வண்ணதாசனுக்குச் சாகித்ய அகாடமி

1

 

2016 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மிகத்தாமதமாக அளிக்கப்பட்ட விருது இது. தமிழின் ஒரு குறிப்பிட்ட எழுத்துமுறையின் முன்னோடி, தமிழிலக்கியத்தின் சாதனையாளர்களில் ஒருவர் வண்ணதாசன். இலக்கியத்தில் அவருடைய இடம் என்பது மறுசொல்லில்லாமல் வாசகர்களாலும் விமர்சகர்களாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. பல்லாண்டுக்காலமாக அவருடைய பெயர் சாகித்ய அக்காதமி விருதுக்குப் பரிசீலிக்கப்பட்டும் விருது மறுக்கப்பட்டுவந்தது.

இம்முறை விருது அவருக்கு வழங்கப்படுவதற்கு வாசகச்சூழலில் உருவாகி வந்த அழுத்தமே முதன்மையான காரணம். குறிப்பாக வாசகர்களின் எண்ணத்தை முதன்மைப்படுத்திய தமிழ் ஹிந்து நாளிதழ். ஆக இது தமிழ் வாசகர்களின் வெற்றி. அவர்களுக்குரிய எழுத்தாளருக்கு அவர்கள் விருதை அளித்திருக்கிறாகள். வண்ணதாசனுக்கு வாழ்த்துக்கள்

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுகள் -கடந்தவை
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 64