சிறுகதைகள் கடிதங்கள் 19

images (2)ஜெ,

சிறுகதை விவாதம் முழுக்க திரும்பத் திரும்ப எழுத்தாளர்களின் படங்களை வெளியிட்டிருப்பதைப் பார்த்தேன். படங்களை ஏன் அப்படி தேடித்தேடி வெளியிடவேண்டும் என்று புரியவில்லை. அதன் அவசியம் என்ன?

ராஜேஷ்

*

அன்புள்ள ராஜேஷ்

இன்றைய சூழலில் எழுத்தாளர்களை நினைவில் வைத்துக்கொள்வதுதான் வாசகர்களுக்குச் சிரமமானது. புகைப்படமும் இருந்தால், அதை அடிக்கடிப்பார்த்தால் அது எளிது.

ஒருமுகம் நம்முடன் பேசுகிறது என்பது ஒரு எழுத்தாளனின் ஆளுமையை நம்முள் வகுத்துக்கொள்ள முக்கியமானது. முதன்மையான எல்லா எழுத்தாளர்களுக்கும் முகங்கள் மனதில் இருக்கும்.

அப்படி ஓர் எழுத்தாளனாக ஒருவரை உருவகித்தால்தான் கதைகள் நடுவே ஒரு தொடர்ச்சியை நீங்கள் உருவகிக்க முடியும்

ஜெயமோகன்

IMG_1206

அன்புள்ள ஜெ

நீண்ட சிறுகதைவிவாதம் ஒன்று இங்கே நடந்தது. இதனால் எவராவது சிறுகதை எழுதக் கற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறீர்களா? பயிற்சிகொடுத்து எழுதவைக்கமுடியுமா?\

ஜெயராமன்

*

அன்புள்ள ஜெயராமன்

கலைஞனை உருவாக்கமுடியாது. ஆனால் கதை என்னும் வடிவின் அடிப்படைகளைக் கற்பிக்கமுடியும். சிங்கப்பூரில் நான் ஒருவரிகூட எழுதாத 20 பேரை கதை எழுதப் பயிற்றுவித்தேன். அவர்களில் 10 பேர் நல்ல கதைகளை எழுதினார்கள்

ஜெ

download (1)

அன்புள்ள ஜெ

சிறுகதை விமர்சனங்களை வாசித்தேன். இலக்கியத்திற்கு இப்படி கறாரான இலக்கணமெல்லாம் சொல்லலாமா? இது ஒரு சந்தேகம்தான்

செல்வா

*

அன்புள்ள செல்வா

இது ஒரு குறைந்தபட்ச எதிர்பார்ப்பு. இவ்விலக்கணங்களை மீறிச்சென்று படைப்பூக்கம் தன்னை நிறுவினால் அது மேலான படைப்பே

இலக்கணமோ வடிவம் சம்பந்தமான நியதிகளோ படைப்பாளி மேலே செல்வதைத் தடுத்தால்தான் அது பிழை

ஜெ

***

ஜெ

இந்தச் சிறுகதை விவாதத்தில் அனோஜன், சுனீல் கிருஷ்ணன், கலைச்செல்வி ஆகியோர் கதையின் வடிவத்தை பயிற்சி செய்தால் மிகநல்ல கதைகளை எழுதமுடியுமென நினைக்கிறேன். இப்போது அவர்களின் கதைகள் நன்றாக உள்ளன. மேலும் நன்றாகச் செல்லலாம். அதாவது அனோஜனின் கதை அலைபாய்கிறது. கலைச்செல்வி கதையில் உரையாடல்கள் இயல்பாக இல்லை. சுனீல் கதை மையம்கொள்ளவில்லை

அவர்களுக்கு இந்தப்பயிற்சி பயன்படவேண்டும்

ஜெபா ராபின்சன்

=======================================================

சிறுகதைகள் என் பார்வை -1

சிறுகதைகள் என் பார்வை 2

சிறுகதைகள் என் பார்வை 3

சிறுகதைகள் என் பார்வை 4

சிறுகதைகள் என் பார்வை 5

சிறுகதைகள் என் பார்வை 6

==============================================================================

சில சிறுகதைகள் 6 அனோஜன் பாலகிருஷ்ணன் கலைச்செல்வி சதீஷ்குமார்

சில சிறுகதைகள் 5 மோனிகா மாறன், தருணாதித்தன்

சில சிறுகதைகள் 4 – தூயன், மகேந்திரன், கே ஜே சோக் குமார்

சில சிறுகதைகள் 3 மாதவன் இளங்கோ சிவா கிருஷ்ணமூர்த்தி

சில சிறுகதைகள் 2 காளிப்பிரசாத் சுனீல் கிருஷ்ணன்

சில சிறுகதைகள் 1 – ராம் செந்தில் உதயன் சித்தாந்தன்

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதை விமர்சனம் 4

சிறுகதை விமர்சனம் 5

சிறுகதை விமர்சனம் 6

சிறுகதை விமர்சனம் 7

சிறுகதை விமர்சனம் 8

சிறுகதை விமர்சனம் 9

சிறுகதை விமர்சனம் 10

சிறுகதை விமர்சனம் 11

சிறுகதை விமர்சனம் 12

சிறுகதை விமர்சனம் 13

சிறுகதை விமர்சனம் 14

சிறுகதை விமர்சனம் 15

சிறுகதை விமர்சனம் 16

 

 

 

முந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 44
அடுத்த கட்டுரைவசைகளின் நடுவே…