விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -7

uuu

அன்புள்ள ஜெ

 

மிகச்சிறப்பான விழா அதற்குமேல் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு விஷயமும் கச்சிதமாகப் பார்த்துப்பார்த்து செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்கான வேலைகள் கொடுக்கப்பட்டிருந்தன. விருந்தினரை உபசரித்துக்கூட்டிவர ஒரு குழு சென்றுகொண்டே இருந்தது. இன்னொரு குழு உள்ளூர வேலைகளைச் செய்துகொண்டே இருந்தது. அங்கே சாப்பாடு விஷயங்களைக் கவனித்துக்கொண்டவர் விஜயன் சூரியன் என்பவர். அவர்தான் முதல்பாராட்டுக்குரியவர். அவர்தான் இத்தனை கூட்டத்தையும் சாப்பிடவைத்தவர். அவர் செய்தபணி பெரியது. ஏனென்றால் நினைத்ததைவிட பலமடங்குக்கூட்டம் வந்துகொண்டே இருந்தது. அற்புதமான நிகழ்ச்சி

 

 

சிவக்குமார்

நாஸர் ,வண்ணதாசன், இயககோ சுப்ரமணியம்

 

வணக்கம்.

சீரான திட்டமிடலில் தொடங்குகிறது இலக்கியப் பயணம். பலவேறுப்பட்ட ஆளுமைகளை சந்திக்கவும் உரையாடவுமான வாய்ப்பு.. இலக்கிய வயப்பட்ட பேச்சு.. சிரிப்பு.. உரையாடல்.. உறவாடல்.. எல்லாமே புத்தம்புது சூழலுக்குள். அனைவரிடமும் வெகு எளிமையாக பழகும் தங்களின்  இயல்பு.. விழாவை அர்த்தப்படுத்தும் அத்தனை நிகழ்வுகளும் வழுக்கி சென்று விழாவில் விழ.. இலக்கிய உலகம் தங்களுக்கு நிறைய கடமைப்பட்டுள்ளது. (நான் தவறவிட்டவைகளை தகவல்களாகவும்.. புகைப்படங்கள் மூலமாகவும் அறிந்துக் கொண்டேன்.)

அன்புடன்
கலைச்செல்வி.

அன்புள்ள ஜெயமோகன்

வணக்கம்.

நேற்றைய நிகழ்ச்சி வாழ்விலே மறக்கமுடியாத ஒரு பேரனுபவமாக பதிந்துவிட்டது. எத்தனை எத்தனை வாசகர்கள். பார்த்துப்பார்த்து மனம் பூரித்தபடி இருந்தேன். மலரைத்தேடி வரும் தேனீக்களென எழுத்தை விரும்பி, எழுத்தை நுகர, எழுத்துக்கு அருகில் வட்டமிட, எழுத்தை நோக்க, எழுத்தில் அமர என எத்தனை எத்தனை உள்ளங்கள். வண்ணதாசனுடைய ஐம்பத்து சொச்ச ஆண்டு கால உழைப்பின் பலனாகவே அதைக் காண்கிறேன். அவருக்கு அணுக்கமான உள்ளங்களை ஒன்றிணைத்து அவருக்கே சுட்டிக் காட்டும் தருணமாகவும் அமைந்துவிட்டது. உங்களுக்கும் அமைப்பினர் அனைவருக்கும் தமிழ் இலக்கிய உலகம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது. உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்

பாவண்ணன்

அன்புள்ள ஜெ

 

 

 

விஷ்ணுபுரம் விழா அற்புதமான அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு கணமும் வாழ்ந்த நாட்கள் அவை. சென்றவருடம் வரவேண்டுமென நினைத்தேன். ஏதோ ஒரு சோம்பலால் வராமலிருந்தேன். ஏன் வரவில்லை என்று எண்ணி எண்ணிச் சோர்வு அடைந்தேன். ஏன் வரவில்லை என்றால் இந்தமாதிரி விழாக்களில் இருக்கும் சம்பிரதாயமான பேச்சுக்கள் அர்த்தமில்லாத உபச்சாரங்கள் எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை என்பதனால்தான். இந்த விழா தான் நான் உண்மையில் ஒரு விழா எப்படி இருக்கவெண்டும் நினைக்கிறோமோ அப்படி இருந்த விழா

 

 

 

முதல் விஷயம் யாரும் யாரையும் அர்த்தமில்லாமல் பாராட்டிக்கொண்டிருக்கவில்லை. மிகப்பெரிய படைப்பாளிகளை அறிமுகம் செய்யும்போதுகூட அவர்கள் என்ன எழுதினார்கள் என்பதை மட்டுமே தொகுப்பாளர்கள் சுருக்கமாக முன்வைத்தார்கள். முன்னுரை வழங்கி தொகுப்புரை செய்தவர்கள் அர்த்தமில்லாமல் வளவளவென்று பேசுவது நம் கூட்டங்கள் எல்லாவற்றிலும் இருக்கும் சாபக்கேடு அந்த விஷயம் நிகழவே இல்லை. இரண்டாவதாக கேள்விகேட்கிறோம் என்று மைக்கை வாங்கும் அற்பங்கள் பேசிப்பேசிக் கழுத்தறுப்பார்கள். அவர்களுக்கு பேசவும் தெரிந்திருக்காது. பேச விசயமும் இருக்காது. ஆனால் அமைப்பாளர்கள் அவர்களைக் கட்டுபப்டுத்த முடியாது. அந்த வகையறாக்கள் அறவே இல்லை. சம்பந்தமில்லாமல் மேடை ஏறிப் பேச ஆரம்பிப்பவர்களும் இல்லை. இதெல்லாம் மிகப்பெரிய சாதனைகள்.

 

 

 

பேசிய அத்தனைபேருமே மிகத்திறமையாகப்பேசினார்கள். பவா செல்லத்துரை, நாஞ்சில்நாடன் இருவரும் பேசியது உச்சகட்ட பேச்சு. எனக்கு எச் எஸ் சிவப்பிரகாஷ் ஆங்கிலத்தில் பேசியதுமுழுமையாகப்புரியவில்லை. ஆனால் நல்ல பேச்சு என்று சொன்னார்கள். முக்கியமாக நீங்கள் எங்குமே தென்படவில்லை. உங்களைப்பற்றிய பேச்சே இந்த விழாவிலே இல்லை. அதுதான் மிக ஆச்சரியமாக இருந்தது

 

 

 

செல்வக்குமார்

 

எழுத்தாளர் தூயன் வண்ணதாசனுடன் [தூயனின் முதற்சிறுகதைத் தொகுதி வெளியாகியுள்ளது]

அன்புள்ள ஜெயமோகன்,

 

விஷ்ணுபுரம் விருது விழாவுக்கு வாழ்த்துகள். என் பிரிய எழுத்தாளருக்கு எனும்போது மனம் முழுதும் மகிழ்ச்சி. வாழ்வின் சிறிய விஷயங்களில்கூட மகிழ்வடையும் மனதும் அதை பிறர்க்கு சுவைபட கடத்தும் கலையும் வண்ணதாசனுக்கே வாய்த்த ஒரு அதிசயம்.

 

எப்போதும் போல் அவர் நினைவு வரும்போதும் மனதில் தோன்றும் வரி “கனியான பின்பும் நுனியில் பூ”. தினமும் காணக்கிடைக்கும், அண்டை வீட்டு வாசலில் பழுக்கும் அதே மாதுளை தான். ஆனால் அதையே இவ்வளவு சுவையாக கூற அவரால் தான் ஆகிறது.  கடையில் வாங்கும் போதும் நல்ல பழங்களை அவருக்கு தேர்ந்து கொடுத்தவர் தன பெரிய விழிகளுடைய மகளுடன் நிற்கிறாரா என்று அவ்வவ்போது தேடுவேன். விகடனில் வெளியான இந்த ஒரு சிறுகதையே அவருடனான என் அனுக்கதிற்கு போதுமானதாக இருக்கிறது.

 

2014 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அக்கதை பிரசுரமான தொகுப்பில் அது இடம்பெற்றிருந்த பக்கத்தில் கையெழுத்து கேட்டேன். காரணம் கேட்டால் என் மகளைப் பற்றி சொல்ல எண்ணியிருந்தேன். கண்களும் சேர்ந்து சிரிக்கும் ஒரு புன்னகையுடன் “உங்களுக்கும் மகள் இருக்காளா தம்பி?” என்றார். வேறென்ன சொல்வது, “ஆமா சார், அவளும் வளர்ந்தபின் தினகரி மாதிரி என் கையைப் பிடிச்சுக்கற மாதிரி வாழ்ந்துட்டேன்னா போதும் சார்” என்றேன்.  எழுந்து என்னை அவர் அனைத்துக் கொண்ட இதம் இன்றும் நினைவில் உறைந்து போயிருக்கிறது. அவர் தகுதிக்கும் என் வயதிற்கும் அவர் அவ்வாறு செய்ய வேண்டுமா என்ன? ஆம், அதுதான் அவர்.

 

என் பிரிய எழுத்தாளருக்கு வணக்கங்களும் முத்தங்களும். உங்களுக்கு நன்றி.

 

என்றென்றும் அன்புடன்,

மூர்த்திஜி

பெங்களூரு

 

===================================

முந்தைய பதிவுகள்

 

விஷ்ணுபுரம் விழாப்பதிவு1 விஷ்ணு

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 2

விஷ்ணுபுரம் விழாப்பதிவு3 ராகேஷ்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு4 சுரேஷ் பிரதீப்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 5

விஷ்ணுபுரம் விழாப்பதிவு6

விஷ்ணுபுரம் விழாப்பதிவு7

விஷ்ணுபுரம் விழாப்பதிவு8 யோகேஸ்வரர்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 9 சிவமணியன்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 10 குறைகள்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு11 சசிகுமார்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 12

உரைகள்

இராமுருகன் உரை

சுப்ரபாரதிமணியன் உரை

 

காணொளிகள்

ஜெயமோகன் உரை

வண்ணதாசன் உரை

நாஸர் உரை

கு சிவராமன் உரை

பவா செல்லத்துரை உரை

இரா முருகன் உரை

எச் எஸ் சிவப்பிரகாஷ் உரை

 

 

புகைப்படங்கள்

 

புகைப்படங்கள் தங்கவேல் 1

புகைப்படங்கள் தங்கவேல் 2

 

புகைப்படங்கள் ஆனந்த் சீனிவாசன்

 

புகைப்படங்கள் கணேஷ்பெரியசாமி1

புகைப்படங்கள் கணேஷ்பெரியசாமி2

 

 

=============================================================

 

விஷ்ணுபுரம் விருதுகள்- கடந்தவை பதிவுகளின் தொகுப்பு

 

============================================================

 

விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு இதுவரை கட்டுரைகள்

விலகும் திரை – ஏ வி மணிகண்டன்

சுவையாகி வருவது ஜெயமோகன் 1

சுவையாகி வருவது ஜெயமோகன் 2

மனித முகங்கள் வளவதுரையன்

வண்ணதாசன் கேந்திப்பூவின் மணம் ராஜகோபாலன்

 

வண்ணதாசன்- சாளரத்தில் குவியும் ஒளி சுனீல் கிருஷ்ணன்

 

வண்ணதாசன்  குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம் எம் ஏ சுசீலா

 

வண்ணதாசன் -வண்ணமும் மென்மையும் – சௌந்தர்

 

வண்ணதாசன் – சிவசக்தி நடனம் கடலூர் சீனு

 

==============================================================================

 

வண்ணதாசன் இணையதளம்

வண்ணதாசன் நூல்கள்

வண்ணதாசன் இணையப்பக்கம்

வண்ணதாசன் கதைகள்

வண்ணதாசன் கவிதைகள்

==============================================================================

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

வண்ணதாசன் கவிதைகள் பாடல்களாக

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3

வண்ணதாசன் கடிதங்கள் 4

வண்ணதாசன் கடிதங்கள் 5

வண்ணதாசன் கடிதங்கள் 6

வண்ணதாசன் கடிதங்கள் 7

வண்ணதாசன் கடிதங்கள் 8

வண்ணதாசன் கடிதங்கள் 9

வண்ணதாசன் கடிதங்கள் 10

வண்ணதாசன் கடிதங்கள் 11

 மென்மையில் விழும்கீறல்கள்

சிறுகதைகள் நான் வண்ணதாசன் சரவணன்

வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா?

 

 

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள்- 6
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிப்பதிவு -1