எச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள்-2

HS_Shivaprakash

 

இத்தருணங்கள் அழியாமல்

இருக்க வேண்டும்….

 

அழியாமல் இருக்க வேண்டும்

இத்தருணங்கள்

குன்றின் உச்சியில்

மைல் நீளஇறக்கைபோல் மேகமிருந்தாலும்

சிலைபோல இருக்கும் பாறைகள்

நீலம் பச்சை நடுவில்

ஜோடி வானவில்கள்

ஜோடிக் குருவிகளே

வானைத் துளைத்து பாடிப்பறங்கள்

பறவை மொழியைக் கற்ற சாலமன்

இப்போது சக்ரவர்த்தி

அழியாமல் இருக்கட்டும் இத்தருணங்கள்

தாளமற்ற ஆட்டம்

மேளமற்ற பாட்டு

துடிக்கும் இதயம் சொல்கிறது

குன்றுக்கு காத்துள்ளது பிளக்கும் வெடிகள்

மேகத்துக்கு மின்னல் கத்தி

ஜோடி வானவில்களுக்கு மழையின் தாக்குதல்

வாட்டமறியாத வளத்தவறே

ஜோடிக்குருவிக் கூட்டங்களே

வானம் நோக்கித் தாவுங்கள்

தரையில் எங்கும் பரவுங்கள்

காற்றைப் போல

காலம் நிறம் கண்கள் இறகு

பொதிந்த காற்றைப் போல

அழியாமல் இருக்க வேண்டும்

தாளமற்ற ஆட்டம்

மேளமற்ற பாட்டு

ஒவ்வொரு நொடியும்

 

interview_shivaprakash

நீ இல்லையென்றால்

  1. எனக்குத் தெரியும்

    இத்தோட்டத்துப் பூக்கள் மலர்வது

    நீ இல்லையென்று நிற்பதில்லை

     

    ஒன்றன்பின் ஒன்றாக வண்ணத்துப் பூச்சிகள்

    கணநேரம் பூக்களில் அமர்ந்து பறப்பதும்

    நிற்பதில்லை

    நீ இல்லையென்று

     

    எனக்குத் தெரியும்

    சந்தைக்குப் போகும் இத்தோட்டத்துப்பூக்கள்

    நீ உள்ளாய் என மறுப்பதும் இல்லை

    அல்லது

    சாவென்னும் பூனை

    வண்ணத்துப் பூச்சிகளை

    தின்னவருவதும் தடைபடுவதில்லை

    நீ உள்ளாய் என.

     

    இதற்கு பின்னும்

    காற்றுக்கு நறுமனம் கொடுக்கும் பூக்கள்

    என் உயிராவதில்லை

    வெளிச்சத்தில் சிதறிய பூவின் வர்ணம்

    என் விழிகளை கவர்வதுமில்லை

    சந்தைக்கே கிட்டாத ஒரு பூ

    இவ்வுலகத்தில் எஞ்சுவதுமில்லை

     

    இவை எல்லாவற்றிற்கும்

    நீ இல்லையென்றால் அர்த்தமே இல்லை.

     

 index

    1. நினைவு

    முதலிரவுக்கு முன்பு ஐந்து ரோஜாக்களைப்

    பறித்துச் சூடியது நினைவிலுள்ளதா

    முதல் தழுவலில் உருகிய இன்பம்

    கூந்தல் கருமைபோல் கரைந்தது

    இப்பொழுது தலையை நிரைக்கும் நரை

    கணவன் இறந்த தினம்

    அழிந்தது குங்குமச் சந்திரன்

    அதற்கப்புறம் பற்பல முறைகள்

    வானத்தில் சந்திரன் வந்ததும் போனதும்

    உலர்ந்த நெற்றிக்கோ குங்குமத்தின் நினைவில்லை

    இறங்கி சரிந்த நரைமுடி போல

    சிற்சில சமயங்களில் அதிகாலைப் பனி

    அதிகாலைப் பனிபோல தெளிவற்ற நினைவு

    மறதியோ காலக் கொம்பு.

    ****

    தமிழில் : பாவண்ணன்

    மதுரைக்காண்டம்

    எச் எஸ் சிவப்பிரகாஷ்

    எஸ் எஸ் சிவப்பிரகாஷின் மதுரைக்காண்டம்

    எச் எஸ் சிவ்பப்பிரகாஷ் கவிதைகள்

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 58
அடுத்த கட்டுரைகன்யாகுமரி கடிதங்கள்