்தவை பதிவுகளின் தொகுப்பு

============================================================

விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு இதுவரை கட்டுரைகள்

விலகும் திரை – ஏ வி மணிகண்டன்

சுவையாகி வருவது ஜெயமோகன் 1

சுவையாகி வருவது ஜெயமோகன் 2

மனித முகங்கள் வளவதுரையன்

வண்ணதாசன் கேந்திப்பூவின் மணம் ராஜகோபாலன்

வண்ணதாசன்- சாளரத்தில் குவியும் ஒளி சுனீல் கிருஷ்ணன்

வண்ணதாசன் குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம் எம் ஏ சுசீலா

வண்ணதாசன் -வண்ணமும் மென்மையும் – சௌந்தர்

வண்ணதாசன்- சிவசக்தி நடனம், கடலூர் சீனு

==============================================================================

வண்ணதாசன் இணையதளம்

வண்ணதாசன் நூல்கள்

வண்ணதாசன் இணையப்பக்கம்

வண்ணதாசன் கதைகள்

வண்ணதாசன் கவிதைகள்

==============================================================================

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

வண்ணதாசன் கவிதைகள் பாடல்களாக

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 4

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 5

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 6

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 7

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 8

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 9

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 10

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 11

 மென்மையில் விழும்கீறல்கள்

சிறுகதைகள் நான் வண்ணதாசன் சரவணன்

வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா?

 

 

 

 

 

 

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா உரை காணொளிகள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா, ஒருங்கிணைதலின் கொண்டாட்டம்